11 ஜூன் 2014

வைகாசி விசாக திருநாள் வாழ்த்து!

தொல்காப்பியம் உள்பட ஆதிகால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வழிபாட்டு தெய்வங்கள், மாயோன் - செயோன் மட்டும்தான். (மாயோன் - வேங்கடமலைபெருமாள், சேயோன் - முருகபெருமான்) சேய் என்றால் குழந்தை, குமரன் என்று பொருள். மேலும் சிவப்பு நிறத்திற்கும், செவ்வாய் கிழமைக்கும், சேயோன் என்ற பெயருக்கும் மிகப்பெரும் தொடர்புண்டு. ஏனெனில் இந்த நான்குக்கும் முருகபெருமானுக்கும் சம்பந்தமுண்டு.

சேய் - செவ்வாய் - சிவப்பு - சேயோன்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவதரித்த முருக பெருமானின் அவதார திருநாளான இன்று, அனைவருக்கும் வைகாசி விசாக திருநாள் நல்வாழ்த்துகள்!

சரவணபவ! அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக