05 ஆகஸ்ட் 2017

செம்பியன் மாதேவியார்!



பெரும்பாலான கோவில்கள் இன்றைக்கும் எஞ்சி நிற்கும் விதமாக கற்றளிகளாக மாற்ற காரணமாக இருந்த (அடியேனின் நட்சத்திரமான) கேட்டை நட்சத்திரத்தில் உதித்த, கோட்டை கட்டி வாழ்ந்த எங்கள் பெரும்பிராட்டி செம்பியன்மாதேவி கட்டியெழுப்பிய கோவிலில் இன்றைய மாலைப்பொழுது கடந்து கொண்டிருக்கிறது.

உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவரை வளர்த்தெடுத்து அரியணையேற்றிய அவரது பாட்டியின் பெயரான செம்பியன்மாதேவியின் பெயரிலேயே இவ்வூரும் மீளுருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இவ்வூருக்கான கூடுதல் சிறப்பு. மேலும் இந்த ஊருக்கு சுற்று வட்டாரத்தில் தான் எங்கள் உறவினர்களின் ஊர்களும், அடியேன் படித்து வளர்ந்து ஊர்களும் இருக்கிறதென்பது பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறேன். ஆண்டுதோறும், செம்பியன்மாதேவி அவதரித்த மார்கழி மாத கேட்டை திருநாளில் பெண் வீட்டார் சீதனம் எடுத்து கொண்டாடப்படும் விழா காலம்காலமாக இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.


- இரா.ச. இமலாதித்தன்

#கேட்டை #ராஜராஜசோழன் #செம்பியன்மாதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக