கத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்டோபர் 2014

ஒரு சமூகத்தின் தலைக்கு மேலே கத்தி!

"ஐயாயிரம் கோடி கடன் வாங்கினவன், பணத்தை கட்ட முடியலைன்னு மீடியா முன்னாடி கையை விரிக்கிறானே தவிர தற்கொலை பண்ணிக்கல. அந்த கடனை கொடுத்த பேங்க் காரனும் தற்கொலை பண்ணிக்கல. ஆனால், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாத விவசாயி அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறான்” - இது கத்தி படத்தில் திரு.விஜய் பேசும் வசனம். அச்சு அசலாக இந்த வசனத்தை ரொம்ப நாளுக்கு முன்னாடியே திரு.சீமான் பல மேடைகளில் பேசி இருக்கார். ஆனால் கத்தி படத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரு ஏ.ஆர்.முருகதாஸ் பேருதான் வருது. எனக்கென்னமோ பல வசனங்களை திரு. சீமான் தான் எழுதி கொடுத்திருப்பாருன்னு தோணுது. அதுனால தான் லைக்கா பிரச்சனையில கத்திக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கலை போல.

”மக்களின் முதல்வர்" என்பதை போன மாசத்துல இருந்து கேள்வி பட்டிருப்பீங்க. ஆனால் "மக்களின் சூப்பர் ஸ்டார்" என்பதை இனிமே எப்போதும் கேட்பீங்கன்னு நினைக்கிறேன். எங்க ஊரு நாகப்பட்டினம் தியேட்டர் வாசல் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகளில் இப்படித்தான் இருந்துச்சு.
மக்களின் சூப்பர் ஸ்டார் விஜய் நடிக்கும் கத்தி!

கோலா கோலா என எல்லாரும் கொக்கரிப்பதை பார்க்கும் போது ஒரேவொரு சந்தேகம் தான் வருகின்றது. என்னமோ திரு. விஜய் சொல்லித்தான் இவர்களெல்லாம் பெப்சி/கோலா குடிக்கவே ஆரம்பித்தது போல அலப்பறை செய்கிறார்கள். அப்படியென்றால், இன்று அதே திரு.விஜய் தானே, விவசாயம் பார்க்க சொல்கிறார். அதை செய்ய முயற்சி செய்ய வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு, விஜய் விஜய் என ஏளனம் செய்வது நேர விரயம் தான். ஒரு காலத்தில் இதே திரு.ரஜினியை பைத்தியமென சொன்னதும் உங்களை போன்ற ஓரு கூட்டம் தான். ஆனால் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாக, அதே திரு.ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததும் உங்களை போன்ற ஒரு கூட்டம் தான். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை என்பது நேர் கோடு அல்ல. அது மிகப்பெரிய ஒரு வட்டம்! இங்கே ஏளனம் செய்யப்படுவையெல்லாம் எட்டமுடியா உயரத்தில் உச்சம் தொட்டு விட்டது என்பதே கடந்த கால வரலாறு.

கத்தி திரைப்படம் மூலம், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் - திருவாரூர் உள்ளிட்ட டெல்டாவிலுள்ள விவசாய நிலங்களில், மீத்தேன் வாயு எடுத்து காவிரி படுகையை பாலைவனமாக மாற்ற முயலும் அந்நிய பன்னாட்டு நிறுவனத்தின் சதியை, கடைகோடி பாமரனுக்கும் சென்றடைய வைத்துள்ள நடிகர் திரு. விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தினர் உள்பட அனைவரும் சமூக களத்திலும் போராட்ட குணத்தோடு கால் பதிப்பார்கள் என நம்புகிறேன். மீத்தேன் எதிர்ப்பு இளையோர் குழுவோடு இணைய தொடர்பு கொள்க.
Ganesa Moorthy : 9500796349 | Sabari Nivas : 9865713466


- இரா.ச.இமலாதித்தன்

கத்தி - விமர்சனம்

கத்தி, சமூக விழிப்புணர்வு படம். விவசாயத்தையும் - கிராமத்தையும் மையப்படுத்திய கதைக்களத்தில், முதல் பாதி மனதை கவரும் கமர்சியல் என்றாலும், இரண்டாம் பாதி மனதை சுடும் சோசியல். இது திரு.விஜய் படமாகவும், திரு.முருகதாஸ் படமாகவும் இருக்க இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றது. மேலும், துப்பாக்கி - தேசியத்தின் மீதான சாடல் என்று சொன்னால், கத்தி - தமிழகத்தின் சாடல் என்றே சொல்லலாம். படத்தின் பல இடங்களில் சோசியல் பஞ்ச் இருக்கு. கூடவே, எங்க ஊரு நாகப்பட்டினத்தையும் டெல்டாவையும் சொல்லி, மிக முக்கியமாக மீத்தேன் பிரச்சனையை சுட்டிக்காட்டி திரு.விஜய் பேட்டி கொடுக்கும் காட்சி நச்.

