26 ஜூன் 2014

அரசு மருத்துவமனையில் ஒரு நாள்!

நேற்று முழுவதும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் தான் என் பொழுது கழிந்தது. என் மச்சானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால், மருத்துவமனையிலேயே அண்ணன் தம்பி மாமன் மச்சான்களோடு அஞ்சு ஆறு பேரா சுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு பெண் தீக்குளிப்பு, ஒரு இளைஞன் பைக் விபத்து, ஒரு நடுத்தரவயதுள்ளவரின் வெட்டுக்குத்து கேஸ் என மூன்று சம்பங்களை மருத்துவமனை வளாகத்துக்குள் பார்க்க முடிந்தது.

அந்த பெண்ணின் தீக்குளிப்புக்கான காரணம் தெரியவில்லை. சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து பொம்பளய்ங்களோட அழுகுரலை கேட்கமே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

பைக் விபத்தில் இறந்தவரின் வயது 30க்குள் தான் இருக்கும். பொலிரோ ஜீப் மோதி ஸ்பாட் அவுட். அண்ணன் தம்பி நண்பர்கள் அப்பா அம்மான்னு எல்லாரும் இறந்த இளைஞனை பற்றி சொல்லி அழும் போது மனசே உடைஞ்சிருச்சு. நண்பர்கள் யார் யாருக்கோ போன் போட்டு "என் தம்பி என்னைய விட்டு போய்ட்டான். என் தம்பி செத்துட்டான்"னு சொல்லி சொல்லி அழும் அண்ணனின் குரலை கேட்டும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணில் கண்ணீர் வந்தே தீரும்.

மூனாவது வந்த வெட்டுகுத்து கேஸ்ல, கடப்பாறையால முகத்துல குத்தி இருக்காய்ங்க. அந்த நடுத்தர வயதுள்ளவர் கொஞ்சம் குடிபோதையில் இருந்ததால் படுகாயம் அடைந்திருந்தார். கையில் அரிவாள் வெட்டு, நெத்தியில் கடப்பாறை குத்துயென மிக மோசமான நிலையில் அட்மிட் செய்யப்பட்டார்.

தீக்குளிப்பை தவிர மற்ற இரண்டு சம்பவமும் மது போதையில் வந்தது தான். சாலையோரமெல்லாம் டார்கெட் வைத்து டாஸ்மாக்கை திறக்கும் இந்த அரசாங்கம் பாவத்தை மட்டுமே சம்பாரித்து கொண்டிருக்கின்றது. தமிழன் தினம் தினம் குடிபோதையில் மரணித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு மணிநேரம் கழித்து என் மச்சான்கள் மூவரும் வா மார்சரி போய் அந்த ரெண்டு பாடியையும் பார்த்துட்டு வருவோம்ன்னு கட்டாயபடுத்தி என்னை பிணவறைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. தீக்குளித்த பெண்ணை கண்ணாடி பாக்ஸ்ல வைத்திருந்தனர். ஆக்ஸிடண்ட் ஆனவரை அப்படியே தரையில் போட்டு வைத்திருந்தனர். பிணவறை பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலோரம் உறவினர்கள் எல்லாம் அவனது உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞனை பெத்த தகப்பன், ஒரு கையில் அந்த இளைஞனின் நண்பனனையும், இன்னொரு கையில் மூத்த மகனையும் இறுக பிடித்து மெதுவாக அந்த பிணவறையை விட்டு தூர அழைத்து வந்தார். அதுவரை அவர் அழவில்லை. மற்ற இருவரும் தான் விடாமல் அழுது கொண்டிருந்தனர். பிணவறையை விட்டு கொஞ்ச தூரம் போனதும் மூனு பேருமே ஒப்பாரி வைத்து அழுததை பார்க்கும் போது என் மனசு வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இறப்பின் வலியும், இழப்பின் வலியும் என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

அநாதை போல அவனது உடல் அந்த பிணவறையில் ஜன்னலோரம் கிடந்த காட்சியை பார்த்து விட்டு. "மனுசனோட வாழ்க்கை இவ்வளவு தான்!" என்று, முரட்டுத்தனமான என் மச்சான்களே என்கிட்ட சொன்னாய்ங்க. நாலு பேருமே கணத்த இதயத்துடன் வெளியேறினோம் பிணவறையை விட்டு!

- இரா.ச.இமலாதித்தன்

25 ஜூன் 2014

இது சாதீய பதிவு: விருப்பமில்லாதவர்கள் புறக்கணிக்கவும்.



இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லைன்னா, தேவரின அமைப்புகளின் நிலை என்னவாகிருக்கும்? முக்குலத்தோர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் அல்லவா போயிருக்கும். நொன்னைங்களா, ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்காம, களத்தில் எதாவது உருப்படியா ஒத்துமையா பண்ணலாமே? நாங்க தான் யோக்கியன், நான் தான் பெரியவன் என்பது போல ஈகோ மயிரு மட்டையையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தெருவுக்கொரு அமைப்பு, கட்சி, பேரவை, இயக்கம், கழகம், பாசறைன்னு தொடங்கி சொந்த சாதிகாரனையே நொட்டம் சொல்லாமலாவது இருக்கலாமே? அக்டோபர் மாசமும், தேர்தல் நேரத்துலயும் மட்டுமே வெளியே வர அமைப்புகள் நிரந்தரமாவே கடையை காலி பண்ணியாவது தொலைக்கலாமே? இன்னொரு அமைப்பை குறை சொல்லியே தங்களோட அமைப்பை வளர்க்கலாம்ன்னு நினைக்கிறதுனாலதான் ஒட்டுமொத்த இனமும் கண்டவன் கிட்டயெல்லாம் சந்தி சிரிக்குது. ஃபேஸ்புக்ல மட்டும் பில்டப் தர இவிய்ங்களோட சாதி கட்சியின் நிலையை ஊர்ல போய் பார்த்தால் நாத்தம் தெரியும். இதை சொல்றதுனால நீ என்ன கிழிச்சன்னு என்கிட்ட எவனும் வராத... ஃபேஸ்புக்ல போட்டோவும் அறிக்கையும் மட்டும் போட்டு எந்த அமைப்பையும் நான் நடத்தல. அதுக்காக, அட்லீஸ்ட் எந்த அமைப்புலயாவது உறுப்பினராவது இருக்கியா?ன்னு என்கிட்ட கேள்வி கேட்கவும் முடியாது. ஏன்னா எவனை நம்பியும் எந்த அமைப்பிலயும் சேரவும் முடியல. ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்குற முக்கால்வாசி பயலுக காசுக்காக இனத்தை அடமானம் வைக்கிற அயோக்கியனாத்தான் இருக்காய்ங்க. ஏதாவது சாதி அமைப்பில இருந்த மட்டும் தான் தேவன்னு எந்த மண்ணாங்கட்டி கொள்கையும் இல்ல. நான் பிறக்கும் போதே தேவன் தான்!

அட த்த்தூ...

- இரா.ச.இமலாதித்தன்

24 ஜூன் 2014

கவிக்கு வயது 88!

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களை எழுத்து, சமுதாய உணர்வு, தெளிவான பேச்சு, சுயத்தை இழக்காத வெளிப்படையான தன்மை உள்பட பல விசயத்துல முன்மாதிரியாக நான் எடுத்துக்கொண்டாலும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை வெளிக்காட்ட "சிவகங்கை சீமை" என்ற திரைக்காவியத்தை தயாரித்து, தமிழால் என்னை ஆட்கொண்ட 'செட்டிநாடு தந்த செல்வர்' 'கவியரசு' கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் இன்று!

22 ஜூன் 2014

இளையதளபதி பிறந்தநாள்!

ஜூன் 22ல் 40வது அகவை காணும் எங்கள் 'இளைய தளபதி' விஜய் அவர்கள் எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!

Time to Lead :-)

20 ஜூன் 2014

ஹிந்தி திணிப்புக்குள் அகதிகள் தினம்!

ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் தமிழனுக்கில்லை, அவன் மீது தமிழ் அல்லாத மொழியை திணிக்காத வரை. ஹிந்தி மட்டுமே அறிவு என்பது போல நினைக்க வேண்டிய தேவையில்லை. வல்லபாய் படேல் இல்லையென்றால் இந்தியா என்ற ஒரு கட்டமைப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே; ஏனெனில் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி மொழி/பாரம்பரியம்/கலாச்சாரம் என பலவாறாக அடையாளப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழி கிடையாது என்றும், ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்னைக்கு புதுசா வந்து எல்லாத்தையும் ஹிந்தி மயமாக்க நினைப்பது தவறு. அதை கண்டிப்பது ஹிந்தி அல்லாத ஒவ்வொரு தாய்மொழிக்காரனுக்கும் உரிமை உண்டு. என் மொழி எனக்கு உன் மொழி எனக்கு. ஏற்கனவே கொஞ்சகொஞ்சமாய் அழிந்துவரும் எம்தாய்மொழியை இதுபோன்ற அரசாங்க அறிவிப்பும் அழிவுக்கே வழி வகுக்கும்.
தமிழினம் மட்டுமல்ல
தமிழும் தான்
தவித்துக்கொண்டிருக்கின்றது
இறுதி சடங்குக்காக!

#அகதிகள் தினம் இன்று!


 - இரா.ச.இமலாதித்தன்

பேரரசர் இராஜேந்திர சோழனின் 1000வது ஆடி திருவாதிரை திருவிழா!



"பூர்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" எனக் கல்வெட்டுகளல் புகழப்படுபவன் முதலாம் இராசேந்திர சோழன். இராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவி என்ற பெயர் பெற்ற சேரர்குலப் பெண் வானவன்மாதேவிக்கும் மகனாக திருவாதிரையில் பிறந்தவன். இவனது இயற்பெயர் மதுராந்தகன். கி.பி.1012-இல் இளவரசாக முடிசூட்டியபோது அபிடேக பெயராக இராசேந்திரன் என்ற பெயரைக் கொண்டான். கி.பி.1014வரை தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்தான். இவன் கங்கைகொண்டசோழன், மும்முடிசோழன், உத்தமசோழன், பண்டித்சோழன்,வீரசோழன், பூர்வதேசம் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன் என்ற பட்டபெயர்களைச் சூடியவன். இவனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை. "வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" இம்மன்னனது நாட்டின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இவன் இளவரசனாக இருந்தபோது சுமார் ஒன்பது லட்சம் வீரர்களுக்கு தலைமை தாங்கி வடக்கே பீசப்பூர் வரை படையெடுத்து வெற்றிவாகை சூடி சாளுக்கியரை வென்ற புகழாளன். இந்திய நாட்டின் பல பகுதிகளை வென்றதோடு கடல் கடந்து பல கீழ்த்திசை நாடுகளையும் தன் அடிமைப்படுத்தி சோழர் தம் கொடியைப் பறக்க விட்ட மாபெரும் சோழப் பேரரசனும் இவனே!

24.07.2014, 25.07.2014 ஆகிய இரு தினங்களும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளானா ஆடி - திருவாதிரை திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அருகிலுள்ள தமிழின உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி: இராஜாராம் கோமகன்

19 ஜூன் 2014

தமிழ் இசுலாமியர் மீதான தாக்குதலை எப்படி பார்ப்பது?

இயற்கை எனது நண்பன்;
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி!

- அண்ணன் வே. பிரபாகரன்

இலங்கையில் நடைபெறும் தமிழ் இசுலாமியர் மீதான சிங்கள-பெளத்த இனவெறியர்களின் தாக்குதலை நான் எப்படி பார்ப்பது? யென்ற கேள்வி என்னை போலவே பலருக்கும் இருக்கலாம்.

அன்று ஈழத்தமிழர்களை இதே சிங்கள-பெளத்த இனவெறியர்கள் அழித்தொழித்த போது, கைத்தட்டி ஆராவாரித்து வெற்றி முழக்கமிட்டது இதே தமிழ் இசுலாமியர்கள் தானே? மேலும், இங்குள்ள தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகளும் கூட அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையென ஒதுங்கி கொண்டு கைக்கட்டி வேடிக்கை பார்தது ரசித்தது. ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகள், அங்குள்ள இசுலாமியர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தமிழ்தேசிய அமைப்புகளின் பெயர்களையும் போட்டு இங்கே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த தமிழ்நாட்டு இசுலாமிய அறிவுஜீவிகளுக்கு இப்போது மட்டும் அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனயென்று தெரியவில்லையா?

மதத்தின் பெயரால் சக நாட்டினத்தவரிடம் பிரிவினை ஏற்படுத்தி மதவெறியால் தமிழ்மொழியை அழிக்கும் இசுலாமியர்கள் ஒருபோதும் தமிழரில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அப்படியென்றால், சக தமிழனாக, இலங்கையில் நடக்கும் இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியமும் எந்தவொரு தமிழனுக்கும் அவசியமில்லை. என்னை பொறுத்தவரை இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க மனமே வரவில்லை. எப்போதுமே, எதிரியை விட துரோகி மிக மோசமானவர்கள் என்பதை கடந்த கால வரலாறு சொல்கிறது. நான் வரலாற்றை நேசிப்பவன்; வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்பவன்; நீங்கள் எப்படி?

- இரா.ச.இமலாதித்தன்

18 ஜூன் 2014

இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!



குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.

‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?

- இரா.ச.இமலாதித்தன்

உறவை தேடி

மோகனூர், புலவனூர், வண்டலூர், நீடூர், தண்ணிலாப்பாடி, வடுகச்சேரி, தேவூர், திருக்குவளை, விளமல், மன்னார்குடி, பரவாக்கோட்டை, தில்லைவிளாகம், கோட்டூர், வேதபுரம், களப்பால், சேவியக்காடு, வல்லாங்கோட்டம், வாழக்கரை, பூவத்தடி...

