24 ஜூன் 2016

சுவாதி கொலைக்கு பின்னாலும் அரசியல்!

நிகழ்வு 1:

பேஸ்புக்ல ஒரு மணிநேரத்துக்கு ஒரு போட்டோவை அப்லோட் பண்ற பொண்ணுங்களை பார்த்தாலே எரிச்சலாகும். இன்னைக்கு நிலவரபடி, பொண்ணு பேருல ஒரு ஃபேக் ஐடி, ஸ்டேடஸ்ல ஒரேவொரு புள்ளி வச்சாலே இரண்டாயிரம் லைக், ஆயிரம் கமெண்ட், ஐநூறு ஷேர் பண்ற ஆளுக இங்க இருக்காங்க. இந்த லட்சணத்துல தன்னோட போட்டோவை போட்டு சந்தோசப்படுற பொண்ணுங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அந்த போட்டோவுக்கு, செல்லம், க்யூட், அழகு, சூப்பர்மா, கலக்குறடி, தேவதை, செம்ம, இப்படியாக வழியும் ஆண்கள் ஒருபக்கம் இருக்க, அதை தனக்கான அழகியலின் அளவீடாக எடுத்துக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பறம் எவனாவது மனம்பிறழ்ந்தவன் அந்த போட்டோவை மார்பிங் செய்து, பலான வாட்சப்-ஃபேஸ்புக் குரூப்ல ஷேர் பண்ணின பிறகு நீலிக்கண்ணீர் வடித்து என்ன ஆகபோகுது?

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள் நுழையவே முடியாது. ஆனால், ஊசிகள் தான் நூலை வலுக்கட்டாயமாக உள்ளே நுழைக்க பெரும் முயற்சிகள் செய்கின்றன என்பதுதான் சமகால எதார்த்தம். இங்கே சொல்லப்பட்டுள்ள எந்த வார்த்தையிலும் பெண்ணடிமைத்தனமோ, ஆணாதிக்கபோக்கோ இல்லை. கமெண்ட்களில் வழியும் ஆண்களோ, போட்டோக்களை பகிர்ந்து தன்னழகை பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லாமென அனுமதிக்கும் பெண்களோ, இந்த இருவரிடமும் தவறுள்ளது. ஆனால், பல பிரச்சனைகளுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் பெண்களே பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்கு காரணகர்த்தாக்களா இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது!

நிகழ்வு 2:

சுவாதி கொலைக்கு எதிராக ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்ட சொல்லாடல்களில் தவறு இருக்கிறதே தவிர, அவரது கருத்துகளில் எந்தவொரு தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட சுவாதி, சாதியால் பறையராகவோ - பள்ளராகவோ இருந்திருந்தால், தமிழ்நாட்டின் போரட்டக்களமே வேறுமாதிரியாக இருந்திருக்கும். நாடார்களின் தந்தி தொலைக்காட்சியும் - நியூஸ்7 தொலைக்காட்சியும், உடையாரின் புதியதலைமுறை தொலைக்காட்சியும் தொடர் நேரலையாக இக்கொலைக்காக பல விவாதங்களை ஊடகங்களெல்லாம் நடத்திருக்கும். திருமாவளவன் - கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் அவசர கதியிலான கண்டன பேட்டிகள் அனைத்து அச்சு ஊடகங்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும். ம.க.இ.க. - பெ.வி.மு. போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்களும், மகளிர் சங்கங்களும், மனித உரிமை கழகங்களும், உண்மையறியும் குழுக்களும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், தமிழ்நாட்டை அனல்பறக்க தெறிக்கவிட்டிருப்பார்கள்.

இதெல்லாம் சுவாதி விசயத்தில் துளி கூட நடக்கவில்லை என்பதற்கான ஒரே காரணம், அந்தப்பெண் பட்டியல் சாதி (தலித்) அல்லாத இதர பிற்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தானே?! இந்த விசயத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் கருத்தோடு மட்டும் ஒத்து போகிறேன்; அவர் பயன்படுத்திய கடினமான சொல்லாடலோடு அல்ல! தன்னோட சாதிக்காரனுக்கு வராத வரைக்கும், ரத்தமெல்லாம் தக்காளிசட்னி தான்!

மெட்ராஸ் படத்துல இரண்டு காட்சிகளில் ஒரு விசயத்தை மிக ஆழமாக பதிந்திருப்பார் இயக்குனர் ரஞ்சித். 'ஒரு பெண்ணை காதலிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, நம்மள செருப்பால அடிச்சாலும் அந்த பொண்ணை விடாம துரத்தணும்; எப்படியாவது கரக்ட் பண்ணிடணும்' இதுதான் அந்த ஒன்லைன் மேட்டர். இப்படியாக இளைஞர்களின் ஆழ்மனதில் நஞ்சு விதையை விதைத்த இயக்குனர் ரஞ்சித் என்னதான் சொல்ல வருகிறார்? என்று ஆராய்ந்தால் ஒன்றுதான் புரிகிறது.

ஒரு பெண் பின்னாடியே ஒருத்தன் விடாப்பிடியாக துரத்தி துரத்தி காதலிக்கிறான்னு வச்சிப்போம். அந்த பொண்ணுக்கு இவன் மேல கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல், அவனிடம் நாகரீகமாக சொன்னாலும், கோபமாக சொன்னாலும், அந்த பெண்ணை விட்டுவிட்டு ஒதுங்கிவிட கூடாது. திரும்ப திரும்ப அந்த பொண்ணை டார்ச்சர் பண்ணி, மிரட்டியாவது காதலை சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணணும். முடியாத பட்சத்தில், இந்த மணிகண்டன் மாதிரியான நபர்கள் சொன்னதுபோல, 'கோபத்துல உணர்ச்சி வசப்பட்டு கொன்னுடணும்!' இதுதான் ரஞ்சித்தின் ஆண்டைகளை பொசுக்குற கூட்டத்திற்கான செய்தி. ஆனால் இந்த சுவாதி விசயத்தில் பொசுக்க மறந்துவிட்டு, உணர்ச்சி வசப்பட்டு குத்திட்டாய்ங்க. அவ்ளோதான் வித்தியாசம்.

த்தூ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக