05 ஆகஸ்ட் 2017

ஓவியா செய்த இரண்டே தவறுகள்!




01. பொம்பள ஆரவ்வான காயத்ரியை நம்பியது; காயத்ரியிடன் வாக்கு கொடுத்ததால், தன் இயல்பான அடிப்படை குணங்களில் ஒன்றான வெளிப்படையான கருத்தை சொல்லாமல் தன்னுள்ளேயே மறைத்து கொண்டது. அது ஓவியாவின் குணாதிசயம் இல்லை என்பதால் தான், ஓவியாற்குள் ஏற்பட்ட முதற்குழப்பம்.

02. ஆம்பள காயத்ரியான ஆரவ் மீது அளவுக்கதிகமான அன்பை வைத்தது; அன்புக்கு ஏங்கிய ஓர் அபலையின் ஆன்ம ஈடேற்றம் போல, மருத்தவரிடமும், பிக்பாஸுடமும், கமலுக்கு முன்பாகவும், வெளியேறிய மேடையான பொதுவெளியிலும் ஆரவ்வை காதலிக்கிறேனென வெளிப்படையாக சொன்னது. இதுதான் இரண்டாவதும் இறுதியானதுமான ஓவியாவிற்குள் ஏற்பட்ட குழப்பம்.


இந்த இரண்டிலும் தான், ஓவியா எனும் மனதிற்கு நெருக்கமானதொரு பெண்ணை உணர முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் இதுவரை ஆட்டோகிராஃப் சேரன் போல ஒன்றுக்கும் மேற்பட்ட 'ஐ லவ் யூ!'க்களை நேரடியாக எனக்கு பிடித்த பெண்களிடம் உணர்வுப்பூர்வமாக சொல்லிருக்கிறேன்; கடைசியில் எல்லாமே ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் போல தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. இம்முறை எவ்வித வெட்கமும் சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஓவியாவுக்காக பொதுவெளியில் சொல்லத்தோன்றியது.

ஐ லவ் யூ ஓவியா!

ஆரவ்வோ அல்லது அவரை விட மிகச்சிறந்த வேறு யாரோ ஓவியாவுக்கு பிடித்த மாதிரியான ஒருவர் வாழ்க்கைத்துணையாக வர இறைவனை பிராத்திக்கிறேன். இனிவரும் நாட்களெல்லாம் வாழ்வில் வெற்றியாக அமையவாழ்த்துகள் ஓவியா!

- இரா.ச. இமலாதித்தன்

#BiggBoss #Oviya #OviyaArmy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக