25 ஆகஸ்ட் 2017

விநாயகர் சதுர்த்தி!

மூலாதாரம் முதற்கொண்டு முதுகெலும்பு வாயிலாக மூளை வரையிலான மனிதனின் உச்சபட்ச முதுபெரும் முதன்மை அறிவை போற்றும் அடையாளத்திருநாள் வாழ்த்துகள்!

விவேகம் - சிறு பார்வை!

இல்லுமினாட்டி போன்ற ரகசிய அமைப்புகளை பற்றியும், அப்படிபட்ட அமைப்புகளின் கொடூர நோக்கங்களையும், அவர்களால் திட்டமிடப்பட்டு திணிக்கப்படும் போர்வெறியையும், அவர்களின் வணிகத்திற்காக உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகளையும், நவீன கடவுளாகி போன பணம் மற்றும் தங்கம் என்ற உச்சபட்ச வணிகப்பொருள் பற்றியும், செய்தி ஊடகத்தை பயன்படுத்தி அரசாளும் அவர்களது தந்திரத்தையும் வெளிப்படையாக சொல்லிருக்கும் எம் சோழ மண்ணின் மைந்தனும் - எம் உறவினருமான இயக்குனர் சிவாவின் துணிச்சல்மிகு கதைக்களத்திற்கு முதற்வாழ்த்துகள்! சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஆண்டு கொண்டிருக்கும் நிஜ ஆண்டைகளான இந்த ஆளும் வர்க்கத்தின் கோர முகத்தை வெளிக்காட்டும் கதையையே தன் படத்தின் கதைக்கருவாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் தல அஜித்குமாருக்கு, தளபதி விஜய் ரசிகனாகவாழ்த்துகள்!

விவேகத்தில் பல இடங்களில் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும் (எண்ணம் போல் வாழ்க்கை) எண்ணங்களின் வலிமையை பற்றிய ரகசியத்தை உடைத்திருக்கும் இயக்குனர் சிவாவின் விவேகம் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்த இவ்வுலகின் எதிரிகளான சீக்ரெட் சொசைட்டிகளை, நேர்மறையான எண்ணங்கள் மூலம் நிச்சயமாக வெல்ல முடியுமென்ற சீக்ரெட்டை சொல்லிருக்கும் திரைக்கதையின் இந்த யுக்தியே ஒருவித விவேகம் தான். இது உலகத்தரமான சினிமாவாயென தெரியாது; ஆனால் உலகத்தையே ஆளும் உண்மையான எதிரிகளை தோலுரிக்கும் சினிமா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளி, திரையரங்கில் படத்தை பார்த்து மகிழுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்


மாற்றுக்கருத்துகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் கூட எளிதாக கடக்க தெரியாதவர்களெல்லாம் கடைசி வரை இவ்வாழ்வின் காலடியில் தான் விழுந்து கிடக்க வேண்டும். ப்ளூ சட்டை மட்டுமல்ல; ஆடையென்ற குறிப்பிட்ட எந்தவொரு அடையாளமுமற்ற எத்தனையோ விமர்சகர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்; அவர்களையெல்லாம் கடந்து செல்லாமல், இங்கே பயணிக்கவே முடியாது. இதை 'தளபதி' விஜய் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது வட்டம்'; ஏற்ற இறக்கத்தை உணர்ந்து வேகமாக சுழன்று கொண்டிருக்க பழகுங்கள். அதுவே 'தல' அஜித் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது நேர்கோடு'; மேடு பள்ளங்களை கண்டு கொண்டு வேகமாக நகர பழகுங்கள்.

விவேகமும் முக்கியம்.

- இரா.ச. இமலாதித்தன்


கொசுறு:

சீக்ரெட் சொசைட்டிகளை பற்றி 'அறந்தாங்கி அகமுடையார்' வகையறாவை சேர்ந்த சிறுத்தை சிவா விவேகம் படத்தில் சொல்லிருக்கும் ரகசியத்தை, ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து வைத்திருந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் விவேகமுடன் கூடிய வீரம் போற்றதக்கது. அதனாலேயே உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத கொடூரம் மாமன்னர் மருதுபாண்டியர்களின் மரணத்தில் நடந்தது. அவர்களுடைய குடிவழி ஆண் வாரிசுகளிலுள்ள பச்சிளம்குழந்தைகளை கூட விடாமல் கொன்றொழித்து, அந்த ரகசியங்களை தற்காத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி என்னும் அரசக்கூலிப்படை.




#Illuminati #Marudhu #Sivagangai #Agamudayar

14 ஆகஸ்ட் 2017

அகமுடையார் பற்றி - sarahah



அகமுடையாருக்கான பூர்வீகமென்று பார்த்தால் பலவிதமான கலவையான ஊகங்கள் உண்டு. நடுநாடு என்ற திருக்கோவிலூர் உள்ளிட்ட காஞ்சிபுரத்துடன் கூடிய பல்லவ நாடும், அகம்படி குலத்தை சேர்ந்த வாணர்கள் தலைமையிடமாக ஆண்ட வாணாதிராயமதுரை என்ற மானாமதுரையை சுற்றிய கேரளத்தை உள்ளடக்கிய மலைநாடுடன் கூடிய தென் தமிழகமும் உண்டு. 13ம் நூற்றாண்டில் மானாமதுரைக்கு அருகிலுள்ள தஞ்சாக்கூர் என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தஞ்சைவாணன் என்கிற சந்திரவாணன் என்ற வாணர் குல அகம்படி இனத்தவரின் பூர்வீகம் கூட பல்லவ தேசமென்றும் பொய்யாமொழிப்புலவரால் இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவையில் சொல்லப்படுகிறது. தஞ்சைதான் அகமுடையார்களை இணைக்கும் மையப்புள்ளி. சேர+பாண்டிய+பல்லவம் என அனைத்து தேசத்திலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் அகமுடையாரின் இடம்பெயர்வு நடந்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட ஊகம்.

emalathithan.sarahah.com

நிச்சயமாக மரபு வழி போர்க்குடியினர் அகமுடையார் தான் என்பதில் மாற்று கருத்தே இல்லை; வேட்டுவருக்கும் அகமுடையாருக்கும் எவ்வித தொடர்புமில்லை. போர்ச்சூழலற்ற காலநிலை மாற்றம் நிகழும் போது வேளாண்மையையும் அகமுடையார்கள் தனதாக்கி கொண்டனர். அகமுடையார்களில் உழுவித்த வெள்ளாளர்களாக பூகோள ரீதியாக வட தமிழகத்தில் தான் முதன்முதலாக மாறி போனார்கள். தெற்கிலுள்ள அகமுடையார்களே கடைசி வரை போர் மரபோடே வாழ்ந்து, மிக சமீபத்தில் வேளாண்மை பக்கம் மாறினர். டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வேளாண்மை பக்கம் திசை திரும்பி இருக்கிறார்கள்.

emalathithan.sarahah.com

தொழுவ வெள்ளாளர் என்பதே சரி; துளு நாட்டிற்கோ அல்லது துளு மொழிக்கோ எவ்வித சம்பந்தமும் அகமுடையாருக்கு இல்லை. அகமுடையாருக்குள்ள பட்டங்களான சேர்வை - தேவர் - உடையார் - மலையமான் - அதிகாரி - பிள்ளை போன்ற பட்டங்களை போலவே முதலியார் என்பதும் பட்டமே. பட்டங்களை வைத்து மற்ற சாதியோட உறவாட முடியாது. ஏனெனில் சேர்வை பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு. தேவர் பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு. உடையார் பட்டம் இரண்டு சாதிகளுக்கு உண்டு. குறிப்பாக பிள்ளை பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. அதுபோலவே முதலியார் என்ற பட்டம் செங்குந்தர்களுக்கும், தஞ்சை கள்ளர்களுக்கும் உண்டு; இதில் வடக்கிலுள்ள அகமுடையார்களில் முதலியார் பட்டமே பெரும்பான்மையாக இருக்கிறது. இந்த முதலியார் மற்றும் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்களுக்கு துளுவ(தொழுவ) வெள்ளாளரென்றும், அகமுடையார் என்றும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது; காரணம் இரண்டும் ஒன்று என்பதால் தான். இந்த இருவிதமான சாதிச்சான்றிதழ் வைத்திருந்தாலும் மண உறவு இவர்களுக்குள் காலங்காலமாக உண்டு. அதனால் இதில் குழப்பிக்கொள்ள ஒன்றுமே இல்லை. நீங்கள் அகமுடையார் என்பதையே எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை துளுவ வெள்ளாளர் என்றாலும் அதில் தவறேதுமில்லை. இரண்டும் ஒன்றே.

