25 ஆகஸ்ட் 2017

விவேகம் - சிறு பார்வை!

இல்லுமினாட்டி போன்ற ரகசிய அமைப்புகளை பற்றியும், அப்படிபட்ட அமைப்புகளின் கொடூர நோக்கங்களையும், அவர்களால் திட்டமிடப்பட்டு திணிக்கப்படும் போர்வெறியையும், அவர்களின் வணிகத்திற்காக உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகளையும், நவீன கடவுளாகி போன பணம் மற்றும் தங்கம் என்ற உச்சபட்ச வணிகப்பொருள் பற்றியும், செய்தி ஊடகத்தை பயன்படுத்தி அரசாளும் அவர்களது தந்திரத்தையும் வெளிப்படையாக சொல்லிருக்கும் எம் சோழ மண்ணின் மைந்தனும் - எம் உறவினருமான இயக்குனர் சிவாவின் துணிச்சல்மிகு கதைக்களத்திற்கு முதற்வாழ்த்துகள்! சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஆண்டு கொண்டிருக்கும் நிஜ ஆண்டைகளான இந்த ஆளும் வர்க்கத்தின் கோர முகத்தை வெளிக்காட்டும் கதையையே தன் படத்தின் கதைக்கருவாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் தல அஜித்குமாருக்கு, தளபதி விஜய் ரசிகனாகவாழ்த்துகள்!

விவேகத்தில் பல இடங்களில் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும் (எண்ணம் போல் வாழ்க்கை) எண்ணங்களின் வலிமையை பற்றிய ரகசியத்தை உடைத்திருக்கும் இயக்குனர் சிவாவின் விவேகம் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்த இவ்வுலகின் எதிரிகளான சீக்ரெட் சொசைட்டிகளை, நேர்மறையான எண்ணங்கள் மூலம் நிச்சயமாக வெல்ல முடியுமென்ற சீக்ரெட்டை சொல்லிருக்கும் திரைக்கதையின் இந்த யுக்தியே ஒருவித விவேகம் தான். இது உலகத்தரமான சினிமாவாயென தெரியாது; ஆனால் உலகத்தையே ஆளும் உண்மையான எதிரிகளை தோலுரிக்கும் சினிமா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளி, திரையரங்கில் படத்தை பார்த்து மகிழுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்


மாற்றுக்கருத்துகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் கூட எளிதாக கடக்க தெரியாதவர்களெல்லாம் கடைசி வரை இவ்வாழ்வின் காலடியில் தான் விழுந்து கிடக்க வேண்டும். ப்ளூ சட்டை மட்டுமல்ல; ஆடையென்ற குறிப்பிட்ட எந்தவொரு அடையாளமுமற்ற எத்தனையோ விமர்சகர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்; அவர்களையெல்லாம் கடந்து செல்லாமல், இங்கே பயணிக்கவே முடியாது. இதை 'தளபதி' விஜய் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது வட்டம்'; ஏற்ற இறக்கத்தை உணர்ந்து வேகமாக சுழன்று கொண்டிருக்க பழகுங்கள். அதுவே 'தல' அஜித் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது நேர்கோடு'; மேடு பள்ளங்களை கண்டு கொண்டு வேகமாக நகர பழகுங்கள்.

விவேகமும் முக்கியம்.

- இரா.ச. இமலாதித்தன்


கொசுறு:

சீக்ரெட் சொசைட்டிகளை பற்றி 'அறந்தாங்கி அகமுடையார்' வகையறாவை சேர்ந்த சிறுத்தை சிவா விவேகம் படத்தில் சொல்லிருக்கும் ரகசியத்தை, ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து வைத்திருந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் விவேகமுடன் கூடிய வீரம் போற்றதக்கது. அதனாலேயே உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத கொடூரம் மாமன்னர் மருதுபாண்டியர்களின் மரணத்தில் நடந்தது. அவர்களுடைய குடிவழி ஆண் வாரிசுகளிலுள்ள பச்சிளம்குழந்தைகளை கூட விடாமல் கொன்றொழித்து, அந்த ரகசியங்களை தற்காத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி என்னும் அரசக்கூலிப்படை.




#Illuminati #Marudhu #Sivagangai #Agamudayar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக