ஹிந்தி
உள்ளிட்ட எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் தமிழனுக்கில்லை, அவன்
மீது தமிழ் அல்லாத மொழியை திணிக்காத வரை. ஹிந்தி மட்டுமே அறிவு என்பது போல
நினைக்க வேண்டிய தேவையில்லை. வல்லபாய் படேல் இல்லையென்றால் இந்தியா என்ற
ஒரு கட்டமைப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே; ஏனெனில் ஒவ்வொரு
மாகாணமும் தனித்தனி மொழி/பாரம்பரியம்/கலாச்சாரம் என பலவாறாக
அடையாளப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் ஹிந்தி மட்டுமே ஆட்சி
மொழி கிடையாது என்றும், ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்து கொள்ளலாம்
என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்னைக்கு புதுசா வந்து எல்லாத்தையும்
ஹிந்தி மயமாக்க நினைப்பது தவறு. அதை கண்டிப்பது ஹிந்தி அல்லாத ஒவ்வொரு
தாய்மொழிக்காரனுக்கும் உரிமை உண்டு. என் மொழி எனக்கு உன் மொழி எனக்கு.
ஏற்கனவே கொஞ்சகொஞ்சமாய் அழிந்துவரும் எம்தாய்மொழியை இதுபோன்ற அரசாங்க
அறிவிப்பும் அழிவுக்கே வழி வகுக்கும்.
தமிழினம் மட்டுமல்ல
தமிழும் தான்
தவித்துக்கொண்டிருக்கின்றது
இறுதி சடங்குக்காக!
#அகதிகள் தினம் இன்று!
- இரா.ச.இமலாதித்தன்
தமிழினம் மட்டுமல்ல
தமிழும் தான்
தவித்துக்கொண்டிருக்கின்றது
இறுதி சடங்குக்காக!
#அகதிகள் தினம் இன்று!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக