சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஆகஸ்ட் 2017

அரசியல் ஆளுமைகளை அகமுடையார் என்பதால் ஏற்கிறோமா?- sarahah



ஐயா தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ஆகட்டும், அண்ணன் ஜாம்பவனோடை கருப்பு முருகானந்தம் ஆகட்டும் டெல்டாவிலிருந்து அரசியல் களம் கண்டு, மிகப்பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் அவர்களது கட்சியில் பெற்றிருக்கின்றனர். டெல்டாவின் அரசியல் என்பதே கள்ளரான சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த போது, அங்கிருந்து மற்ற சாதியை சேர்ந்தோர் மேலெழுவது அவ்வளவு எளிதான விசயமில்லை. அதிலும் டெல்டாவை பொறுத்தவரை தேவர் என அறியப்படும் அகமுடையார்களுக்கும் - கள்ளர்களுக்கும் எல்லா விசயங்களும் எதிரெதிர் துருவங்களில் தான் இருக்கின்றன; அதில் அரசியல் முதன்மையானது. குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை அகமுடையார்கள் அரசியலில் மேலெழுவதை தடுப்பதற்காகவே தனித்த எச்சரிக்கையோடு காய் நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில், சுயம்பாக எழுந்து தாக்குபிடித்து தேசிய கட்சியின் மாநில பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த ஆளுமையை கொண்டாடமல் இருக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் கருப்பும், ஐயா டீ.ஆர்.பி.யும் எதிரெதிர் அணிகளாக தான் களம் கண்டார்கள் என்பது தனிக்கதை.

டெல்டாவிலுள்ள அகமுடையார் அனைவருமே ஏதோவொரு வகையில் தூரத்து உறவினராகவே இருப்பார்கள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். டெல்டாவில் அகமுடையாரில் கோட்டைப்பற்று உட்பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பான்மை என்பதாலும், தளிக்கோட்டையை சுற்றியும், ஜாம்பனோடையை சுற்றியும் எனக்கு உறவினர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உறவினர்கள் என்பதாலும், உறவு அடிப்படையில் பொது விசயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அரசியலை ஏற்பது என்பது வேறு; அவர்களது ஆளுமையை போற்றுவது என்பது வேறு. தமிழ் தேசிய ஆதரவாளனான எனக்கு, மு.கருணாநிதியின் தளபதியென அறியப்படும் டீ.ஆர்.பாலு ஐயாவும், தமிழகத்தின் மோடியென அடையாளப்படும் கருப்பு முருகானந்தம் அண்ணனும் உறவினர்களாக தெரிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

18 பிப்ரவரி 2017

நேற்று வரை தோழி, இனி சின்னம்மா!?

அ: சசிகலா தமிழச்சி; அதனால் ஆதரிக்க வேண்டும்;

இ: அப்போ பன்னீர்செல்வம் யார்? அவரும் தமிழன் தானே?

அ: இல்லை இல்லை; பார்பன பிடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இ: சுப்ரமணிய சுவாமி என்ற பார்பனர், சசிகலாவை ஆதரித்து ஆளுநரிடமே பேசிக்கொண்டிருக்கிறாரே? அப்போது சசிகலா யார் பிடியில்?

அ: அதெல்லாம் விடுங்க; எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் தான்.

இ: ஆனால், சாமானிய தொண்டர்கள் 95% க்கு அதிகமானோர் ஓ.பி.எஸ்/தீபா பக்கம் தானே இருக்கின்றனர்?!

அ: அது பாஜக, திமுக கட்சிகளோட சதி.

இ: இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கணும்ங்கிறது எங்க விதி!


இப்படியாக கடந்து கொண்டிருக்கிறது சமகால அரசியல் நகர்வுகள்; டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஒரு நடிகை மறைந்தார். மிகச்சரியாக இரண்டே மாதங்களில், பிப்ரவரி 5ம் தேதி நடிகையின் தோழி ஒருவர் முதல்வராக உருவெடுக்க ஆயத்தமானார். அதற்குள்ளாக இத்தனை அரசியல் குழப்பங்கள் அரங்கேறி விட்டன.

சாதி அரசியல்:

இதற்கிடையில் இன்னமும் சாதி சாயத்தில் மூழ்கி கிடக்கும் கூட்டத்தினர், சசிகலாவை கள்ளராக முன்னிலைப்படுத்தி பெருமிதம் கொள்கின்றனர். ஆளும் தகுதியை கொடுத்த அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு தமிழகத்தை நிர்வகிக்கும் தலைமை யாரென விமர்சிப்பதில் என்ன அவதூறு இருக்கிறதென தெரியவில்லை. இன்னுமா முக்குலத்தோர் என்று இல்லாத சாதியின் பெயரால் கண்டவர்களையெல்லாம் தூக்கி பிடிக்கிறீர்கள்?

தன்னுடைய சாதிக்காரன் எது செய்தாலும் சரியென நினைத்து, அதற்காக குருட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் மனப்போக்கை மாற்ற முயலுங்கள். (என்னுடைய சாதிய பார்வையே வேறு.) சாதியை வைத்து மட்டுமே சமகால அரசியலில் எதையும் சாதித்து விட முடியாது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு தற்போதைய சான்று. ஒரு குறிப்பிட்ட சாதிகளின் விளையாட்டென அரசியல் செய்தவர்களின் சதியை முறியடித்தது நீங்கள் பெருமைப்படுகின்ற எந்தவொரு தனிப்பட்ட சாதியும் இல்லையென்ற எதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு திமுகவை விமர்சிப்பதில்லையென சிலர் அடிக்கடி குறை கூறுகிறார்கள்; ஆள்பவர்களை தான் விமர்சிக்க முடியும். அதனால் பாஜக, அதிமுக என அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறோம். சீமான், ஸ்டாலின், கருணாநிதி, தா.பாண்டியன், மோடி, ஜெயலலிதா என அனைவரையும் பாராட்டியும், கண்டித்தும் அந்தெந்த சூழலுக்கேற்ப விமர்சித்து இருக்கிறோம். இனியும் தொடரும்...

அப்பல்லோ - பத்திரிகையாளர் சந்திப்பு:

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதாக அவர்கள் ஒத்துக்கொண்டதே ஒருவகையில் உண்மையை அவசர அவசரமாக உளற தொடங்கிருக்கிறார்களோ என சிந்திக்க வைக்கிறது. ரிச்சர்ட் பீலே சொல்லிருக்கும் எல்லா விளக்கங்களும், ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திண்ணையில் எழுதிக்கொடுத்த கடிதம் போலவே தோன்றுகிறது. மேனாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அவரது தோழி அதே முதல்வர் பதவியில் அமரும் வேளையில் அப்பல்லோ நிர்வாகம் திடீரென கோமா நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பிருக்கிறது; தவளையும் தன் வாயால் கெடும்! என்பது போல அப்பல்லோவும் அதனை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கும்பலும் கெடும்.

இந்த அப்பல்லோ பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துரையாடல்களை உற்று கவனிக்கும் போது, 'பாபநாசம்' படம் தான் நினைவுக்கு வருகிறது. மீண்டுமொருமுறை கமல்ஹாசன், முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வை படமாக்கி இருக்கிறாரோ என எண்ண வேண்டிருக்கிறது. 2000ம் ஆண்டு 'ஹேராம்' படத்தில் குஜராத் கலவரத்தை முன்னதாகவே காட்சிப்படுத்திருப்பார். 2003ல் 'அன்பே சிவம்' படத்திலேயே சுனாமி பற்றி பேசிருப்பார்; 'தசாவதாரம்' படத்தில் எபலோ வைரஸ் பற்றி முன்னதாகவே சொல்லிருப்பார். அந்த பட்டியலில் இப்போது பாபநாசமும் சேர்ந்திருக்கிறது.

எதிரணியில் ஓ.பி.எஸ்.:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, சசி அணி, தீபா அணி, ஓ.பி.எஸ். அணி என மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. போற போக்கை பார்த்தால், ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெ.தீபா தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போல; ஊரே அந்த கும்பலை நடிப்பதாக கழுவி ஊற்றுகிறது; ஆனால் அந்த கும்பலோ, ஓ.பி.எஸ் நடிப்பதாக சொல்கிறது, தங்கள் கட்சியின் தலைமையே நடிகர்கள் தான் என்பதை மறந்து! போயஸ் கார்டனை, 'அம்மாவின் இல்லம்' என இரண்டொருமுறை அழுத்தம் திருத்தமாக ஓ.பி.எஸ் சொன்னதில் கூட ஏதோவொரு செய்தியை அதன்பின்னால் மறைமுகமாக சொல்லிருக்கிறாரோ என தோன்ற வைக்கிறது.

”சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தரச்சொல்லி தொடர்ச்சியாக என்னுடைய செல்போனுக்கு அதிக கால்கள் வருகிறது. அவர்கள் நிறைய செலவு செய்து, வாட்சப், பேஸ்புக் மூலமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி பலரும், ஓ.பி.எஸை ஆதரிக்க சொல்கிறார்கள்.” என தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் இப்படி சொல்கிறார். அந்த பெரிய நெட்வொர்க், தானா சேர்ந்த கூட்டம். அதுவும் ஜியோவால் சேர்ந்த கூட்டம் என்பதை சசிகலா குடும்பத்தின் ஆதரவாளரான  அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போல. :)

சசிகலாவின் அவசரம்:

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதே நான் தான் என்று சசிகலா சொல்லிருக்கிறார். ஊட்டியது, அரசியல் ஆர்வத்தையா? இல்லை ஆகாரத்துல விசத்தையா?ன்னு மக்கள் கேட்கிறார்கள். நல்லவேளை இந்த கொடுமையையெல்லாம் கேட்க ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கே தகுதி இல்லையென கட்சி விதிகள் சொல்கின்றன; அதற்குள்ளாக, அவைத்தலைவர், பொருளாளர் என சக பெருந்தலைமைகளில் உள்ளவர்களையே நீக்கினால் யாருக்கும் லாபம்? ஒட்டுமொத்த தொண்டர்களில் 99% பேர் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கட்சி விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அவசர அவசரமாக, தவறான வழிகாட்டுதலால், மிகத்தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல, தான்தோன்றித்தனமாக அந்த கூடாரத்திலுள்ள பலரும் பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் முதன்மை காரணம்; தங்க முட்டையிடும் வாத்தை கொன்ற பிறகு அதன் மூலம் இத்தனை வருடங்களாக கிடைத்த லாபம் மட்டும் எப்படி இனி கிடைக்கும்?

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதை பற்றி அவரே முடிவு செய்வாரென அப்பல்லோ ரெட்டி சொன்னதை ஏற்றவர்கள், ஆளுநர் ராவை மட்டும் எதிர்ப்பது ஏன்? அவரே முடிவு செய்யட்டுமே?! 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்ததும் தெரியவில்லை; 5 நாட்களாக கூவத்தூரில் நடப்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் பொறுமையாக மக்கள் வேடிக்கை பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் அவசரம்?

”ஜெயலலிதாவின் சடலம் தான் அப்பல்லோவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா இறந்து விட்டார்; அவர் இறந்த பிறகு தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்; அவரது உடலை பதப்படுத்தப்படுத்தவே கன்னத்தில் மூன்று துளைகள் இடப்பட்டன” என அப்பல்லோவில் பணிபுரிந்த ராமசீதா சொல்லிருக்கிறார். அப்படியெனில் இதில் பலர் கூட்டு களவாணிகளாக இருந்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் இதுவரையிலும் அதைப்பற்றி யாருமே வாயை திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றனர் என்பது கூட மிக அழுத்தமான சந்தேகங்களை அனைவரது மனதிலுள் எழுப்பி வருகிறது.

கூவத்தூர் கூத்து:

"நாங்க ஜாலியா இருக்கோம்!"ன்னு சொல்கின்ற பன்னாடைகளில் ஒன்றிரெண்டாவது ஆளே காலியாகி பாடையில் தான் போகுமென தோன்றுகிறது. நீங்க குடியும், குடித்தனமாக கூவத்தூரில் கூத்தடிக்கத்தான் வாக்களித்தோமா? நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச்சூழல் இவையெல்லாம் அந்த ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் கிடைக்கிறதா? தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைக்காதா? ஊர்க்காரனுக்கே யாரென தெரியாதவனையெல்லாம், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். கூவத்தூரில் குதூகலமாய் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த அரசியல் பொறுக்கிகளெல்லாம், தன்னுடைய தொகுதிக்குள் செல்லும் போது, கண்டிப்பாக அடையாளம் தெரியாதவர்களால் செருப்படி வாங்குவார்கள்.
130 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்களுக்கு வாக்களித்த அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசுக்காக கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கே அவமானமாக இருக்காதா? மானங்கெட்ட அரசியலின் உச்சம் இது. த்தூ!

குடியும், குடித்தனமாக தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த பேரம் என்ற போதை இரண்டு நாட்கள் கடந்தும் தெளியவில்லை. கறிக்கடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்கும் கூட இலைதழையென கவனிப்பு அதிகமாகவே இருக்கும்; ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஆடுகளெல்லாம் மட்டன் பீசுகளாக மேலே தொங்கவிட பட்டிருக்கும். இதுதான் இன்றைக்கு கூவத்தூரில் கூத்தடித்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் செம்மறி ஆடுகளை தோலுரித்து தொங்கவிடப்பட போவது, அந்த கூடாரமா? இல்லை; மக்கள் அதிகாரமா? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

இனி குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்:

அனைத்து திறமையுமுள்ள தினகரனுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும். அந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. ஜெயலலிதாவிற்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்த சசிகலாவையே வழிநடத்திய தினகரனே முதல்வராக வேண்டுமென்ற கோரிக்கைகளும் விரைவில் எழும். ஊசாலுடும் இந்த உயிருக்கு நிறைய செலவழித்து இன்று தற்காலிக சுவாசத்தோடு இயங்க வைக்கப்பட்டுள்ளது; நிரந்தரம் என்பதே இங்கில்லை, நிரந்தர பொதுச்செயலாளர் போல; இனி ஒவ்வொரு நாட்களும் எண்ணப்படும், கூடவே ஜாலியாக இருந்த 124 தலைகளையும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

12 டிசம்பர் 2016

தமிழ்நாட்டு அரசியலில் டெல்டாவின் ஆதிக்கம்!

கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.

முதலில் தஞ்சாவூர்...

தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.

அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.

மூன்றாவதாக இடம் யாருக்கு?

அடுத்து தற்போதைய அரசியல் கட்சிகளின் வலிமை, அவர்களின் ஓட்டு சதவீதம், எத்தனையாவது இடம் என்ற நம்பர்களை பற்றியெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக - திமுக - பாஜக என்ற நிலை வந்துவிட்டது. மேலும், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக பாஜக தன்னை பிரகடனப்படுத்த தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, தவறாம முடிவுகளால் வைகோவுடன் கூட்டணி வைத்து தங்களது சின்னத்தையே இழந்து தடுமாறி நிற்கிறது.

எதிர்கட்சியாக திமுக இல்லாத போது எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் செய்ய தவறிய அரசியலை, பாமக சரியாக செய்த போதும், தற்போதைய சூழலில் கடந்த கால சாதி முத்திரையை அன்புமணி ராமதாஸ் தலையெடுத்த பின்னால் ஓரளவுக்கு மறைய தொடங்கிருக்கிறது. அதன் நீட்சியாக 2021 தேர்தலில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும். ஆனால் இப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தென்னிந்திய அரசியலில் முழுமையாக களமிறங்க காத்துக்கொண்டே இருந்தது. கர்நாடகாவை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் தமிழகத்திலும் பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அரசியல் செண்டிமெண்ட்டில், 'So Called' முக்குலத்தோரும் - தஞ்சாவூரும்...

ஆட்சியமைக்கும் திராணியுள்ள திராவிட கட்சிகளில், திமுகவின் தலைமையானது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. அதுபோலவே, அதிமுகவின் தலைமையானது 'So Called' முக்குலத்தோர் + ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. தேசிய கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மாறி வந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்திருக்கின்றனர். காரணம் 'So Called' முக்குலத்தோர் கோட்டாவில் அவர் மறவர். இந்த கணக்கீட்டின் படி பார்த்தால், மூன்றாவது கட்சியாக பரிமாணம் பெற்றுள்ள பாஜக, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பாஜகவின் தலைமையை 'So Called' முக்குலத்தோருக்கு வழங்கலாம். அதுவே சரியான காய் நகர்த்தலாக இருக்க முடியும்.

இப்படியானதொரு தகுதியுள்ளவராக 'So Called' முக்குலத்தோராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரராகவும் உள்ள திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாஜகவின் தலைமை பொறுப்பை கொடுக்கலாம். மத்திய இணையச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவராகவும், மாநில செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய கட்சி பதவியில் இருந்த கருப்பு முருகானந்தம் அவர்களை, பாஜகவின் மாநில தலைவராக்கினால் தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

08 டிசம்பர் 2016

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான அரசியல்!

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான நாள்தோறும் அரங்கேறும் அரசியல் சதுரங்கங்களில் சில...

01. ஊடகங்களின் நம்பகத்தன்மை:

ஏற்கனவே தந்தி போன்ற காட்சி ஊடகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். பாண்டே, ஹரிகரன் போன்றோர் வாய் கூசாமல் யாராருக்கோ கூஜா தூக்குகிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அச்சு ஊடகங்களாவது நேர்மையாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்காவது தூணும் துருபிடித்தே கிடக்கிறது. தி ஹிந்து போன்ற நாளிதழ் மீதான மதிப்பே கேள்விக்குறியாகிறது. நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் அனுமானத்தின் அடிப்படையிலும், நேரில் பார்த்தது போலவே கற்பனையாக எழுதும் நாலாந்திர தகவல்களை அரை பக்கத்திற்கு வெளியிட்டு வருகிறார்கள்.

02. திராவிட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு:

கி.வீரமணி, வைகோ போன்றவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், சந்தேகம் கொள்ள வைக்கிறது. கட்சிக்காரர்களுக்கே இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? சொந்த கட்சியை வலுப்படுத்த வக்கில்லாதவர்கள், தன்னைவிட பலமடங்கு வலுவுள்ள கட்சிக்கு அறிவுரை வழங்குவதன் உள்நோக்கம் என்ன? என்பதும் புரியவில்லை.

03. சிகிச்சை பின்னணி:

அப்பல்லோவை மட்டும் குறை சொல்லும் யாருமே, எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை பற்றி வாயையே திறப்பதில்லை. அப்பல்லோ, எய்ம்ஸ், லண்டன் மருத்துவர் பீலே என அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம் யாரென்றே தெரியவில்லை. அதிமுகவுக்கோ, ஜெயலலிதாவுக்கோ தொடர்பில்லாத கெளதமி கூட பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் அளவிற்கு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார். இது போன்ற நடிகைக்கு வந்த அக்கறை கூட சம்பந்தபட்டவர்களுக்கு இல்லை என்பதும் குழப்பத்தை வலுப்படுத்துகிறது.

04. நிரந்தர பொது செயலாளர் என்று சொன்னதன் மர்மம்:

இத்தனை நாட்களாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிரந்தரமான பதவியாக ஜெயலலிதாவின் விருப்பத்தோடு மாற்றியமைக்கப்பட்ட தலைவர், பொதுசெயலாளர் பதவிக்கு இப்போது ஏன் இவ்வளவு போட்டி? இத்தனை வருடங்களாக அதிமுகவின் நிரந்தர தலைவர் எம்.ஜி.ஆர். என்பதும், அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்றுதானே இருந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்தபின்னால் அந்த பதவிக்கு பலர் போட்டி போடுவதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? வெறும் பதவி சுகம் மட்டும் காரணமென நினைத்து எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

05. சசிகலா நடராஜன்:

போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாக சொல்லி சசிகலா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வெளியேற்றப்பட்ட பிறகு, மன்னிப்பு கடிதத்தில் சொன்னவற்றை சசிகலா மறந்து விட்டாரா? "இனி என் குடும்பத்தோடு உறவே வைக்க மாட்டேன்; எனக்கு எந்த பதவியும் வேண்டாம்; உங்கள் தங்கையாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்;" என்று சொன்னது உண்மையெனில் இப்போது ஏன் அந்த வாக்குறுதியை மீறினார்.

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

அதிமுகவை உருவாக்கியது எம்.ஜி.ஆர்; அவரே தான் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தார். கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியையும் புதிதாக உருவாக்கி, அதற்கென தனியறையையும் ஏற்படுத்தி ஜெயலலிதாவுக்கு கொடுத்தார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெ அணி - ஜா அணியென பிரிவினை வந்தபோது, அடுத்த தலைமையாக ஜெயலலிதாவை மக்களும் தொண்டர்களும் ஏற்றனர். ஜெயலலிதாவை புரட்சி தலைவியாக உருவாக்கியது தொண்டர்கள் தானே தவிர, நடராஜனும் - திருநாவுக்கரசும் அல்ல என்ற எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் இழப்பு அஇஅதிமுக என்ற கட்சிக்கு இல்லை; அந்த கட்சியின் மூலம் ஆதாயம் அடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

26 செப்டம்பர் 2016

முட்டாள்களாக்கப்படுவது வாக்காளர்கள் தான்!