வெறும் தண்ணி தானே? அப்படின்னு நிருபர் கேட்கும் போது, 2ஜிங்கிறது வெறும் காத்து தான். அதுல பல லட்சம் கோடி ஊழல் பண்ணலைன்னா? பதில் கேள்வி கேட்பாரு திரு.விஜய். அது போலவே ஐயாயிரம் கோடி ஊழல்ன்னு அழுத்தம் திருத்தமாக எல்லா தரப்பு அரசியல் ஊழலையும் காட்டமாக பதிவு செய்திருக்கின்றது இந்த கத்தி.

மேலும், நீயா நானா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லுவையும், கூடவே செய்தி சேனல் - பத்திரிகைகளின் ஊடக விபச்சாரத்தையும் தோலுரித்து காட்டிருக்கும் விதம் அருமை. திரையரங்கினுள் பல வசனங்களுக்கு கைத்தட்டலும் விசில் சத்தமும் காதை கிழிக்கின்றது. படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள், விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயி மகனான எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. வைகை ஆற்றில் ஒரு நாளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தென் தமிழகத்தின் வறட்சிகளில் ஒரு காரணமாக இருந்து வரும் பெப்சி / கோலா கம்பெனி உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கோரமுகத்தை பதம் பார்த்திருக்கும் இந்த கத்தி, கண்டிப்பாக விஜயின் ஹிட் லிஸ்டில் இணைய போகின்றது. தாராளமாக பார்க்கலாம். கத்தி, நல்லாருக்கு.

- இரா.ச.இமலாதித்தன்

21 அக்டோபர் 2014

தமிழுணர்வால் பாதிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

லைக்கா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எந்த தமிழ் அமைப்புக்காவுது, பாரத ரத்னா விருதை ராஜபக்சேவிற்கு கொடுக்க சொல்லிருக்கும் சுப்ரமணியசுவாமியை எதிர்க்க திராணி இருக்கா? அப்படி எந்தவொரு அறிக்கையும் வந்தமாதிரி தெரியலை. பணம் போட்டு படத்தை வெளியிடுறவனை மிரட்டினால் அடி பணிவான்; நமக்கும் இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறெந்த சமூக அக்கறையும் இருந்த மாதிரி தெரியவில்லை. தமிழகமெங்கும் சிங்களவர்களின் நிறுவனங்கள் எக்கசக்கமாய் இருக்கின்றது. அதை எதிர்த்து மூட வக்கில்லை. இந்த லட்சணத்துல அம்மாவிற்கு நன்றின்னு வெட்கமே இல்லாமல், அறிக்கை விட்டு சமாதானம் ஆகுறதுக்கு பேரு தான் இவர்களின் தமிழுணர்வு. 

அதெப்படி, லைக்கா என்ற பெயர் இல்லாமல் படம் வெளி வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? எப்படி பார்த்தாலும், அந்த படத்தோட தயாரிப்பாளர் லைக்காவும் - ஐங்கரனும் தானே? அந்த படத்தின் லாப நஷ்டமும் இந்த இரு நிறுவனத்துக்கும் தானே? அப்பறம் எப்படிடா வெட்கமே இல்லாமல் நன்றின்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க? இனிமே தமிழ் தமிழுனர்வுன்னு எந்த போராட்டத்தை கையில் எடுக்காமல், நவ துவாரங்களையும் மூடிகிட்டு போங்கடா நொன்னைங்களா!

தந்தி - புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் இன்றைய (21.10.2014) சிறப்பு விவாதங்களும் தமிழ் அமைப்புகளின் கத்தி திரைப்பட எதிர்ப்பு தொடர்பாகவே இருந்தது. அங்கே நடத்தப்பட்ட இரு கருத்து கணிப்புகளிலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களின் பெரும்பான்மை கருத்தாக 'விஜய் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்பதாக தான் இருந்தது. எது எப்படியோ, 'இளைய தளபதி' திரு.விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற சக தமிழனாய் அடியேனின் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

14 அக்டோபர் 2014

தீபாவளிக்கு ரிலீஸ்? கத்தி!

’தமிழக வாழ்வுரிமை கட்சி’ என்ற பெயரில் லெட்டர்பேடு அமைப்பு வைத்திருக்கும் திரு தி.வேல்முருகனெல்லாம், ’கத்தி’ திரைப்படம் வெளியே வந்தால், ”திரையை கிழிப்போம்!, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!” என்றெல்லாம் வீராப்பு காட்டுற மாதிரியான நிலை தமிழ்நாட்டுக்கு வந்துடுச்சேன்னு நினைக்கும் போதுதான் காமெடி கலந்த கவலை வருது. எதார்த்தம் என்னன்னு பார்த்தால், 200 ரூபாய் கொடுத்து முதல்நாள் படம் பார்க்க வருகின்ற சாமானிய ரசிகன் முன்னாடி, ’திரையை கிழிப்பேன்!ன்’னு சொன்னாலேயே, அவன் இவிய்ங்க முகரக்கட்டையெல்லாம் கிழிச்சிட மாட்டானா? 200 ரூபாய்க்காக 5 வருட ஆட்சியையே அரசியல்வாதிக்கிட்ட தரும் சாமானியனிடம் வெற்று சவடால் விடும் ஆசாமிகளெல்லாம் இப்படி தியேட்டர் வாசலில் கிழிபட்டால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

- இரா.ச.இமலாதித்தன்