13 ஜூன் 2016

உண்மையான கபாலி யார்?

ஜூன் 14ல் உலகில் எங்கோவொரு மூலையில் பிறந்த சே குவேராவை கொண்டாடும் அதே வேளையில், எம் டெல்டா மண்ணில் பிறப்பெடுத்த ”வாட்டக்குடி இரணியன் - ஜாம்பவனோடை சிவராமன் - மணலி கந்தசாமி - மலேயா கணபதி” போன்ற தமிழ்குடியான அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமை போராளிகளையும் போற்றி கொண்டாடுவோம்!

"கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்

பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு
ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரிகூட்டம் ஆடி போச்சே

நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன் தானடா

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது"

இந்த பாடல் வரிகளின் மூலம் புரிந்து கொண்டது ஒன்றைத்தான். அது, இப்போது தான் நீண்ட வருட உழைப்பினால் அனைத்து சாதியும் ஒன்றாக தமிழ் தேசிய பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம்; ஆனால், அந்த கருத்தியலை உடைக்கிறது கபாலி பாடல் வரிகள். மேட்டுக்குடி, ஆண்டை, போன்ற சக தமிழ் சாதிகளை சேந்த அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரி என்பது போலவும், ஈ.வெ.ரா., ரஜினி போல எங்கே பிறந்தாலும் இங்கே பிழைப்புக்காக நடித்தால் அவர்களெல்லாம் தமிழன் தான் என குழப்பம் விளைவிக்கும் புதிய தமிழ் தேசிய கருத்தியலை விதைத்திருக்கிறார் ரஞ்சித்.

'அமைதியா ஒதுங்கி போறதை' பற்றி ரஜினிமுருகன் கிளைமேக்ஸ்ல சிவகார்த்திகேயன் சொல்ற வசனம் தான், கபாலி பாடல் வரிகளை கேட்ட பிறகு நினைவுக்கு வந்து போகிறது. எவனோ ஒரு சாதிக்காரன் என்னைக்கோ செய்த ஆண்டான் - அடிமைத்தனத்தை வைத்து, இத்தனை காலம் கடந்த பின்னாலும் அதே சாதியை சார்ந்த ஒட்டுமொத்த சாதிக்காரனும் அப்படியே இருப்பானென்ற பொதுபுத்தியை ரஜினி போன்ற நடிகனை வைத்து விசம கருத்தை திணிக்கும் ரஞ்சித்தின் சிந்தனை தீ பற்றி கருகட்டும்.

டெல்டாவில் பள்ளர்/பறையர்களை பண்ணையடிமைகளாக பாவித்த தன் சொந்த சாதி தேவர் வீட்டு பண்ணையார்களை எதிர்த்து போராடிய வாட்டாகுடி இரணியன், ஜாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்றவர்களை இம்மண்ணிற்கு கொடுத்த அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்; ஆனால் ஒரு போதும், ஆண்டையாக இருக்க நினைத்து கூட பார்த்ததில்லை. எதார்த்தம் இப்படி இருக்க, தமிழ் தேசியத்தை குழி பறித்து, பலி போடும் கபாலிக்கள் என்னை போன்ற பலருக்கு தேவையேயில்லை. கபாலி காலியானால் மகிழ்ச்சி!

டெல்டா மண்ணின் பொதுவுடைமை போராளியும், மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த 'அகில மலேயா தொழிலாளர் சம்மேள'த்தின் தலைவரும், தம்பிக்கோட்டை ஆறுமுகத்தேவரின் மகனுமான, "மலேயா கணபதி" என்ற அகமுடையாரின் வரலாற்றை திருடி, பறையர் வரலாறு போல திரைக்கதையை அமைத்திருக்கிறார் பா.ரஞ்சித். காப்பி அடித்ததற்கு கைமாறாக குறைந்த பட்சம், படத்திற்கான பெயரையாவது 'கணபதி' என வைத்திருக்கலாம்.

கணபதி டா!

கபாலி படத்தின் கதைக்கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா லிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும்!

https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக