31 ஜூலை 2017

ரேசன் பொருட்கள் மானிய ரத்து - ஒரு பார்வை



வயல்களெல்லாம் வீடுகளாகி பல வருடங்கள் ஆகியாச்சு. ஊரோர ஒதுக்குபுறமெல்லாம் நியூ சிட்டிகளாகவும், புது நகரங்களாகவும் மாறி, முப்போகம் விளைந்த நிலங்களிலெல்லாம் வீடுகள் முளைத்து நிற்கின்றன. ப்ரீட்ஜுக்கு முன்பாகவே புளிசோறுவை கண்டுபிடித்த ஆதித்தமிழனின் எச்சங்களெல்லாம் ஏசி, ப்ரீட்ஜ்களோடு வாழத்தொடங்கி வருடங்கள் பல கடந்து விட்டன. குழந்தைகளாலும் மருமகள்களாலும் கைவிடப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பென்ஷன் பணத்தையும் ரேசன் மானிய பொருட்களையும் நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதே எதார்த்தம்.

கல்விக்கு லோன் தர மறுக்கும் இதே வங்கிகள் தான், காருக்கு லோன் தர நடையாய் நடக்கிறார்கள். டோல்கேட் தொடங்கி ஜி.எஸ்.டி. வரைக்கும் வரிகட்டியே வாழ்க்கை நடத்தும் அனைவரையுமே பான்கார்டு முதற்கொண்டு ரேஷன்கார்டு வரைக்கும் ஆதார் கார்டோடு இணைக்க சொல்லும் போதே தெரியும்; ஹைடெக் பிச்சைக்காரர்கள் அதிகம் வாழும் நாடாக ஹிந்தியா மாறுமென!

த்தூ... உங்க ரேஷன் பொருட்கள் மட்டுமல்ல; உங்க டெல்லியும், உங்க ஹிந்தியும், உங்க ஆட்சியும் கூட எங்களுக்கு வேண்டாம். ஜென்ம சனி போல் பாடுபடுத்தும், எம்மை விட்டு எப்போது தொலையப் போகிறீர்கள்? அறுபது ஆண்டுகாலம் இல்லாது சமீப காலங்களாக அடிமையாக்க நினைக்கும் வடக்கத்திய ஆண்டைகளே, எம்மண்ணை எமக்கே கொடு; நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.

ஒருபக்கம், தமிழ்நாட்டை தாங்கள் தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் பாஜகவின் பினாமி ஆட்சியான எடப்பாடி அரசாங்கமோ மாநிலத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதமானவர்களுக்கு மாத சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

மறுபக்கம், அம்பானி - அதானி போன்ற வணிகர்களுக்கு பினாமியாக இருந்து கொண்டு, மதத்தையும் - பேச்சையும் மட்டுமே முதலீடாக கொண்டு மாநிலங்களிலெல்லாம் குட்டைகளை குழப்பி ஆட்சியென்ற மீன் பிடிக்கும் ஹிந்திய அரசாங்கமோ, நடுத்தர/ஏழை குடும்பங்களின் வாழ்வாதரங்களில் ஒன்றான மானியமாக தரப்பட்ட ரேசன் பொருட்கள் வரைக்கும் ரத்து செய்ய துடிக்கிறது.

சவலப்பிள்ளை போல தலை மட்டும் பெரிதாகி, உடல் முழுதும் சுருங்கி கிடக்கும் வருங்கால வல்லரசுக்கு நடுத்தர வர்க்கத்தில் பிறப்பெடுத்த உழவர் பெருங்குடி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக