
தேவேந்திர
குல வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள், தங்களது
அரசியலுக்காக ஒருபுறம் மன்னர் பரம்பரை என்று சொல்வதும், மறுபுறம் அரசியல்
சமூக எதிரிகளை எதிர்க்க திராணியில்லாமல் PCR வழக்குகள் மூலம் தங்களை தலித்
-தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதும் கடந்த சில வருடங்களாக
அதிகமாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, பறையர்களை எங்களோடு ஒப்பீடு
செய்யாதீர்கள் என்றும், எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை
என்றும், நாங்கள் மன்னர் பரம்பரை என்றும் சொல்லிக்கொண்டு, செந்தில் மள்ளர்
எழுதிய பள்ளர் வரலாற்று(?) நூலான மீண்டெழும் பாண்டியர் வரலாறில், பறையர் இன
மக்களை மிகவும் கீழ்த்தரமாக பாலியல் தொழில் சார்ந்து விமர்சனம் வைத்து
தங்களது கோர முகத்தை வெளியுலகுக்கு காட்டினர். இதுபோன்ற அவதூறுகளை
உள்ளடக்கிய அந்த நூல், பல தரபட்ட மக்களின் எதிர்ப்பால் நீதிமன்றத்தின்
வாயிலாகவே தடை செய்யப்பட்டது என்பது வேறொரு கதை. இங்கே சாதியை வைத்து
இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி போன்றவர்கள்,
தமிழ்சாதிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பல சதி வேலைகளில்
இறங்கி கொண்டே இருக்கின்றனர் என்பதையும் நடுநிலையாளர்கள் தொடர்ச்சியாக
கவனித்து கொண்டே வருகின்றனர்.
”கொம்பன்” என்ற பெயருக்கு தேவர் என்று
பெயர் என்பது போலவும், கொம்பன் வெளிவந்தால் தென் தமிழகத்தில் சாதி கலவரம்
ஏற்படும் என்பது போலவும் அறிக்கை விட்டு இழிவானதொரு அரசியல் செய்யும்
கிருஷ்ணசாமி, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான மீத்தேன், நியூட்ரினோ,
கெயில், மேகதாது அணை போன்ற பலவித பிரச்சனைக்கெல்லாம் சட்டமன்றத்தில் கவன
ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வக்கில்லாமல், சினிமாவுக்காக
சட்டமன்றத்தில் ரகளை செய்ததை நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. பதினோறு
வருடங்களுக்கு முன்பாக ஏற்கனவே கமலின் ’சண்டியர்’ படத்தின் போது, சண்டியர்
என்பது தேவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது என்றும் போராட்டம் செய்ததால்,
சினிமா தொழிலில் முதலீடு செய்தவர்களையும், அந்த தொழிலை நம்பியுள்ள
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் மனதிற்கொண்டு, கமல் அந்த படத்தின்
டைட்டிலை 'விருமாண்டி'யாக மாற்றி வெளியிட்டார். மீண்டும் அதே பெயரில்
'சண்டியர்' என்ற படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அதுவும் தேவர்
சாதி மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் படமாகவே உருவாகியிருந்தது. ஆனால்,
அதை எதிர்க்க இந்த சினிமா போராளி கிருஷ்ணசாமி வரவில்லை. ஏனென்றால்,
படத்தில் பணியாற்றிய அனைவரும் புதுமுகம். அதனால், அந்த படத்தை எதிர்த்து
எந்தவித லாபமும் கிருஷ்ணசாமிக்கு வரபோவதில்லை. அதனால் அந்த 'சண்டியர்'
திரைப்படமானது எவ்வித எதிர்ப்புமின்றி வந்தது. கடந்த வருடங்களில்
குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், சண்டியர், மதயானை கூட்டம் என தொடர்ச்சியாக
முக்குலத்து மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் வெளிவந்தன. அப்போது
கிருஷ்ணசாமி போன்றோர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்புமில்லை. ஏனெனில்
அப்போது சட்டமன்ற தேர்தலும் நெருங்கவில்லை. ஆனால், இப்போது சட்டமன்ற
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது மக்கள் பிரச்சனைகளை இளைஞர்களே
கையில் எடுத்து போராடி வருவதால், போரட்ட கவனமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு
கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. அதனால் மீண்டும், ஒரு பிரபல
ஹீரோவின் படத்தை எதிர்த்தால் தான் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும்
கூட்டணி பேரத்தில் ஓரிரு சீட்டுகள் கூடுதலாக வாங்க முடியும் என்பதால்,
கொம்பனை எதிர்க்கிறார் இந்த கிருஷ்ணசாமி.
இங்கே குழப்பம்
என்னவென்றால், தலித் சாதிக்கட்சி தலைவரான கிருஷ்ணசாமியால் இன்றைக்கு
கடுமையாக எதிர்க்கப்படும் ’”கொம்பன்” திரைப்படத்தில் நடித்திருக்கும்
கதைநாயகனான கார்த்தியின் நடிப்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக
வெளியான ”மெட்ராஸ்” திரைப்படத்தை ஏன் எதிர்க்கவில்லை? இந்த கொம்பன்,
சண்டியர் என்ற பெயரெல்லாம் படத்திற்கு தலைப்பாக வைக்க கூடாது. அது தேவர்
சாதியின் குறியீடுயென்று முறையிடுவது ஏனென்று தான் இன்னமும் புரியவில்லை.