emalathithan.sarahah.com

எந்த இனக்குழுவின் கலப்பு இசுலாம்? - sarahah



பாண்டிய தேசத்தில் குதிரைப்படைக்காகவும், சோழ தேசத்தில் கப்பற்படைக்காகவும் அரபு (துருக்கியர் -> துலுக்கர்) தேசத்திலிருந்து வந்திருந்த இசுலாமிய ஆண்களோடு இங்கிருந்த பல்வேறு இனக்குழுவிலுள்ள பெண்களோடு மணஉறவு கொண்டதால் பலதரபட்ட இசுலாமிய பிரிவுகள் உருவாகியது. இந்த இனக்கலப்பில் செட்டியார் - வெள்ளாளர் - கள்ளர் - மறவர் போன்ற பல்வேறு இனக்குழுவினரும் கலந்திருக்கின்றனர். (கப்பலோட்டி -> மரக்கலராயர் -> மரைக்காயர்
குதிரையோட்டி -> ரா+ஹூத் -> ராவுத்தர் ) தமிழ் பேசுகின்ற இசுலாமியர்கள் யாரும் முழுவதுமான ஒரே இனக்குழு அல்ல. பாதி பாதியான இனக்கலப்பு இவர்களுடன் உண்டு. இவர்களுள் 'சோ கால்டு' முக்குலத்தோர் மட்டுமில்லாது மற்ற சாதிகளும் உண்டு.

emalathithan.sarahah. com

பார்பனர் எதிர்ப்பாளர்களா அகமுடையார்கள்?




எனக்கில்லை; பெரும்பான்மையான அகமுடையார்களுக்கும் மற்ற சாதிகள் மீது வெறுப்போ பகையோ கிடையாது. கோவில்களையும், கோட்டைகளையும், அரசையும் காத்து நின்ற அகம்படியரான எங்களுக்கு யாரும் எதிரியல்ல. எயில் காக்கும் நொச்சித்திணைக்கு உரிய அகம்படியானின் பெயரையே தன் குடும்பத்தலைவரான கணவருக்கு (அகம்படியான் -> ஆம்படயான்) கொடுத்த சமூகமான பிராமணர்கள் மீது எப்போதும் வெறுப்பில்லை. பிராமணியத்தின் மீது தான் வெறுப்பு. அனைவரையும் அரவணைத்து உறவாடும் அகமுடையார்களுக்கு தனிப்பட்ட பகையோ வெறுப்போ யார் மீதும் இல்லை.

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

அரசியல் ஆளுமைகளை அகமுடையார் என்பதால் ஏற்கிறோமா?- sarahah



ஐயா தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ஆகட்டும், அண்ணன் ஜாம்பவனோடை கருப்பு முருகானந்தம் ஆகட்டும் டெல்டாவிலிருந்து அரசியல் களம் கண்டு, மிகப்பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் அவர்களது கட்சியில் பெற்றிருக்கின்றனர். டெல்டாவின் அரசியல் என்பதே கள்ளரான சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த போது, அங்கிருந்து மற்ற சாதியை சேர்ந்தோர் மேலெழுவது அவ்வளவு எளிதான விசயமில்லை. அதிலும் டெல்டாவை பொறுத்தவரை தேவர் என அறியப்படும் அகமுடையார்களுக்கும் - கள்ளர்களுக்கும் எல்லா விசயங்களும் எதிரெதிர் துருவங்களில் தான் இருக்கின்றன; அதில் அரசியல் முதன்மையானது. குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை அகமுடையார்கள் அரசியலில் மேலெழுவதை தடுப்பதற்காகவே தனித்த எச்சரிக்கையோடு காய் நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில், சுயம்பாக எழுந்து தாக்குபிடித்து தேசிய கட்சியின் மாநில பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த ஆளுமையை கொண்டாடமல் இருக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் கருப்பும், ஐயா டீ.ஆர்.பி.யும் எதிரெதிர் அணிகளாக தான் களம் கண்டார்கள் என்பது தனிக்கதை.

டெல்டாவிலுள்ள அகமுடையார் அனைவருமே ஏதோவொரு வகையில் தூரத்து உறவினராகவே இருப்பார்கள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். டெல்டாவில் அகமுடையாரில் கோட்டைப்பற்று உட்பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பான்மை என்பதாலும், தளிக்கோட்டையை சுற்றியும், ஜாம்பனோடையை சுற்றியும் எனக்கு உறவினர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உறவினர்கள் என்பதாலும், உறவு அடிப்படையில் பொது விசயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அரசியலை ஏற்பது என்பது வேறு; அவர்களது ஆளுமையை போற்றுவது என்பது வேறு. தமிழ் தேசிய ஆதரவாளனான எனக்கு, மு.கருணாநிதியின் தளபதியென அறியப்படும் டீ.ஆர்.பாலு ஐயாவும், தமிழகத்தின் மோடியென அடையாளப்படும் கருப்பு முருகானந்தம் அண்ணனும் உறவினர்களாக தெரிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

அகமுடையார் - திமுக - முகநூல்! - sarahah





எந்தவொரு அரசியல்வாதிகளாலும் அகமுடையார் இனக்குழு மேலெழுந்து வரவில்லை. முதன்மை பொறுப்பிலிருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாதிய பின்புல உண்டு. அதனாலேயே அவரது சாதியை சார்ந்தோர் உயர்நிலையை அடைந்துவிட முடியாது. இது அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். போலி பெருமைக்கு வேண்டுக்குமென்றால் 'எங்க ஆளுக தான் அவரு!' என வருட்டு கெளரவத்தோடு காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம். அதனால் ஒட்டுமொத்த சாதிக்கும் ஒரு பைசா பிரோயோசனமும் இல்லை.

ஒருகாலத்தில் முற்பட்டோர் பட்டியலில்(FC) இருந்த அகமுடையார்களை, பிற்பட்டோர் பட்டியலில்(BC) சேர்க்க காரணமாக இருந்ததும் ஓர் அரசியல் தான்; அதை செய்து காட்டிய அரசியல்வாதியல்லாத தமிழ்வேள் கரந்தை உமாமகேசுவரன் பிள்ளையின் அரசியலை தான், தற்போதைய அகமுடையார் இனக்குழுவிலுள்ள அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கிறோம். இதுவரை அப்படியான அரசியல்வாதி களத்தில் இல்லை; இனி உருவாகலாம்.


- இரா.ச. இமலாதித்தன்





மற்ற சாதிகளில் அவர்களுக்கான ஒரு தலைவரை கண்டுபிடிப்பது மிகச்சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த மூன்று தனித்தனி சாதிகளுக்கும் தொண்டர்களின் எண்ணிக்கைக்கு நிகராக தலைமைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாவதால் தான், தன்னிருப்பை காட்டிக்கொள்ள எதையாவது செய்து சண்டை உருவாகி கொண்டே இருக்கிறது. மெல்லிய ஓர் உறைக்குள் மூன்று வெவ்வேறான கத்திகளை நுழைத்து கொண்டே இருப்பதால், இனிவரும் காலங்களிலும் இந்த சண்டை தொடருமே ஒழியே; குறையவே குறையாது.

(பி.கு: தேவர் என்பது பட்டம் மட்டுமே; அது சாதி அல்ல)


இரா.ச. இமலாதித்தன்

சிவம் என்பது? - sarahah



சிவம் என்பதை பற்றி ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத பல அத்தியாயங்கள் இதனுள் உண்டு. அதனையெல்லாம் தனித்தனி கேள்விகளாக கேட்டிருந்தால் அதற்கான பதில்களை தனித்தனியே சொல்லிருக்கலாம். பரவாயில்லை.

சிவனும் சீவனும் வேறில்லை; உள்ளம் பெருங்கோவில்; ஊன் உடம்பு ஆலயம் என்பது போன்ற சித்தர் பெருமக்களின் கருத்துகள் தான் சிவம் என்ற தத்துவத்திற்கான பொது பதிலாக இருக்கிறது. எளிமையாக சொல்வதெனில் சிவம் என்பது அந்த கால தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் தான். ஒலியால் ஒளியை தொடர்பு கொள்வதே சிவம்.


- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

அகமுடையார் அரசியல்! - sarahah




முக்குலத்தோர் என்ற போலியான கட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லை. தேவர் என்ற பட்டத்தையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரையும் மையப்படுத்திய அரசியல் என்றைக்குமே தனித்த அரசியலை உருவாக்காது. கடைசி வரை திராவிட கட்சிகளோடு கை கோர்த்து, அகமுடையார் என்ற தனிப்பெரும் இனக்குழுவிற்கு கொடுக்கப்பட வேண்டிய பகிர்வு கிடைக்கவிடாமல் செய்ததற்கு போலியான முக்குலமே காரணம். உண்மையாகவே கள்ளர் - மறவர் என்ற அந்த இருகுலத்தோருக்கான அரசியல் லாபத்திற்காகவே அகமுடையார் இனக்குழு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாயக்கர்களால் கிடைக்கப்பட்ட பாளையங்களும் - பட்டங்களும், மறவர் - கள்ளர்களுக்கு ஒரு ஆண்டபரம்பரை வரலாற்றை உருவாக்கி கொடுத்திருக்கலாம். அகமுடையாருக்கு அப்படியான கட்டமைக்கப்பட்ட அங்கீகாரம் தேவையேயில்லை. ஏனெனில் அகமுடையார்கள் குற்றப்பரம்பரையும் கிடையாது; பாலை நிலத்தவர்களும் கிடையாது.

மக்கள் தொகை அடிப்படையில் அகமுடையாரை விட கள்ளரும் மறவரும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கள்ளர், மறவரின் மொத்த அடர்த்தியே அகமுடையாரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பதே எதார்த்தம். நிலைமை இப்படியிருக்க இம்மூவரில் சிறுபான்மையான மறவரிலிருந்து தான், அகமுடையார் தோன்றியதாக பொய் பரப்புரை செய்யும் காரிய கிறுக்கர்களுக்கு அடிப்படை அறிவில்லாமல் இருக்கலாம் என்பது தெளிவு. மேலும் பெரும்பான்மை இனக்குழுவிலிருந்து தான் சிறுபான்மை இனக்குழு உருவாகுமே தவிர, சிறுபான்மை இனக்குழுவிலிருந்து பெரும்பான்மை இனக்குழு உருவாகவே முடியாது.

மறவர் என்போர் பெண் வழி சமூகம். திருமண உறவு என்பதே தாய் வழியின் கிளை/கொத்துகளை வைத்தே அமைகிறது. தஞ்சை கள்ளர்கள் ஆண் வழி சமூகம் என்றாலும் கூட ஒரே பட்டத்தை கொண்டவர்களுக்குள் திருமண உறவில்லை. இதைத்தவிர அம்பலம் பட்டமிடும் கள்ளர், பிரான்மலை கள்ளர் என்ற ஒவ்வொரு கள்ளர்களுக்கும் தனித்த பாரம்பரியம் உண்டு. மறவர்களில் ஆப்பநாடு, கொண்டையன் கோட்டை என பல பிரிவுகள் இருந்தாலும் செம்பி நாட்டு மறவர்கள் மட்டுமே அகமுடையாரில் ஆதிகாலம் தொட்டு மண உறவு கொண்டிருக்கின்றனர். அதற்கும் கூட அரச ரீதியாக தொடர்புகள் உண்டு.

எதார்த்தம் இப்படி இருக்க, கள்ளர் மறவரோடு எவ்வித தொடர்புமில்லாத அகமுடையார்களை ஒரே குலமாக அடைப்பது பச்சைத்துரோகம். தமிழ் தேசிய கொள்கையோடு எந்த இனக்குழுவை சேர்ந்த தமிழன் ஆட்சியமைக்க நினைத்தாலும், தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து விரிந்து வாழும் அகமுடையார்களின் ஆதரவின்றி சாத்தியமாக போவதில்லை; இது வெறும் சுயசாதி பெருமை அல்ல. களநிலவரம் இது தான். முதலியார் - உடையார் - அதிகாரி - மலையமான் - பிள்ளை - சேர்வை - தேவர் என பல்வேறு பட்டங்களோடு இருந்தாலும் அந்தெந்த பகுதிகளில் தனித்த அரசியல் பலத்தோடு அகமுடையார்கள் இருக்கிறார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். கண்டிப்பாக தமிழ் தேசியத்தின் பக்கம் அகமுடையார் இனக்குழுவின் ஒட்டுமொத்த பார்வையும் விழும். அன்று முதல் தமிழராட்சி இம்மண்ணில் எழும்.

(பின் குறிப்பு: முக்குலத்தோர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் கி.பி. 1930க்கு முன்பாக கிடையாது. இல்லாத முக்குலத்தை பற்றிய 2015ல் எழுதப்பட்ட சிறு கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://emalathithan.blogspot.in/2015/09/blog-post_24.html

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும் கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.)

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

09 ஆகஸ்ட் 2017

ஆளப்போறான் தமிழன்!



"ஆளப்போறான் தமிழன்"
எழுத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் பிழையே இல்லை! இனி இம்மண்ணை தமிழன் ஆள்வான்.
சீமானுக்கு நன்றி.

06 ஆகஸ்ட் 2017

சினேகனுக்கு வாழ்த்துகள்!


கட்டிப்பிடி வைத்தியம், டைனமிக் திருமணம் இந்த இரண்டிலுமே சினேகன் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்குண்டு. குறிப்பாக, மணப்பெண்ணை கண்டவனும் மணமகனுக்கு நேராகவே மேடையேறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நிகழ்வான டைனமிக் திருமண விசயத்தில் எரிச்சல் தான் அதிகம்; அதை தலைமை தாங்கி நடத்திய சினேகன் மீது வெறுப்பும் கோபமும் தான் மேலோங்கி இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் சினேகன் மட்டுமே எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலையிலும் கனகச்சிதமாய் அனுசரணையோடும் விவேகத்துடனும் செயல்படுகிறார் என்பதால் ஒருவகையில் ஆதரிக்கவும் வேண்டிருக்கிறது. இதன் நீட்சியாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற சினேகனிடமிருந்தும் ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அது என்னவெனில், ஒரு விசயத்தை அணுகும் விதம், அதை மற்றவர்களோடு கலந்தாலோசிக்கும் தன்மை, சம்பந்தபட்டவர்களிடம் அவர்களது பிரச்சனைகளை விவரிக்கும் பேச்சுநடை என இவ்விசயத்தில் ஒட்டுமொத்த கலவையான செயல்பாடுகள் என்னை ஏதோவொரு விதத்தில் கவர்ந்திருக்கிறதாக உணர்கிறேன். ஒருவேளை, சினேகனுக்கு பிக்பாஸூல் பட்டம் கிடைத்து வெற்றிப்பெற்றால் ஓவியா ரசிகனாக வாழ்த்துகள்!


கொசுறுகள்:

தைப்புரட்சியால் 'மீசைய முறுக்கு' ஆதிக்கும், 'பிக்பாஸ்' ஜூலிக்கும், புகழ் வெளிச்சம் வெள்ளித்திரையில் அதிகமாக படர விடப்பட்டிருக்கிறது.


'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன், 'மருத்துவ முத்த நிபுணர்' ஆரவ் என்ற இருவரிடமும் இனி சிக்கி தவிக்க போகிறார் ரைஸா.


ரைஸா பிக்பாஸ் வீட்டில் இவ்வாரத்திற்கான தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை கூட ஏற்க முடியாமல், ஏதேதோ புதுப்புது கதை சொல்லி கோபப்படும் காயத்ரி மாதிரியான சைக்கோக்கள் சூழ்ந்த உலகம் இது.


பாடப்புத்தகத்திலெல்லாம் 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளை என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த விசயத்தில் கூட ஜூலியை காப்பியடித்து, அரிய உண்மையை உலகிற்கு சொன்ன கட்டிப்பிடி கவிஞர் சினேகனை நினைத்து பெருமை கொள்கிறோம்.


ஓட்டே போடாம காயத்ரியை வெளியேற்ற ஊரு உலகமே நினைக்கும் போது, இப்படி மயிரு மாதிரி ஒரு டாஸ்கை கொடுத்து உங்க எச்சை புத்தியை காட்டி, அந்த ஹேரை காப்பாத்தி இருக்கீங்களே ஏன் பாஸூ (Vijay Television) இந்த மானங்கெட்ட பொழப்பு?

இரா.ச. இமலாதித்தன்

05 ஆகஸ்ட் 2017

நினைவுகளை மீட்டெடுக்கும் நட்பு பாலம்!






இது வடுகச்சேரிக்கும் இருக்கைக்கும் இடையிலான எல்லையிலிருக்கும் குதிரைசேவகனாற்று பாலம். நாகை மாவட்டத்திற்குட்பட்ட இரு சட்டமன்றத்தொகுதிகளின் எல்லை இது. ஒன்று கீழ்வேளூர், மற்றொன்று நாகப்பட்டினம். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அந்த சிறு பட்டியலில் விஜயபாபுவும் ஒருவர். எங்களின் பள்ளிக்காலமான ஆறு முதல் பனிரெண்டு வரையும் மேலும் கல்லூரிக்காலங்களிலும் மாலை முதல் இரவு வரை இங்கேயே அமர்ந்திருந்து படத்துறங்கி பல கதைகள் பேசிருக்கிறோம். அரசியல் - சினிமா - விளையாட்டு - ஊர்க்கதை என பலவற்றை அலசிருக்கிறோம். மதிய நேரங்களிலெல்லாம் இப்போது வறண்டு கிடக்கும் இந்த ஆற்றில் அன்று துள்ளியோடும் நீரில் குளித்து கும்மாலமடித்திருக்கிறோம். நீச்சல் தெரிந்திருந்தும், ஒருமுறை ஆற்றுச்சுழலில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் அச்சம்பவம் இன்னும் என் மனதினுள் உண்டு. எதிரிலேயே சுடுகாடு; கூடவே நம்மைப்போலவே கார்பன் டை ஆக்சடை அதிகம் வெளியேற்றும் ஆற்றோர தூங்குமூஞ்சி மரம் என சூழ்ந்திருக்கும் திறந்தவெளி விவாதமேடை இது.

பெரும்பாலான விடுமுறை நாட்களில் கிரிக்கெட்டும், சில சமயம் வாலிபாலும் விளையாடி விட்டு, எங்களின் இளைப்பாறும் இடம் இது. வேப்பங்குச்சியோடு, ஆற்றங்கரையோரம் காலைக்கடன் முடித்து விட்டு விடிகாலையிலும் சில நிமிடங்கள் அமர்ந்து போகுமிடம் இது. அதிகாலை நாளிதழ்களில் டீக்கடை பேப்பரென பெயர்பெற்ற தினத்தந்தி இருக்கை சுல்தானியா டீ கடைக்கு வரும் நேரம் மதியம் பனிரெண்டை தாண்டும். அப்போதும் கூட, ஒரு பக்கம் கூட விடாமல் பாரா பாராவாக புரட்டி எடுப்போம். கூடவே எதிரே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வரும் தீக்கதிரையும் படித்து தீர்ப்போம். அங்கேயே சைக்கிள் கடை வைத்திருந்த போஸூன் தயவால் தேநீரும் படிப்பின் துணைக்கு வரும். மற்ற நேரமெல்லாம் பொழுது போகும் வரை, அரவணைத்த இந்த சேவகானாற்று பாலமும், தூங்கு மூஞ்சி மரமும் தான், எங்களைப்போன்ற பலருக்கும், எங்களை விட மூத்தோருக்கும் அன்றைய பிக்பாஸ் வீடு!

இன்று மதியம் ஆளில்லா அந்த இடத்தில் சில நிமிடங்கள் தனியே அமர்ந்துவிட்டு நினைவுக்கு சில படங்களையும் பிடித்து வந்தேன். ஆயிரம் இருந்தாலும் பள்ளி வாழ்க்கையின் போது கிடைத்த ஓய்வு நேரத்திற்கு இணையான ஓய்வு நாட்கள் இனி எப்போதும் கிடைக்க போவதில்லை. எப்போதுமே இருக்கும் போது, அதை சரிவர அனுபவிக்க தெரியறது இல்லை என்பதும் நம்மில் பலருக்கும் உள்ள குறைபாடு. ப்ச்...

- இரா.ச. இமலாதித்தன்

#Autograph #OldMemories

ஓவியா செய்த இரண்டே தவறுகள்!




01. பொம்பள ஆரவ்வான காயத்ரியை நம்பியது; காயத்ரியிடன் வாக்கு கொடுத்ததால், தன் இயல்பான அடிப்படை குணங்களில் ஒன்றான வெளிப்படையான கருத்தை சொல்லாமல் தன்னுள்ளேயே மறைத்து கொண்டது. அது ஓவியாவின் குணாதிசயம் இல்லை என்பதால் தான், ஓவியாற்குள் ஏற்பட்ட முதற்குழப்பம்.

02. ஆம்பள காயத்ரியான ஆரவ் மீது அளவுக்கதிகமான அன்பை வைத்தது; அன்புக்கு ஏங்கிய ஓர் அபலையின் ஆன்ம ஈடேற்றம் போல, மருத்தவரிடமும், பிக்பாஸுடமும், கமலுக்கு முன்பாகவும், வெளியேறிய மேடையான பொதுவெளியிலும் ஆரவ்வை காதலிக்கிறேனென வெளிப்படையாக சொன்னது. இதுதான் இரண்டாவதும் இறுதியானதுமான ஓவியாவிற்குள் ஏற்பட்ட குழப்பம்.


இந்த இரண்டிலும் தான், ஓவியா எனும் மனதிற்கு நெருக்கமானதொரு பெண்ணை உணர முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் இதுவரை ஆட்டோகிராஃப் சேரன் போல ஒன்றுக்கும் மேற்பட்ட 'ஐ லவ் யூ!'க்களை நேரடியாக எனக்கு பிடித்த பெண்களிடம் உணர்வுப்பூர்வமாக சொல்லிருக்கிறேன்; கடைசியில் எல்லாமே ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் போல தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. இம்முறை எவ்வித வெட்கமும் சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஓவியாவுக்காக பொதுவெளியில் சொல்லத்தோன்றியது.

ஐ லவ் யூ ஓவியா!

ஆரவ்வோ அல்லது அவரை விட மிகச்சிறந்த வேறு யாரோ ஓவியாவுக்கு பிடித்த மாதிரியான ஒருவர் வாழ்க்கைத்துணையாக வர இறைவனை பிராத்திக்கிறேன். இனிவரும் நாட்களெல்லாம் வாழ்வில் வெற்றியாக அமையவாழ்த்துகள் ஓவியா!

- இரா.ச. இமலாதித்தன்

#BiggBoss #Oviya #OviyaArmy

செம்பியன் மாதேவியார்!



பெரும்பாலான கோவில்கள் இன்றைக்கும் எஞ்சி நிற்கும் விதமாக கற்றளிகளாக மாற்ற காரணமாக இருந்த (அடியேனின் நட்சத்திரமான) கேட்டை நட்சத்திரத்தில் உதித்த, கோட்டை கட்டி வாழ்ந்த எங்கள் பெரும்பிராட்டி செம்பியன்மாதேவி கட்டியெழுப்பிய கோவிலில் இன்றைய மாலைப்பொழுது கடந்து கொண்டிருக்கிறது.

உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவரை வளர்த்தெடுத்து அரியணையேற்றிய அவரது பாட்டியின் பெயரான செம்பியன்மாதேவியின் பெயரிலேயே இவ்வூரும் மீளுருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இவ்வூருக்கான கூடுதல் சிறப்பு. மேலும் இந்த ஊருக்கு சுற்று வட்டாரத்தில் தான் எங்கள் உறவினர்களின் ஊர்களும், அடியேன் படித்து வளர்ந்து ஊர்களும் இருக்கிறதென்பது பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறேன். ஆண்டுதோறும், செம்பியன்மாதேவி அவதரித்த மார்கழி மாத கேட்டை திருநாளில் பெண் வீட்டார் சீதனம் எடுத்து கொண்டாடப்படும் விழா காலம்காலமாக இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.


- இரா.ச. இமலாதித்தன்

#கேட்டை #ராஜராஜசோழன் #செம்பியன்மாதேவி

03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

01 ஆகஸ்ட் 2017

அவசர காலங்களில் ஹிந்தியா தாக்குபிடிக்குமா?








சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்) சாலையில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்க ஹிந்திய விமானப்படை அனுமதி தந்துள்ளதை எப்படி பார்க்க வேண்டும்?

- என்ற இந்த கேள்விக்குள் ஆயிரம் பதில்கள் அடங்கிருக்கின்றன.

இவர்கள் சொல்லும் அந்த அவசரக்காலம் என்பது எது?


ஒருவேளை போர்ச்சுழல் மிகுந்த காலத்தை தான், அவசரக்காலமென சொல்கிறார்களா?

வடக்கு வாழ தெற்கு தேயத்தான் வேண்டுமா?

ஒட்டுமொத்த ஹிந்திய நாட்டின் குப்பைத்தொட்டியாக தென்னகம் திகழ்வது போதாதா?

போர்க்காலங்களில் மனித அரண்களாக்கி பலிகடாவாக எம்மை பயன்படுத்த திட்டம் தானே இது?

அவசரக்காலம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தானா?

ஹிந்தியா முழுமைக்கும் இதுபோன்ற அவசரக்காலங்கள் வரவே வராதா?

மற்ற மாநிலங்களிலெல்லாம் இதுபோன்ற நெடுஞ்சாலைகளை விமானப்படை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா?

இப்படியாக எத்தனையோ கேள்விகளை கேட்கலாம். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பதில் வரவே வராது; ஆனால் வெகுஎளிதாக ஆன்ட்டி ஹிந்தியன், தேசத்துரோகி, நக்சலைட், மாவோயிஸ்ட், தீவிரவாதி என்ற பட்டங்கள் மட்டும் சட்டென வந்து விடும். இங்கே கவனிக்கவேண்டிய விசயம் என்னவெனில், இஸ்ரோ முதற்கொண்டு அணு உலை வரைக்குமான எல்லாவற்றையும் தென்னகம் தான் தன்னகத்தே கொண்டிருக்கிறது; வாழ்வோ சாவோ எல்லாவற்றிலும் பரிசோதனை முயற்சிக்கு பயன்பட்டுக்கொண்டிருப்பது தமிழர்களும், தமிழ் மண்ணும் தான். இனி, சீனா - அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் இலங்கை போன்ற நாலாந்திர நாடுகளின் உதவியோடு தமிழ்க்கடலோரம் போர் முற்றுகையிட்டால் ஒட்டுமொத்த ஹிந்தியமும் வீழ்ந்து போகும். ஆனால் அதற்கு முன்னரே தமிழினம் சின்னாபின்னமாகும். இதன் அறிகுறியாகவே தமிழ்ச்சாலையான கிழக்கு கடற்கரையோர சாலையை விமானப்படை மறைமுகமாக கையகப்படுத்திருக்கிறது.

ஹிந்தியத்தின் லட்சணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரண்டுமே கூகிள் மேப் தான்; ஒன்று கூகிள்.கோ.யூகே, இரண்டாவது கூகிள்.கோ.இன்; முதல் படத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூகிள் மேப்பின் படி, ஹிந்திய வரைபடத்தில் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பூகோள ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக உள்ள ஹிந்திய கூகிள் மேப்பின் படி, ஒருங்கிணைந்த ஹிந்தியாவிற்குள் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் பூகோள ரீதியாக உள்ளிருக்கிறது. குறைந்தபட்சம் உலகளாவிய இந்த கூகிள் மேப்பிலாவது, ஒற்றை தேச அடையாளமான வரைபட எல்லையை வரையறுத்து, அதை டிஜிட்டலில் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றர்கள் தான் அவசர காலங்களில் இம்மண்ணை காப்பாற்ற போகிறார்களா?

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps #Hindia #China #Pakistan #Map #hindustan