சின்ன மருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன மருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26 நவம்பர் 2017
12 நவம்பர் 2017
24 அக்டோபர் 2017
மாமன்னர்களுக்கு புகழ் வணக்கம்!
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஏகாபத்தியத்திற்கு எதிராக ஐநூற்று தமிழர்களை பலிகொண்ட கொலைக்களம் எம் தமிழ்மண்ணான திருப்பத்தூர். காரணம் ஒன்றே; அது இன விடுதலையுடன் கூடிய மண்ணுரிமை தான். ஆங்கிலேயனுக்கு எதிராக, அனைத்து சிற்றரசர்களையும் ஒருங்கிணைத்து "வீர சங்கம்" என்ற மாபெரும் புரட்சி கூட்டணியை உருவாக்கி, ஜம்புத்தீவு போர் பிரகடனத்தை வெளியிட்ட எம் தமிழினத்தின் தலைமகன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம், துரோகிகளாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்ட மாதமிது. எனக்கான முன்னுதாரணம் இவர்கள்; மாபெரும் வீரம்பொருந்திய இம்மண்ணின் மைந்தர்கள்; புறநானூறு சொன்ன அகத்தமிழர்கள்; ஆதித் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளங்களாகி போன மாமன்னர்கள், எங்கள் மருதுபாண்டியர்கள்!
எம் முப்பாட்டன்களான மருதரசர்களுக்கு புகழ் வணக்கம்!
11 ஜூன் 2017
216 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடன நிகழ்வு!
மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்தது அகமுடையார் இனக்குழு என்பதால் அவரை அகமுடையார் இனக்குழுவை சேர்ந்தவர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக, அம்பேத்கர், ஈ.வெ.ரா., வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் போன்றவர்களை தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர்; இப்படி இவர்களை பலரும் பயன்படுத்துவதால் எவ்வித குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை. எத்தனை பேர் இவர்களின் படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தினாலும் கூட அவர்களது தனித்த அடையாளம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை.
தாய் மண்ணில் கோலோச்சிய அந்நியர்களின் அடக்குமுறைக்கு எதிராக, அனைத்து இனக்குழுக்களையும் இணைத்து தான் 'வீரசங்கம்' என்ற அரசியல் கூட்டமைப்பையே மருதுபாண்டியர்கள் உருவாக்கினர். பொது ஆண்டு 1801 ஜுன் மாதம் 12ம் தேதி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகிலேயே முதன் முதலாக 'ஜம்புத்தீவு' போர் பிரகடனத்தை 'வீரசங்கம்' என்ற கூட்டமைப்பின் சார்பாக திருச்சி-திருவரங்கத்தில் சின்ன மருதுபாண்டியர் வெளியிட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்டு 216 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது சராசரியாக 33 ஆண்டுகள்; அந்த வகையில் கணக்கிட்டால், ஏறத்தாழ ஏழு தலைமுறைகள் கடந்து, இந்த 2017ம் ஆண்டில் தமிழ்தேசியவீரச்சங்கம் சார்பாக திருச்சி திருவரங்கத்தில் மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வு ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. மாமன்னர் மருது பாண்டியர்கள் 216 ஆண்டுகளுக்கு முன்பாக, எந்தவொரு குறிப்பிட்ட இனக்குழுவின் அடையாளமுமின்றி 'வீரசங்கம்' என்ற எப்படியான கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புத்தீவு' பிரகடனத்தை வெளியிட்டனரோ, அதே போன்ற நிகழ்வை தமிழ் தேசிய வீரச்சங்கம்அமைப்பினர் மீண்டும் நம் சமகாலத்தில் அந்தவொரு களத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ் தேசிய அடையாளத்தோடு அரசியலில் பயணிக்கும் பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், தனியரசு உள்ளிட்ட அனைத்து தமிழ் இனக்குழுவை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இப்படியான மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வை ஒருங்கிணைக்கும் சகோ. மருதுபாலா உள்ளிட்ட அனைத்து உறவினர்களுக்கு நன்றியும், விழா சிறக்க வாழ்த்துகளும்!
தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீது உணர்வுள்ளவர்களும், ஜூன் 12ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சி திருவரங்கத்தில் ஒன்று கூடுங்கள்; சந்திப்போம்.
- இரா.ச. இமலாதித்தன்
20 ஏப்ரல் 2017
மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264வது புகழ்வணக்கம்!
சிவகங்கையை கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை ஆண்ட மருதிருவரில் ஒருவரான மாமன்னர் சின்ன மருது அவர்கள் பிறப்பெடுத்த நாள் இன்று. பூமாரங் என்ற வளரி வீச்சை பற்றி இன்று உலகெங்கும் பேசப்பட்டாலும், அதை வெள்ளைக்காரனுக்கு கற்றுக்கொடுத்து ஆவணப்படுத்திய பெருமைக்கு காரணமாக இருந்திருக்கிறார் சின்ன மருது. உருவத்தில் கருத்த நிறத்திலும், உள்ளத்தில் வெள்ளையாகவும் திகழ்ந்த சின்னமருதுவின் சிவந்த இரத்தம் தான் சிவகங்கை மண்ணின் வீரத்தின் அடையாளமாக இன்றளவும் திகழ்கிறது.
உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பியர்களுக்கு எதிராக திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் கி.பி.1801 ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 'ஜம்புத்தீவு பிரகடனம்' வெளியிட்ட பெருமைக்குரியவர் சின்ன மருது. தன் குடிவழி முழுக்க அழித்தொழிக்கும் எண்ணத்தில் செயற்பட்ட ஐரோப்பிய இழிபிறவிகள் கூட்டத்தை சேர்ந்த வெல்ஷ் என்ற வெள்ளையன் கூட சின்னமருதுவின் மகன் துரைசாமியை இயலொணா நிலையில் கண்டதை பற்றியும், சின்னமருதுவின் வீரத்தை பற்றியும் கண்ணீர் ததும்ப பதிவு செய்திருக்கிறார்.
கரடி கருத்தான் போன்ற துரோகிகளின் கூட்டத்தினரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் கூட, தாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரம் தகர்க்கப்படக் கூடாதென்பதற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்தார் சின்னமருது. தங்கள் மன்னன் மட்டுமா இறப்பது? அவர்களோடு நாங்களும் செத்து மடிகிறோமென சூளுரைத்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ல் உயிர்கொடை தந்தனர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகளாகி போனது. அப்படிப்பட்ட தியாகத்திற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் பெயர்போன சின்னமருதுவை இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நெஞ்சில் வைத்து போற்றுவோம்!
எம் முப்பாட்டான் மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264ம் ஆண்டு புகழ் வணக்கம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)