நாகப்ப்படினம் - திருவாரூர் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இந்த ஊர்ல எல்லாம் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு சொல்ல வந்தேன். வேதாரண்யம் - கருப்பம்புலம் அருகிலுள்ள கடிநெல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார் தான் எங்க குலசாமி. ஏன்னா இவ்ளோ நாளா, அண்ணே அண்ணேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த Mannai T Gnanavel அவர்களை இன்னைக்கு தான் என்னோட சித்தப்பா முறைன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சது. இதுபோல பல உறவுகளை தெரிஞ்சிக்க ஊர் பேரும், குலசாமியும் முக்கிய காரணமாயிருக்கு.

15 ஜூன் 2014

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை!

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், பாகுபாடில்லாத பழகும் முறை, இப்படி எத்தனையோ இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்றுக்கொண்டிருக்கின்றேன். அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த எம்பெருமான் முருகனுக்கு இந்நாளில் நன்றி!
                            இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா!

14 ஜூன் 2014

சாதி மதம் நான்!

போலியா வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில், சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும் கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும் இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது. மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து பிரிவினை பார்ப்பதுதான் தவறு.

சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.

நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

12 ஜூன் 2014

ஜம்புதீவு பிரகடன நாள்!

”இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது. இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!” யென்று உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக போர்பிரகடனம் செய்த வரலாற்று சிறப்புமிக்க நாள் (ஜூன் 12 1801) இன்று. அன்றைய தமிழகத்தில் இருந்த 72 பாளையத்து அரசுகளையும் #வீரசங்கம் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைத்து, திருச்சி - திருவரங்கத்தில் ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை மாமன்னர் மருதுபாண்டியர் வெளியிட்ட வீரம்செறிந்த நினைவேந்தல் நாளில், அன்றைக்கே தமிழ் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இன்றைய தமிழ்தேசியத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை அனைவரும் போற்றுவோம்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்

11 ஜூன் 2014

வைகாசி விசாக திருநாள் வாழ்த்து!

தொல்காப்பியம் உள்பட ஆதிகால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வழிபாட்டு தெய்வங்கள், மாயோன் - செயோன் மட்டும்தான். (மாயோன் - வேங்கடமலைபெருமாள், சேயோன் - முருகபெருமான்) சேய் என்றால் குழந்தை, குமரன் என்று பொருள். மேலும் சிவப்பு நிறத்திற்கும், செவ்வாய் கிழமைக்கும், சேயோன் என்ற பெயருக்கும் மிகப்பெரும் தொடர்புண்டு. ஏனெனில் இந்த நான்குக்கும் முருகபெருமானுக்கும் சம்பந்தமுண்டு.

சேய் - செவ்வாய் - சிவப்பு - சேயோன்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவதரித்த முருக பெருமானின் அவதார திருநாளான இன்று, அனைவருக்கும் வைகாசி விசாக திருநாள் நல்வாழ்த்துகள்!

சரவணபவ! அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்!

10 ஜூன் 2014

கல்யாண கலவரம்!

கல்யாணத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மொபைல் போனை மாப்ள வாங்கி கொடுத்து, கல்யாண பொண்ணுகிட்ட பேசுங்க மாப்ளன்னு பொண்ணுவீட்டு காராய்ங்க சொல்லுவாய்ங்க. நம்ம மாப்ளயும் தாலிக்கட்டுறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் ஆர்வகோளாறுல நம்ம வருங்காலபொண்டாட்டி தானேன்னு அந்த பொண்ணுக்கிட்ட உளறி வச்சிடுவாய்ங்க. அதோட ரிசல்ட் கல்யாண மேடையிலேயே தெரியும். மாப்ள, பயந்து உட்கார்ந்திருப்பான்; மணப்பொண்ணு கெத்தா உட்கார்ந்திருக்கும். அப்பறம் என்ன? தாலிக்கட்டின அடுத்த நிமிடத்திலிருந்து அந்த பொண்ணுக்கு அடிமை ரெடி ஆய்ட்டான்னு அர்த்தம். என் நண்பர்களின் திருமணத்தில், மாப்பிள்ளை தோழனாக இருந்ததால தெரிஞ்சிக்கிட்ட விசயம் இது மட்டும்தான்!

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

09 ஜூன் 2014

நினைவு பரிசு ;-)

09.06.2014 அன்று நடைபெற்ற, கருப்பம்புலம் செல்வம் ( Sns Selvam Naga ) பங்காளியின் திருமணத்தின் போது, நினைவு பரிசாக இதைத்தான் கொடுத்தேன்.