கல்யாணத்துக்கு
முன்னாடியே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மொபைல் போனை மாப்ள வாங்கி
கொடுத்து, கல்யாண பொண்ணுகிட்ட பேசுங்க மாப்ளன்னு பொண்ணுவீட்டு காராய்ங்க
சொல்லுவாய்ங்க. நம்ம மாப்ளயும் தாலிக்கட்டுறதுக்கு முன்னாடியே
எல்லாத்தையும் ஆர்வகோளாறுல நம்ம வருங்காலபொண்டாட்டி தானேன்னு அந்த
பொண்ணுக்கிட்ட உளறி வச்சிடுவாய்ங்க. அதோட ரிசல்ட் கல்யாண மேடையிலேயே
தெரியும். மாப்ள, பயந்து உட்கார்ந்திருப்பான்; மணப்பொண்ணு கெத்தா
உட்கார்ந்திருக்கும். அப்பறம் என்ன? தாலிக்கட்டின அடுத்த நிமிடத்திலிருந்து
அந்த பொண்ணுக்கு அடிமை ரெடி ஆய்ட்டான்னு அர்த்தம். என் நண்பர்களின்
திருமணத்தில், மாப்பிள்ளை தோழனாக இருந்ததால தெரிஞ்சிக்கிட்ட விசயம் இது
மட்டும்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக