14 ஜூன் 2014

சாதி மதம் நான்!

போலியா வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில், சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும் கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும் இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது. மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து பிரிவினை பார்ப்பதுதான் தவறு.

சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.

நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக