கபாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கபாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மே 2017

காலா - குறிப்பிடும் குறியீடு என்ன?


கரிகாலனை ஏன் கொன்றார்கள்? யார் தூண்டுதலில் கொன்றார்கள்? என்பதே புரிந்து கொள்ள முடியாத பெரிய கதை. அண்ணன் பிரபாகரனுக்கும் இதே பெயர் உண்டு. கபாலியும், காலனும் அழிக்கும் கடவுளின் பெயர்களே; காலா என்பது கருமையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பத்திற்கு இடையே, அந்த பெயரில் ரஜினியை வைத்து என்ன செய்ய போறாப்ளயோ, 'குறியீடு' ரஞ்சித்?! ஒருவேளை ரஜினி சொன்ன அந்த அக்கப்'போர்' இது தான் போல!

காலா (கரிகாலன்)



மலேசியாவில் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்து, சீன/தமிழ் தொழிலாளர்களுக்குள் சம்பள முறையில் ஏற்றத்தாழ்வு இருந்ததை எதிர்த்து களம் கண்டவர் தான் அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த தம்பிக்கோட்டையின் 'மலேயா' கணபதி தேவர். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ.விலும் பயிற்றுனராகவும் பணியாற்றியவர். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்றும் மலேயா கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோலாலம்பூர் நீதிமன்றம் மலேயா கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இவரின் வரலாற்றை ஓரளவுக்கு தழுவித்தான், தலித்திய சிந்தனையோடு 'கபாலி' திரைப்படமாக ஏற்கனவே உருவாக்கினார் பா.ரஞ்சித். அந்த படத்தில் கோட் ஷூட்டெல்லாம் ரஜினி போட்டிருந்தார்.

இப்போது மீண்டும், இந்த போஸ்டரில் ரஜினியை கைலி கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அநேகமாக இதை பார்க்கும் போது, பட்டியல் சாதி மக்களுக்காக தன் சொந்த சாதியான அகமுடையார் பண்ணையார்களையும், பண்ணையடிமை தனத்தையும் எதிர்த்து களம் கண்ட பொதுவுடைமை போராளிகளான வாட்டக்குடி இரணியன் தேவர் மற்றும் மணலி கந்தசாமி தேவரின் போராட்ட வாழ்க்கையைத் தான் கதைக்களமாக உருவாக்கி இருக்கக்கூடுமென நினைக்கிறேன். ஒருவேளை இப்படி இல்லாமல் கூட போகலாம்; ஆனால் அதற்கான தரவுகளை மணலி கந்தசாமி, வாட்டக்குடி இரணியன், ஜாம்பனோடை சிவராமன் போன்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த இப்போராளிகளின் கதையை தழுவித்தான் பொதுவுடைமை தனத்தை திரைப்படமாக்க முடியும்.

(கபாலி படம் தொடங்கப்பட்ட போது கூட, அந்த படத்தின் கதை மலேயா கணபதி தேவரின் கதையை தழுவிய படம் தானென்று ஆரம்பத்திலேயே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அப்போது அதை விமர்சித்த பலரும், கபாலி படம் வந்த பின்னால், மலேசியா நாளேடுகளும், மலேசியா தொழிலாளர் போராட்டத்தை பற்றி விவரமறிந்தவர்களும், மலேயா கணபதி தான் 'கபாலி' கதையின் நிஜ ஹீரோ என சொன்ன பின்னரே என் மீதான விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.)

- இரா.ச. இமலாதித்தன்

#Guess #அகமுடையார்




1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாக்பூரில், பீம்ராவ் அம்பேத்கர் தனது ஐந்து லட்சம் ஆதரவாளர்களோடு அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். ஆனால் ஹிந்தியாவை பொறுத்தவரை சமணம், பெளத்தம் என்ற எல்லாமே ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாகவே அடைபட்டு விடும் என்பது இயக்குனர் ரஞ்சித்திற்கு தெரியாமல் இருக்க போவதில்லை. ஆனால், இதிலுள்ள இரண்டு குறியீடுகளை மையப்படுத்தியே ரஜினி + ரஞ்சித் மீண்டுமொரு கூட்டணியில் 'காலா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தலித்திய சிந்தனையாளரான ரஞ்சித்திற்கு, மராட்டியரான ரஜினி இரண்டாம் முறையும் கிடைத்திருக்கிறார். ஏற்கனவே அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 'மலேயா' கணபதி தேவர் என்ற தொழிற்சங்க போராளியின் கதையை ரெஃபரன்சிற்காக உள்வாங்கி, 'கபாலி' என்ற தலித்தியவாதியாக ரஜினியை உருமாற்றி திரைக்கதை அமைத்திருந்தார். இப்போது கடல் கடந்து போகாமல், ஹிந்தியாவிற்குள்ளாகவே கடலோரமாக மும்பை வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இந்த 'காலா' கதைக்கள பின்னணி, ரஜினியின் பூர்வீக பூமியான மராட்டியத்திலேயே இருப்பதாக போஸ்டரின் மூலம் அறிய முடிகிறது. இங்கேயும் ரெஃபரன்சிற்கு வரதாபாய் என்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த வரதராஜ முதலியாரே ரஞ்சித்தின் தலித்திய கதைக்கருவிற்கு தேவைப்படுவார்.

என்னதான் அம்பேத்கரியம் பேசினாலும் கடைசியில் கபாலி திரைப்படமானது பறையர் இனக்குழுவிற்கான அடையாளப்படம் போல சமூக ஊடகங்களில், அச்சாதியை சார்ந்தவர்களே பரப்புரை செய்தனர். இப்போது மீண்டும் நீலமும், கருப்பும், சிவப்பும் வண்ணக்குறியீடுகளோடு காலாவை வெளிக்கொண்டு வந்தாலும், அது மற்றுமொரு கபாலியின் நீட்சியாகவே சம்பந்தப்பட்ட பலராலும் பரப்புரை செய்யப்படும். இதிலுள்ள சிக்கல் என்னவெனில், மராட்டியரான ரஜினியை மள்ளரியம் பேசும் நபர்களால், கெய்க்வாட் என்ற பட்டம் கொண்ட அவர் சார்ந்த சாதியான குர்மியை, தமிழ் குடும்பர் என்ற பட்டத்தோடு இணைத்து தேசிய அளவிலான மள்ளரியம் பேசத்தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதைக்கு உலகளாவிய மள்ளரியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை; நிற்க.

ஏற்கனவே மெட்ராஸில் மஞ்சள்Xநீலம் குறியீடு வைத்ததால் வட மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே, கரிகாலன், சிவப்பு, கருப்பு, அம்பேத்கர், பெளத்தம், மும்பை, தாராவி, மராட்டியம் என பல குறியீடுகள் தென்படுவதால், இனிவரும் விமர்சனங்களையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். பார்க்கலாம்; காலா வரட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜூலை 2016

திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!


திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநாதரையே குறிப்பதாக பல சான்றுகளை இப்போது திரு.பானுகுமார் போன்ற பல ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்று சொன்னவருக்கே தாடி ஜடைமுடி கொடுத்த உலகமிது. இவர்களிடமிருந்து, திருவள்ளுவரையும், பா.ரஞ்சித்தையும் தலித் ஆக்க முடியுமே தவிர, கடைசி வரை தமிழராக்கவே முடியாது.

கபாலிடா
பறையர்டா
ரஞ்சித்டா
தலித்டா
திருவள்ளுவர்டா

இப்படியே கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான், கடைசிவரைக்கும்...

- இரா.ச. இமலாதித்தன்

13 ஜூன் 2016

உண்மையான கபாலி யார்?

ஜூன் 14ல் உலகில் எங்கோவொரு மூலையில் பிறந்த சே குவேராவை கொண்டாடும் அதே வேளையில், எம் டெல்டா மண்ணில் பிறப்பெடுத்த ”வாட்டக்குடி இரணியன் - ஜாம்பவனோடை சிவராமன் - மணலி கந்தசாமி - மலேயா கணபதி” போன்ற தமிழ்குடியான அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமை போராளிகளையும் போற்றி கொண்டாடுவோம்!

"கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்

பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு
ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரிகூட்டம் ஆடி போச்சே

நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன் தானடா

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது"

இந்த பாடல் வரிகளின் மூலம் புரிந்து கொண்டது ஒன்றைத்தான். அது, இப்போது தான் நீண்ட வருட உழைப்பினால் அனைத்து சாதியும் ஒன்றாக தமிழ் தேசிய பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம்; ஆனால், அந்த கருத்தியலை உடைக்கிறது கபாலி பாடல் வரிகள். மேட்டுக்குடி, ஆண்டை, போன்ற சக தமிழ் சாதிகளை சேந்த அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரி என்பது போலவும், ஈ.வெ.ரா., ரஜினி போல எங்கே பிறந்தாலும் இங்கே பிழைப்புக்காக நடித்தால் அவர்களெல்லாம் தமிழன் தான் என குழப்பம் விளைவிக்கும் புதிய தமிழ் தேசிய கருத்தியலை விதைத்திருக்கிறார் ரஞ்சித்.

'அமைதியா ஒதுங்கி போறதை' பற்றி ரஜினிமுருகன் கிளைமேக்ஸ்ல சிவகார்த்திகேயன் சொல்ற வசனம் தான், கபாலி பாடல் வரிகளை கேட்ட பிறகு நினைவுக்கு வந்து போகிறது. எவனோ ஒரு சாதிக்காரன் என்னைக்கோ செய்த ஆண்டான் - அடிமைத்தனத்தை வைத்து, இத்தனை காலம் கடந்த பின்னாலும் அதே சாதியை சார்ந்த ஒட்டுமொத்த சாதிக்காரனும் அப்படியே இருப்பானென்ற பொதுபுத்தியை ரஜினி போன்ற நடிகனை வைத்து விசம கருத்தை திணிக்கும் ரஞ்சித்தின் சிந்தனை தீ பற்றி கருகட்டும்.

டெல்டாவில் பள்ளர்/பறையர்களை பண்ணையடிமைகளாக பாவித்த தன் சொந்த சாதி தேவர் வீட்டு பண்ணையார்களை எதிர்த்து போராடிய வாட்டாகுடி இரணியன், ஜாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்றவர்களை இம்மண்ணிற்கு கொடுத்த அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்; ஆனால் ஒரு போதும், ஆண்டையாக இருக்க நினைத்து கூட பார்த்ததில்லை. எதார்த்தம் இப்படி இருக்க, தமிழ் தேசியத்தை குழி பறித்து, பலி போடும் கபாலிக்கள் என்னை போன்ற பலருக்கு தேவையேயில்லை. கபாலி காலியானால் மகிழ்ச்சி!

டெல்டா மண்ணின் பொதுவுடைமை போராளியும், மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த 'அகில மலேயா தொழிலாளர் சம்மேள'த்தின் தலைவரும், தம்பிக்கோட்டை ஆறுமுகத்தேவரின் மகனுமான, "மலேயா கணபதி" என்ற அகமுடையாரின் வரலாற்றை திருடி, பறையர் வரலாறு போல திரைக்கதையை அமைத்திருக்கிறார் பா.ரஞ்சித். காப்பி அடித்ததற்கு கைமாறாக குறைந்த பட்சம், படத்திற்கான பெயரையாவது 'கணபதி' என வைத்திருக்கலாம்.

கணபதி டா!

கபாலி படத்தின் கதைக்கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா லிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும்!

https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._கணபதி

18 ஆகஸ்ட் 2015

லிங்கா முதல் கபாலி வரை!

கபாலிக்கும் லிங்காவுக்கும் ஒரேயெழுத்து தான் வித்தியாசம். லிங்கா மாதிரியே கபாலியும் ஆகலாம் என்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதே தென்படுகின்றன. ஏற்கனவே பாடல் வெளியீடு வரை முடிவடைந்த தன்னுடைய ’கபாலி’ பட டைட்டிலுக்காக கன்னட தயாரிப்பாளரான சிவா தரப்பினர் முதல் நாளே மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கனவே ’லிங்கா’ படத்தோட கதைக்கு தான் உரிமை கொண்டாடுனாங்க. ஆனால் இப்போது ’கபாலி’ படத்தின் பெயருக்கே உரிமை கொண்டாடுறாங்க. இதுல என்னவொரு ஒற்றுமைன்னா, ஒரிஜினல் கபாலியின் தயாரிப்பாளரான சிவா, லிங்கா தயாரிப்பாளரான வெங்கடேஷ் மற்றும் தமிழ்த்திரையின் சூப்பர்ஸ்டாராக இருந்த ரஜினி உள்பட மூவருமே ”கன்னடர்” என்பது தான்! இந்த கூத்தையெல்லாம் தமிழர்கள், திரையரங்குகளுக்கு வெளியே வேடிக்கை பார்க்க வேண்டிய நேரமிது.