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் இதை சாப்பிட்டார்; அதை சாப்பிட்டார்; இரண்டு இட்லி சாப்பிட்டாரென ப்ளாஷ் நியூஷ்ல போட்டாய்ங்க. அதுல கூட ஒரு லாஜிக் இருந்துச்சு. ராம்குமார் சாப்பிட்ட அந்த எச்சில் தட்டை பார்த்தாவது குத்துமதிப்பா எதையாவது சொல்ல முடியும்.
ஆனால், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா விசயத்தில், அவர் தங்கிருக்கு அந்த ப்ளாக் / வார்டு பக்கமே எட்டிப்பார்க்க முடியாது. குறைந்த பட்சம் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டை கூட பார்க்க முடியாத அடிமைகள் கூட்டம், 'ஜெயலலிதா இரண்டு இட்லி சாப்பிட்டார்!' என்று சொல்வதையெல்லாம் ஊடகங்கள் ப்ளாஷ் நியூஷில் போடும்போது தான், விஜயகாந்த் காரித்துப்பினது ஞாபகத்துக்கு வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த அரசின் நிர்வாகத்தை முதலமைச்சருக்கு மாற்றாக தலைமையேற்கும் இடத்தில் இருக்கும் மாநில மாண்புமிகு ஆளுநரே, வார்டு பக்கம் மட்டும் தான் போக முடிந்திருக்கிறது என்பதை கவனிக்கையில், 'அதிகாரம் மையம்' யார்? என்பதில் கூட குழப்பம் வருகிறது. ஒரு வார்டில் பல அறைகள் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட அந்த அறைக்கு போக முடிந்ததா? என்பதை பற்றி அந்த அறிக்கையில் சரியான விளக்கமும் ஒன்றுமில்லை என்பதாலும், இது முழுமையற்ற அறிக்கையாகவே தோன்றுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் போன்ற தேசிய கட்சி தலைவர்களும், வைகோ, திருமாவளவன் போன்ற மாநில கட்சியின் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும், இந்தளவுக்கு முட்டுகொடுப்பதை பார்க்கையில் குழப்பம் தான் வருகிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் திராணியுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒருவழியாக, சசிகலா புஷ்பாவின் அதிரடியால் ஓ.பி.எஸ் மீண்டுமொரு நாகராஜசோழன் எம்.எல்.ஏ.வாக உருவெடுத்திருக்கிறார். இம்முறை நேரடியாகவே சசிகலா நடராஜனுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்குள்ள ஒரே சிக்கல். ஏனெனில் இனி நிழல் முதலமைச்சரே, சசிகலா நடராஜன் தான்.

நிர்வாக வசதிக்காக முதலமைச்சர் வகித்த அனைத்து துறை பொறுப்புகளையும் ஓ.பி.எஸ்.சிடம் கொடுத்திருப்பது தவறான முன்னுதாரணம். இந்த முடிவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கூட வரவேற்றிருக்கிறார். நாளை ஆட்சிக்கட்டிலில் ஒருவேளை கருணாநிதி அமர்ந்தால் கூட, பெயருக்கு முதல்வராக அவருக்கு பதவியை கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளை ஸ்டாலினே கவனிக்கலாமென நினைத்திருக்க இதுவொரு முன்னோட்டமாக இருக்குமென நம்பியிருக்கலாம். அப்படியெனில், இனி முதலமைச்சர் என்ற பதவியே தேவையில்லையே? என்ற கேள்வி பாமரனுக்குள்ளும் எழத்தோன்றும்.

இலாகாக்கள் அற்ற முதலமைச்சர் ஆளும் மாநிலத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் ஆதரவுடன் கூடிய முயற்சியின் மூலம், சசிகலா நடராஜனிடம் இம்முறை சசிகலா புஷ்பா தோற்று போயிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும், இது தற்காலிக தோல்விதான். இனி தான் உண்மையான வெற்றி யாருக்கு என்பது புரியவரும். ஆனால், இத்தனை நாட்களாக முட்டாள்களாக்கப்படுவது என்னமோ அப்பாவி வாக்காளர்கள் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

06 ஏப்ரல் 2016

சசிகலாவின் சாதி ஆளுமை!


சசிகலாவின் ஆதரவால் அதிமுகவில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்!
கள்ளர்களுக்கு, சாதி உணர்வுள்ள சசிகலா இருப்பது போல, அகமுடையார்களுக்கு என யாரும் உணர்வுள்ள அரசியல் ஆளுமைகளாக இதுவரை உருவாகவில்லை. இந்த ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் சசிகலாவின் சாதி உணர்வை கண்டு ஆச்சர்யபட வேண்டியதாக இருக்கிறது.

வாழ்த்துகள்!

21 ஜனவரி 2016

அதிமுகவை அகமுடையார்கள் ஆதரிக்கலாமா?

அகமுடையார்கள் ஏன் அதிமுகவை ஆதரிக்க கூடாது என்பதற்கான ஒரு சின்ன உதாரணத்தை இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு தானே, விருப்ப மனுவை வாங்கி தொடங்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் பின்னால், சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கே அதிக பட்ச தொகுதிகள் வழங்கப்படும். ஆனால் கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகுதிகளெல்லாம் முக்குலத்தோர் வேட்பாளர்கள் என ஊடகங்கள் மூலம் சொல்ல வைப்பார்கள். முக்குலத்தோரில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் அகமுடையாருக்கு, ஒருசில தொகுதிகள் சசிகலாவின் கருணையால் கிடைக்க கூடும். அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் கள்ளர்களும், மறவர்களும் வேட்பாளர் ஆவார்கள். இது தான் ஜெயலலிதாவின் திராவிட அரசியல். இதுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முக்குலத்து அரசியல்.

உதாரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர் பட்டியலை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும்; சசிகலாவின் கருணையால் எத்தனை கள்ளர்கள் மா.செ. பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வரும். ஓர் அகமுடையாரை மாவட்ட செயலாளராக கூட ஆக்க மனமில்லாத சின்னம்மா சசிகலாவா, எம்.எல்.ஏ. ஆக்க போகிறார்? கள்ளர்கள் சிறுபான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் - அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் கூட, கள்ளரே மா.செ. ஆக நியமிக்கப்பட்டதன் உள்ளரசியல் புரிகிறதா? கள்ளருக்கும் - மறவருக்கும் பதவியை கொடுத்துவிட்டு, அகமுடையாருக்கு அல்வா கொடுத்து கொண்டிருக்கும் அதிமுகவை நிச்சயம் சொரணைவுள்ள அகமுடையார்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்களென நம்புகிறேன். பார்க்கலாம்...

- இரா.ச.இமலாதித்தன்

02 நவம்பர் 2015

ஆயிரம் கோடி ஊழலையும் ஆதரிக்கும் சாதி பாசம்!

"சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை; ஆன்மீகத்துக்குமி்ல்லை."

- பசும்பொன் தேவர்.

சசிகலா கும்பல் ஆயிரம் கோடிகளுக்கு தியேட்டரை வாங்கி இருக்கிறார்களென ஊடகங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும், அதை தி.மு.க. என்ற கட்சியின் ஊழலோடு ஒப்பிட்டு திசை திருப்பி விடுவதை போன்றதொரு கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பி.ஆர்.பி கிரானைட் ஊழலையும், சசிகலா ஊழலையும் சாதி பாசத்தோடு அணுகும் ஒவ்வொருவரும், பசும்பொன் தேவரின் கொள்கையை தங்களது செருப்பால் மிதித்து, அவரின் உடலின் நெஞ்சத்து குருதியை உறிஞ்சி குடிப்பதற்கு சமம். நேர்மையாக இருக்க தெரியாதவனுக்கு எதற்கு மீசை மயிர்? அதையெல்லாம் மழித்து விட்டு மானம் ரோசமில்லாமல் ஊர் பணத்தை ஊழல் செய்து சுகபோகமாய் வாழும் யாருடைய காலையாவது கழுவி வயிற்றை கழுவலாம். அடத்தூ!

- இரா.ச.இமலாதித்தன்