12 ஜூன் 2014

ஜம்புதீவு பிரகடன நாள்!

”இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது. இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!” யென்று உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக போர்பிரகடனம் செய்த வரலாற்று சிறப்புமிக்க நாள் (ஜூன் 12 1801) இன்று. அன்றைய தமிழகத்தில் இருந்த 72 பாளையத்து அரசுகளையும் #வீரசங்கம் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைத்து, திருச்சி - திருவரங்கத்தில் ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை மாமன்னர் மருதுபாண்டியர் வெளியிட்ட வீரம்செறிந்த நினைவேந்தல் நாளில், அன்றைக்கே தமிழ் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இன்றைய தமிழ்தேசியத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை அனைவரும் போற்றுவோம்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக