02 டிசம்பர் 2017

பாம்பாட்டியாரின் புரட்சி வரிகள்!

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி
ஆடாய் பாம்பே! (09)
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே! (65)
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே. (88)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ?
அஞ்ஞானம் போகாது மூடர்க்கு என்று ஆடாய்பாம்பே! (92)
சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதவிதமான தான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே!
(98)
பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ?
பூமிவலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாமென்று துணிந்து ஆடாய் பாம்பே! (100)
- பாம்பாட்டியார்
(எளிய தமிழில் அமைந்துள்ள இப்பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டோருக்கு நன்றி!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக