பார்வர்ட் ப்ளாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்வர்ட் ப்ளாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஏப்ரல் 2017

பெருந்தமிழர் பெருமாள்தேவருக்கு புகழ் வணக்கம்!



இன்றைக்கு எத்தனையோ நூல்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்ற அகமுடையார். அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது. இன்றைக்கு அகமுடையாரை தரம் தாழ்த்தி பதிவிடும் நபர்களும் இந்த பெருமாள் தேவரின் எழுத்துகளை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. இதன் மூலமாகவே எழுத்தில் யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

முத்துராமலிங்கத் தேவர் தன் சொத்துகளை பிரித்து பலருக்கும் கொடுத்த போது, அதை ஓர் அறக்கட்டளையாக்க வேண்டுமென மெனக்கெட்டு செயல்படுத்தி காட்டியவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர். அருப்புக்கோட்டையில் இராமுத்தேவரின் மகனாக அவதரித்த இவர், பதிமூன்றாம் வயதிலேயே அரசியலில் காலடி பதித்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1971, 1974ம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடிய அரு.இரா. பெருமாள் தேவர், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசியத்தலைவராகவும் இருந்தார் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விசயம்.

இப்படியான ஆளுமையைக் கொண்டு தேசியக்கட்சியில் பணியாற்றி, எழுத்தாளராகவும், அரசியல் வாதியாகவும், பொதுவுடைமை சித்தாந்தவாதியாகவும், கொள்கை பிடிப்போடு கடைசிவரை திகழ்ந்த ஏ.ஆர்.பெருமாள் தேவரின் 19ம் ஆண்டு நினைவேந்தல் (17.05.1921 - 21.04.1998) இன்று! பெருமைமிகு பெருந்தமிழருக்கு அடியேனின் புகழ் வணக்கம்!

11 மார்ச் 2016

அரசியல் களத்தில், நேதாஜியின் பேரனும் - பசும்பொன் தேவரின் பேரனும்!


நேதாஜியின் பேரனுக்கு கூட நேதாஜி உருவாக்கிய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்காததால், இன்றைக்கு அவர் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக்க பட்டிருக்கிறார் என்பதுதான் சமகால அரசியல் நிலவரம்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தற்போது ஓரளவுக்கு அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்படுகின்ற பார்வார்ட் ப்ளாக் கட்சியும், அ.இ.அ.தி.மு.க போல அகில இந்திய கட்சிதான் என்ற நிலைக்கு மாறி போய்விட்டது. அப்படிப்பட்ட பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்த பசும்பொன் தேவரின் பேரனுக்கும் கூட பார்வார்ட் ப்ளாக் கட்சி உரிய அங்கீகாரம் கொடுக்காததால் தனியாக பசும்பொன் தேசிய கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இதையே சாதகமாக சொல்லக்கூடும். 'பார்த்தீர்களா, நேதாஜி பேரனோ, பசும்பொன் தேவர் பேரனோ யாராக இருந்தாலும், அவர்களை கட்சியில் இணைக்காமல் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்காத கட்சியாக பார்வார்ட் ப்ளாக் கட்சி விளங்குகிறது' என வாதத்திற்காக சொல்லிக்கொள்ளலாம்.

சாமானியனாக என் பார்வையில், இருபெரும் தலைவர்களின் பேரன்களும் அரசியல் பக்கமே வராமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அரசியலில் பயணிக்க விருப்பம் இருக்கும் போது, அதை பார்வார்ட் ப்ளாக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டதென்றே தோன்றுகிறது.

நேதாஜியும், பசும்பொன் தேவரும் வளர்த்தெடுத்த கட்சியில் அவர்களது பேரன்களை கூட உறுப்பினராக்க முடியவில்லை என்ற எதார்த்தமும் புரியாமல், சாதிக்கட்சி என்று முத்திரையும் குத்தப்பட்டதென்ற உண்மையும் உணராமல், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள பார்வார்ட் ப்ளாக் கட்சி, குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது அதிமுக கூட்டணியில் வாங்கி, கட்சியை பலமாக்காட்டும்.

ஜெய்ஹிந்த்!

- இரா.ச. இமலாதித்தன்

06 பிப்ரவரி 2015

பார்வார்ட் ப்ளாகிற்கு பின்னால் தேவர் சாதி அமைப்புகள்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரால் தமிழகத்தில் உச்சம் தொட்ட அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியை இன்றைக்கு யார் யாரோ வளர்த்தெடுக்க, கைப்பற்ற நினைக்கிறார்கள். நல்ல விசயம். ஆனால், ”பசும்பொன் தேவரின் பேரன்” என்ற அடையாளத்தோடு அரசியலில் கால் பதித்த திரு.வெள்ளைச்சாமித்தேவரோ, அவருக்கு பின்னால் அரசியலில் நுழைந்த அவரது அண்ணன் திரு.ஜோதி முத்துராமலிங்கத்தேவரோ, ஏன் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணையாமல் தனியாக, ’பசும்பொன் தேசிய கழகம்’ என்ற அமைப்பில் இருக்க காரணம் என்ன? தேவரின் பேரன் என சொல்லும் இவர்களையே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைய தடுப்பது யார்? எது இவர்களுக்கு இடையூறாக இருக்கின்றது? தேவரை வைத்து தெருவுக்கு தெரு கட்சி - அமைப்பு - பாசறை - கழகம் - இயக்கம் என அரசியல் செய்யும் யாருக்கும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பமில்லையா?

14 நவம்பர் 2014

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்