31 ஜூலை 2017

ரேசன் பொருட்கள் மானிய ரத்து - ஒரு பார்வை



வயல்களெல்லாம் வீடுகளாகி பல வருடங்கள் ஆகியாச்சு. ஊரோர ஒதுக்குபுறமெல்லாம் நியூ சிட்டிகளாகவும், புது நகரங்களாகவும் மாறி, முப்போகம் விளைந்த நிலங்களிலெல்லாம் வீடுகள் முளைத்து நிற்கின்றன. ப்ரீட்ஜுக்கு முன்பாகவே புளிசோறுவை கண்டுபிடித்த ஆதித்தமிழனின் எச்சங்களெல்லாம் ஏசி, ப்ரீட்ஜ்களோடு வாழத்தொடங்கி வருடங்கள் பல கடந்து விட்டன. குழந்தைகளாலும் மருமகள்களாலும் கைவிடப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பென்ஷன் பணத்தையும் ரேசன் மானிய பொருட்களையும் நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதே எதார்த்தம்.

கல்விக்கு லோன் தர மறுக்கும் இதே வங்கிகள் தான், காருக்கு லோன் தர நடையாய் நடக்கிறார்கள். டோல்கேட் தொடங்கி ஜி.எஸ்.டி. வரைக்கும் வரிகட்டியே வாழ்க்கை நடத்தும் அனைவரையுமே பான்கார்டு முதற்கொண்டு ரேஷன்கார்டு வரைக்கும் ஆதார் கார்டோடு இணைக்க சொல்லும் போதே தெரியும்; ஹைடெக் பிச்சைக்காரர்கள் அதிகம் வாழும் நாடாக ஹிந்தியா மாறுமென!

த்தூ... உங்க ரேஷன் பொருட்கள் மட்டுமல்ல; உங்க டெல்லியும், உங்க ஹிந்தியும், உங்க ஆட்சியும் கூட எங்களுக்கு வேண்டாம். ஜென்ம சனி போல் பாடுபடுத்தும், எம்மை விட்டு எப்போது தொலையப் போகிறீர்கள்? அறுபது ஆண்டுகாலம் இல்லாது சமீப காலங்களாக அடிமையாக்க நினைக்கும் வடக்கத்திய ஆண்டைகளே, எம்மண்ணை எமக்கே கொடு; நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.

ஒருபக்கம், தமிழ்நாட்டை தாங்கள் தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் பாஜகவின் பினாமி ஆட்சியான எடப்பாடி அரசாங்கமோ மாநிலத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதமானவர்களுக்கு மாத சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

மறுபக்கம், அம்பானி - அதானி போன்ற வணிகர்களுக்கு பினாமியாக இருந்து கொண்டு, மதத்தையும் - பேச்சையும் மட்டுமே முதலீடாக கொண்டு மாநிலங்களிலெல்லாம் குட்டைகளை குழப்பி ஆட்சியென்ற மீன் பிடிக்கும் ஹிந்திய அரசாங்கமோ, நடுத்தர/ஏழை குடும்பங்களின் வாழ்வாதரங்களில் ஒன்றான மானியமாக தரப்பட்ட ரேசன் பொருட்கள் வரைக்கும் ரத்து செய்ய துடிக்கிறது.

சவலப்பிள்ளை போல தலை மட்டும் பெரிதாகி, உடல் முழுதும் சுருங்கி கிடக்கும் வருங்கால வல்லரசுக்கு நடுத்தர வர்க்கத்தில் பிறப்பெடுத்த உழவர் பெருங்குடி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கூகிள் மேப்ஸ் - தமிழ் ஊர்ப்பெயர்கள்!



ஹிந்தியா முழுமைக்கும் ஹிந்தியை திணிக்க முயல்கின்ற வேளையில், கூகிள் மேப்ஸ் நிறுவனமானது தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் மொழியிலேயே கொடுத்திருப்பது மகிழ்ச்சியான விசயம் தான். இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்; ஏனெனில் ஹிந்தியா முழுமைக்குமான பகுதிகளிலுள்ள ஊர்ப்பெயர்கள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் அந்தெந்த வட்டார மொழியிலேயே கொடுத்திருக்கிறது கூகிள். இதற்கிடையில், மொழி வழியே உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டி வேண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக எங்கள் டெல்டாவை எடுத்துக்கொண்டால், இங்குள்ள கணிசமான ஊர்ப்பெயர்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


(எ-டு)

மணக்கரை - மன்னரை
பாலக்குறிச்சி - பலக்குறிச்சி
கச்சநகரம் (கச்சனம்) - கட்சணம்
ஆலத்தம்பாடி - அளத்தம்பாடி
கொருக்கை - கோரிக்கை
தலைஞாயிறு - தலைநயர்

இப்படி பலப் பெயர்கள் திருத்தப்பட வேண்டிருக்கிறது. இதுபோலவே மற்ற மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஊர்ப்பெயர்களும் பிழையோடுதான் இருக்கக்கூடும். அதையும் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps

25 ஜூலை 2017

பிக்பாஸ் - கொசுறுகள்!


காயத்ரி - ஜூலி - நமீதா

சீரியல் வில்லிகளுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களையெல்லாம் விட கேவலமான மனநிலை இவளுக கிட்ட இருக்கு. என்ன மாதிரியான கேடு கெட்ட ஜென்மங்க இவளுக? த்தூ...

***

தான் நடித்த குறும்படத்தையெல்லாம் பற்றி வாயை திறக்காமல் அதை மறைத்து பொதுஜனம் போல ஏமாற்றிய பச்சோந்தி ஜூலியை விட, 'என்க்கு டமில் கொஞ்சம் கொஞ்சும் தான் வரும்' என சீன் போடும் நடிகைகளுக்கு மத்தியில் 'நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன்' என வெளிப்படையாக சொன்ன ஓவியா ஒருபடி மேல் தான்!

(எங்கள் பள்ளி: அரசு மேல்நிலைப்பள்ளி, தேவூர், நாகப்பட்டினம்)

***

கமல்ஹாசனை புகழ்வதற்காக பரமக்குடியை பலரும் அடிக்கடி பயன்படுத்தி கொ'ல்'கிறார்கள். 'எல்லாத்துக்கும் காரணம்' பரணியும், 'அக்கா அக்கா' என சசிகலாவை நினைவுபடுத்தும் ஜூலியும் கூட பரமக்குடி தான் என்பதை அந்த பலரும் வசதியாக மறந்து விடுகிறார்கள். தமிழக பாஜக தலைவர்களுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் மட்டுமல்ல; பிக்பாஸ் பார்ப்பவர்கள் அனைவருக்குமே தற்போதைய சூழலில் பரமக்குடி தான் பிரச்சனையே!

***

மீசை முளைக்காதது; பல்லு போனது; தாடி நரைத்தது; தலைமுடி கொட்டியது; தொப்பை;
வத்தல்; நெட்டை; குட்டை; கருப்பு; சிவப்பு; திக; கம்யூனிஸ்ட்; பாஜக; காங்கிரஸ்; திமுக; அதிமுக; தல தளபதி குரூப் என அனைத்து தரப்பட்டவர்களாலும் சூழப்பட்ட 'ஃபேஸ்புக் - ட்விட்டர்' என எல்லா பக்கமும் ஓவியா எனும் ஒரு நாயகி உருவாகிறாள்!

***

நூறு சிவாஜி, ஐம்பது நாகேஷ், பத்து மனோரமாவை தனக்குள் கொண்டுள்ள ஒரு திறமைமிகு நடிகையை தமிழ் சினிமா தத்தெடுத்து, கலைத்துறைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

வெல்கம் ஜூலி :)

***

பிக் பாஸ் வீட்டை 'ஃபைவ் ஸ்டார் ஜெயில்' என நமீதா சொன்ன உடனேயே கொஞ்சம் கூட யோசிக்காமல், சசிகலாவையும் - பார்பன அக்ரஹாராவையும் பற்றி மறைமுகமாக தாக்கி ரியாலிட்டி ஷோவிலும் அரசியல் பேசிய கமலின் யுக்தி அழகு!

***

வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது என்பதை போல, பிக்பாஸுலும் லூசு கூமுட்டை மாதிரி பேசிக்கிறாய்ங்க. நமீதாவை விட ஓவியா பேமஸா என கேட்கும் இவர்களின் பொது புத்திக்கு, பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதெல்லாமே தெற்கத்தியர்கள் தான் என்பதை மார்க்கெட்டில்லாத கோலிவுட் அரைகுறைகளுக்கு ஏன் தெரியவில்லை?

***

ஜூலி: அக்கா, நான் வெளிய போன என்னை எல்லாரும் காரி துப்புவாங்கன்னு ஓவியா சொல்றாக்கா?
காயத்ரி: என் கூடவே இரு; நான் தான் இருக்கேன்ல?!

இன்னும் கொஞ்ச நாளுல நீயே அங்க இருப்பியான்னு தெரியல. இந்த லட்சணத்துல அந்த 'பேமஸ்' டயலாக்கை வேற சொல்லிக்கிட்டு திரியுறியா நீ?

***

ஆரம்பத்திலிருந்து காயத்ரி-ஜூலியை பார்க்கும் போது அரசியல் சகோதரிகளான ஜெ-சசி தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது; இது எனக்கு மட்டும் தானோயென்று நினைத்திருந்தேன்; ஆனால், இதே விசயத்தை பலரும் சொல்வதை பார்க்கையில் மனநிறைவை தருகிறது.

***

பிக்பாஸூல் தினமும் காலையில் அவர்களையெல்லாம் எழுப்பும் விதமாக ஒலிபரப்பப்படும் பாடல்கள் எல்லாமே சமூக ஊடகங்களின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. ஓவியா சோகமாக இருந்தப்போ காலையிலேயே சோகபாட்டு, ஓவியா சந்தோசமா இருந்தப்போ 'செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டாளே' என டைமிங் பாடலென சமூக ஊடகங்களில் இயங்கும் புரட்சிப்படையின் மனசாட்சியையே எழுப்புகிறார்கள்.

***

ஜூலி என்ற வீரப்பெண்மணி போருக்கு தயாராகிட்டு இருக்குதாம்...
யோவ், காலா காதுல கேட்குதா?!

***

"உண்மையை சொல்லத்தான் தைரியம் வேண்டும்; பொய் சொல்ல பயமே போதும்; ஒருமுறை உண்மை பேசிப் பார்; உன்னை நீயே பெருமையாக உணர முடியும்!"

- 'கயல்விழி' ஓவியா

***

எதிரே இருப்பது கமலாகவே இருந்தாலும் மற்றவர்கள் போலவும், 'ஓவர் ஆக்டிங்' ஜூலி போலவும் நடிக்காமல் தன்னுடைய தனித்துவத்துவ அடையாளமான, கபடமற்ற கண்களின் வழியே சிரிப்பு - வெளிப்படையான பேச்சு - தப்பென தோன்றினால் மன்னிப்பு கேட்பதும் - சரியென தோன்றினால் கெத்தா இருக்கிறதும் - மனசுல பட்டதை யாருக்கும் பயப்படாமல் பேசுவதும் தான், ஓவியா! என்பதை மீண்டுமொருமுறை இன்றும் நிரூபணம் செய்திருக்கிறார்.

***

கண்ணகிக்கு போட்டியாக மாதவி வந்ததாக இலக்கியங்கள் கூறலாம்; ஆனால் இன்றளவில் எத்தனை பிந்து மாதவி வந்தாலும், ஓவியாவை முந்த வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கே யாரும் கோவலன் இல்லை!

#OviyaArmy #SaveOviya #Oviya #BiggBoss #Rajini

17 ஜூலை 2017

புதிர்கள் நிறைந்த ஆடி மாதம்!

திருமணமான புதுமண தம்பதிகளை ஆடி மாதம் விலகி இருக்க சொல்லிவிட்டு, "ஆடி பட்டம் தேடி விதை!" என உழவிற்கு மட்டும் உயிரூட்டியது எதற்கென புரியவில்லை. முதலாவது தாம்பத்யம் சார்ந்த விசயத்தை பற்றி பேச வந்தால், அதற்கொரு கணக்கு சொல்லப்படுகிறது. ஆடியிலிருந்து பத்தாவது மாதம் சித்திரை வரும்; அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆடி மாதம் தம்பதிகள் ஒன்றிணைந்து கரு உருவாகி விட்டால் அது சித்திரையில் குழந்தையாக பிறக்கும்; அப்போதுள்ள சித்திரை வெயிலின் தாக்கத்தை அக்குழந்தையால் தாங்கி கொள்ள முடியாதென அறிவியல் சித்தாந்தங்களும் சொல்லப்படுகிறது.  புதுமண தம்பதிகள் இல்லாத மற்றவர்களோ அல்லது திருமணமாகி ஒரு வருடத்தை கடந்தவர்களோ, ஆடியில் தாம்பத்ய உறவாடி சித்திரையில் பிள்ளை பெற்றெடுக்க மாட்டார்களா? அப்படி பெற்றெடுத்தால் அப்போது சித்திரை வெயில் அக்குழந்தையை பாதிக்காதா?

அடுத்து, ஆடியில் விதை விதைத்தால் தையில் அறுவடை செய்யலாம் என்ற முதுமொழியும் கூட நெல் சார்ந்த உழவர்களுக்கு மட்டுமே பொருந்த கூடியதாக இருக்கிறது. ஆனால், சிறு தானியங்களை விதைத்துண்ட உழவர்களுக்கு இந்த ஆடி முதலான தை வரையிலான ஆறு மாத கணக்கெல்லாம் தேவையே இல்லை. மேலும், நெல் சார்ந்த சாகுபடியையே மூன்று போகம் விளைவிக்க செய்து பழக்கப்பட்டவர்களுக்கும் கூட, ஆடி மாத கணக்கெல்லாம் பயனற்ற ஒன்று.

பன்னிரு மாதங்களும், தட்சிணாயணம் - உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. தை முதலான ஆறு மாதங்கள் உத்திராயணம் என்றும், ஆடி முதலான ஆறு மாதங்கள் தட்சிணாயணம் என்றும் வகைப்படுத்த பட்டிருக்கிறது. சூரிய வட ஓட்டத்தை (உத்திராபதி) உத்திராயணம் என்றும், சூரிய தென் ஓட்டத்தை (தெட்சிணாமூர்த்தி) தட்சிணாயணம் என்றும் சொல்வதும் ஏதோவொரு குறியீடாகவே தோன்றுகிறது. தையை முதலாக கொண்ட ஆறு மாதங்களான உத்திராயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய பகல் பொழுதாகவும், அதுபோல ஆடியை முதலாக கொண்ட ஆறு மாதங்களான தட்சிணாயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய இரவு பொழுதாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றனர். குழப்பம் நிறைந்த இவற்றை பற்றியெல்லாம் சொல்ல நிறையவே இருக்கிறது.

இப்போது இரவின் நடுநாயகமாக திகழும் நிலவை பற்றி பார்ப்போம்.
தானே ஒளிரக்கூடிய தன்மையில்லாமல் சூரியனின் ஒளியை உட்கிரகித்து வெளிச்சம் கொடுத்தாலும் நிலவானது, நம் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகவும், தெளிந்த அறிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும் வல்லமையையும் உடையதாகவும் இருக்கிறது. ஜாதகத்தில் கூட சந்திரன், மனதிற்கான மனோ காரகன் என்றே சொல்லப்படுகின்றது. ஒருவரின் ஜாதக கட்டத்தில் சந்திரன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிறதோ, அதுவே அந்த ஜாதகரின் ஜென்ம ராசியாகவும் கணிக்கப்படுகின்றது.

இந்த ஆடி மாதத்தில் தான், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை,  ஆடி பெளர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என சிறப்புமிகு நாட்களும் அதிகமாக வருகின்றது. மேலும், முன்னோர்களின் ஆன்ம அலைகளோடு தொடர்பு கொள்ள ஏதுவான மாதமும் இதுவே தான். என்னதான், சூரியனை தொடர்பு படுத்திய வட ஓட்டம், தென் ஓட்டம் என்ற ஆறாறு மாதங்களாக வகைபாடிருந்தாலும், நிலவை மையப்படுத்தியே ஒவ்வொரு மாதத்தின் நாட்களெல்லாம் வகைபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்க விசயமாகவும் இங்கே இருக்கிறது.

நம் முன்னோர் சார்ந்தும், குலம் சார்ந்தும், வழிவழியாக தொடர்ந்து வருகின்ற குல தெய்வ வழிபாட்டையெல்லாம் சிறு தெய்வ வழிபாடென சொல்லிவிட்டு பெருந்தெய்வத்தை பெருங்கோவில்களில் அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அந்த பெருங்கோவில்களிலும் கூட, பெளர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை வளர் பிறை - தேய் பிறை என பிரித்துதான் இரண்டு பதினைந்து நாட்களாக வழிபாடு செய்கின்றனர். (நான்காம் நாள்) சதுர்த்தி, (ஆறாம் நாள்) சஷ்டி, (எட்டாம் நாள்) அஷ்டமி, (ஒன்பதாம் நாள்) நவமி, (பத்தாம் நாள்) ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை என அனைத்து நாட்களுமே நிலவை மையப்படுத்தியே பகுக்கப்பட்டு விழாவாக பெருங்கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் என்பதே முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் மாதம். அதனால் தான் அம்மாதத்தில் ஆறு, கடல்களில் நீராடி கரையோரம் பித்ரு காரியங்கள், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றை தம் குல முன்னோர்களுக்கு கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். ஆடி முதலான ஆறு மாதங்களும் அந்த வானுலக தேவர்களுக்கு வேண்டுமானால புராணப்படி இருளாக இருந்துவிட்டு போகட்டும். பொதுவாக முதலிரவு என்பதே இருளில் நடப்பது தானே? எனவே புது மண தம்பதிகள், ஆடியில் கூடியே இருங்கள்; மாறிகிடக்கும் காலச்சூழலில் பெரும்பாலான மாதங்களில் சித்திரையை தாண்டிய வெயிலே சுட்டெரிக்கிறது என்பதால், வெயில் அதிகமுள்ள சித்திரையில் குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை; சமாளித்து கொள்ளலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

13 ஜூலை 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

07 ஜூலை 2017

எம்.எஸ்.தோனியும் 80களும்!





(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு இது)


எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.

SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம். டேப் ரெக்ராக்டர் கேசட், டெக் எனத்தொடங்கி சிடி - டிவிடி - பென்ட்ரைவ் - ப்ளூரே டிஸ்க் வரைக்கும் பதிவு செய்து பாடல்களையும், படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ப்ளாக் அன்ட் ஒய்ட் / கலர் டெஸ்க்டாப் மானிட்டரில் கணினி செயல்பாட்டை தொடங்கி LCD/LED மானிட்டர் வரைக்கும் பயன்படுத்தி வருகிறோம். பப்ளிக் டெலிபோன் பூத்களும், டெலிபோன் இன்ஸ்ட்ருமென்ட்களும், ப்ளாக் அன்ட் ஒயிட் பட்டன் வைத்த செல்போன்களும் பயன்படுத்த தொடங்கி, இன்று டச் மாடல்களான ஆன்ட்ராய்டுகளோடும் அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறோம்.

சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. முக்கால் சைக்கிள், டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer, Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்த எம்.எஸ்.தோனிக்கு(07.07.1981) இனிய வாழ்த்துகள்! :)

- இரா.ச. இமலாதித்தன்
   (21.09.1985)

(பின் குறிப்பு: தோனி பற்றி எந்த குறிப்பும் இதில் இருக்காதென்றாலும், 90க்கு பிறகு பிறந்தவர்களும் தல தல என தலையில் வைத்து கொண்டாடும் தலைமைத்துவ சூட்சமத்தை எளிய குடும்பத்திலிருந்து 80களில் பிறப்பெடுத்த தோனி நமக்கு(80's) சமகாலத்திலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்; அதற்காகவே அவர் பிறந்த நாளில், அவர் படத்தோடும், அவர் பெயரோடும் இப்பதிவு)

05 ஜூலை 2017

அகம்படியர் குல தேவி - மீனாட்சி!





"வாகை சூடும் சுகுண தேவராகும்
தமிழர் வானவ அகம்படியர் குல தேவி
வாணி மாதங்கி
திருகூடலூர் தங்கி வளர்வாம்
மீனாம்பிகை என் உமையாளே!"

- மீனாட்சி திருப்புகழ்


மதுரை மீனாட்சியை போற்றிய பாடல்களில் 'மீனாட்சி திருப்புகழ்' என்னும் பாடல் தொகுப்பும் ஒன்று. இப்பாடலை மகாகவி பாரதியாரின் சீடரான மணிமன்ற அடிகள் இயற்றிருக்கிறார்.

(நன்றி: கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன், அண்ணன் வெங்கடேஷ்)

04 ஜூலை 2017

தமிழ்த்தாய் வாழ்த்தும் - பிக் பாஸ் ஷோவும்!


கேரள ஆலப்புழாவில் பிறப்பெடுத்த பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' என்ற கவிதை நாடக நூலில் வரும் ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு அறிவித்தது. இந்நாடக நூல், லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி' என்ற நூலை தழுவி அமைந்தது என்பதும், எங்களது நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்பவரே, பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழாசிரியராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" என்ற உண்மையை உரக்கச்சொன்ன வரிகள் நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியது, (எங்க வேதாரண்யத்தை சேர்ந்தவரும் சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியருமான) தாயுமானவர் என தவறுதலாக #BiggBossடிராமாவில் ஜூலி சொல்லிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி முடிக்கிறார். அந்த நிகழ்வில் தமிழ் வாத்தியார் போல வீற்றிருந்த கவிஞர் சினேகன் வாய்மூடி மெளனியாய் வேடிக்கை பார்க்கிறார். என்ன இது, தமிழுக்கு வந்த சோதனை?

இத்தனை வருட வரலாற்றில் முதன்முறையாக விஜய் டிவியெல்லாம் தன் பெயரையே தமிழ் படுத்தி செம்மொழியை தூக்கி பிடிக்கிறதும், 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற நாடகத்தை உருவாக்குவதும், அனைத்து பொருட்களின் பெயர்களையும் ஹிந்தியிலேயே அச்சடித்து பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பாபா ராம்தேவையும் தமிழ் பேச வைத்து யோகா சொல்ல வைக்கிறதுமென தமிழை மையப்படுத்தியே விஜய் டிவியில் அனைத்தும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கு பின்புலமாக உள்ளவற்றை, எல்லாரோலும் புரிந்து கொள்வது தான் சிரமமாக இருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்