ஒரு பக்கம் மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கொண்டே, மறுபக்கம் சாதி பெயரை
சொல்லி திட்டிவிட்டதாக பிசிஆர் கேஸ்ல தலித்திய தாழ்த்தப்பட்டவர்களாக
மாறிவிடுவது தான் ஆண்டபரம்பரைக்கான அடையாளங்களா? மாற்றம் என்பது
மாறுதலுக்குரியது தான். முக்குலத்தோரும் மாற்றமடைந்து வருகிறார்கள்.
அவர்களிடம் மீண்டுமொரு முதுகளத்தூர் கலவரத்தை எதிர்பார்க்க கூடாது. ஏனெனில்
இப்போது காமராஜரும் இல்லை; அவரின் காங்கிரஸ் ஆட்சி இங்கில்லை.
சென்ற வாரம் நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு நேயர்களின் கேள்விகளுக்கு நேரடியாக
பதிலளித்த திருமாவளவன், நிகழ்ச்சியின் இறுதியில் என்னுடைய
கேள்வியொன்றுக்கும் இப்படித்தான் பதிலளித்தார். அந்த கேள்வி என்னவென்றால்,
”தென் தமிழகத்தில் பள்ளர் சாதியினர் தங்களை தேவேந்திர குலம் என சொல்லி
கொள்வதையும், அவர்கள் தங்களை தலித் இல்லையென்று சொல்லிக்கொள்வதையும் எப்படி
பார்க்கின்றீர்கள்?” என்பது தான். அந்த கேள்விக்கு, ”விளிம்பு நிலை
சமூகம், மேலே வருவதற்காக எந்த மாதிரியான சொல்லாடல் பயன்படுத்தினாலும் அது
தவறில்லை” என்று திருமாவளவன் பதிலளித்திருந்தார். இந்த நேர்மையை
பாராட்டும் வேளையில் தான், ஒரு சந்தேகமும் எழுகிறது. விளிம்புநிலை சமூகம்
என்பதாக பள்ளர்களை, பறையர்களோடு திருமாவளவன் ஒப்பிட்டு சொல்வதாக
எடுத்துக்கொண்டால், பள்ளர்களோ நாங்கள் வேறு; பறையர் வேறு. நாங்கள்
ஆண்டபரம்பரை, அவர்கள் அடிமை. என்று வெளிப்படையாக பல ஊர்களில் மேடை போட்டு
பேசி வருகிறார்களே. அதையெல்லாம் இனியாவது புரிந்து கொண்டு இந்த தலித்
நாடகங்களை நிறுத்திவிட்டு, தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்
என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.
அது போக, பறையர் சாதி
அரசியலுக்குள் நடக்கும் உண்மை நிலையை மெட்ராஸ் படத்தின் மூலமாக திரைக்குள்
கொண்டு வந்த இயக்குனர் ரஞ்சித்தை விடவா, கொம்பன் இட இயக்குனரான முத்தையா
தவறுதலாக சொல்லிவிட போகிறார்? மெட்ராஸ் படத்தில் வன்னியர்களை கொடியின்
நிறத்தின் மூலமாக எத்தனை இடங்களில் மறைமுகமாக தாக்கியுள்ளனர் என்பது
திருமாவளவனுக்கு தெரியாதா என்ன? நீல நிறத்தை மட்டுமே உயர்வாக தூக்கிபிடித்த
மெட்ராஸ் கார்த்தி, இந்த படத்தில் கொம்பன் கார்த்தியாக மஞ்சள் பச்சையை
தூக்கி பிடித்திருந்தாலும் அது தப்பில்லை என்பதும் இந்த திருமாவளவனுக்கு
புரியாதா என்ன? முதலில் பள்ளர்கள் உங்கள் மீது அவதூறை பரப்பி வருகிறார்கள்
என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்ய முயலுங்கள். அதை விட்டுவிட்டு
சினிமாவில் கிருஷ்ணசாமியோடு தலித் கூட்டணியை உருவாக்க முயன்றால், அதை
தங்களுக்கு சாதகமாக்கிவிட நினைக்க, முக்குலத்து சினிமா கலைஞர்கள் யாரும்
கலைஞர் கருணாநிதி இல்லை என்பதையும் சினிமா போராளிகள் புரிந்து கொள்ள
வேண்டும். திராணியிருந்தால், உங்கள் வாழ்வியலை பெருமையாக சொல்லி
படமாக்குங்கள். அதை விட்டுவிட்டு இப்படி தரக்குறைவான அரசியலை
சினிமாவுக்குள் திணிக்காதீர்கள். ஏனெனில் பல சாதி தொழிலாளர்கள் சினிமாவை
நம்பி வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.
ஆப்பநாடு அரசநாடாகி
போனாலும் 'கொம்பன்' மாபெரும் வெற்றியடைய போவது உறுதி. இவ்வேளையில் கொம்பன்
கதைக்களத்தை உருவாக்கிய மருது மைந்தன் இயக்குனர் முத்தையாவிற்கு எம்
வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்