ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 டிசம்பர் 2017

சொர்க்க வாசல் (8+2=10)

No automatic alt text available.


எண்களின் தோற்றம் என்பது எண்ணங்களின் பரிணாமத்தில் தான் உருவாகிருக்கிறது. எண்களுக்கும் எண்ணங்களுக்குமான நீண்டவொரு தொடர்பு இருக்கின்றது; அத்தொடர்பை கண்கள் தான் தீர்மானிக்கின்றன. எண்களில் சுழியம் என்பது நம்முடைய கண்டுபிடிப்பென பெருமை பேசிக்கொள்கிறோம். சுழியம் மட்டுமல்ல மீதமுள்ள ஒன்பது எண்களின் வேர்களுமே நம்முடைய கண்டுபிடிப்புகள் தான். சுழியம் என்பதன் அர்த்தம் புரிந்து, அது எதனுளிருந்து உருபெற்றிருக்கும் என்பதை கவனித்தாலே அதன் உள்ளார்ந்த அர்த்தமும் விளங்கும். பொதுவாக ஒவ்வோர் எண்களுக்கும் பின்புலமாக நீண்ட விளக்கங்களும், மறைபொருள் அர்த்தங்களும் அதனுள் கலந்திருக்கின்றன. இப்படியான பல ரகசியங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் எண்களில் ஒன்றான எட்டு என்பதை முடிவிலியின் அடையாளமாக எடுத்துக்கொண்டால், இரு சுழியங்களின் கலவையாக அது உருமாறக்கூடும். இவற்றிற்கும் வைகுந்த ஏகாதசிக்கும் என்ன தொடர்பென்று நினைக்க கூடும். இங்கே எதுவுமே தனித்தில்லை; ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன. அவ்வாறாக எண்களுக்கான தொடர்பை வைகுந்த ஏகாதசியிலும் பார்க்க முடியும்.
பொதுவாக, மார்கழி மாத வளர்பிறை பத்து நாட்களை 'பகல் பத்து' என்றும், அதன் அடுத்த நாள் 'வைகுந்த ஏகாதசி' என்றும், அதனை தொடர்ந்த தேய்பிறை பத்து நாட்களை 'இராப் பத்து' என்றும் வகைபடுத்தி வைத்திருக்கின்றனர். ஏகாதசி என்பதன் பொருள் பதினொன்றாம் நாள் என்பதாகும். ஏனெனில் இரு பத்துகளுக்கும் இடைப்பட்ட நாள் இது என்பதுதான் இங்கு சிறப்பாக போற்றப்படுகிறது. பத்து என்பதை எட்டும் இரண்டுமாக பிரித்து பார்க்க தொடங்கினால் சொர்க்க வாசலின் உண்மைப்பொருள் புரிந்து விடும். உயிரும் உடலுமாக இரண்டற கலந்து இருக்கின்ற தனக்குள்ளேயே மூடிக்கிடக்கும் பத்தாம் வாசலை திறக்க வக்கற்றவர்கள் தான், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசலைத்தேடி கோவிலெங்கும் வரிசை கட்டி நிற்கின்றனர். இங்கே வைகுண்டம், வைகுந்தம் என இருவாறாக சொல்லப்பட்டாலும் 'வை' என்பதற்கான அர்த்தம் கூர்மை என்பதாகும்; அடுத்து இந்த சங்கு, சக்கரம், நாமம் என்பதெல்லாமும் கூட எண்களின் வெளிப்பாடே. அதை கண்டபடி திரித்து எழுதி குளிர்காய்வதெல்லாம் எண்ணங்களை சிதறடிக்க செய்யும் செயலாகவே பார்க்கிறேன். தேவையானவற்றை தவிர்த்து, எண்ணங்களை கூர்மையாக்கி உங்களின் பார்வையை விரிவிடைய செய்யுங்கள்; எண்ணற்ற உண்மைகள் உங்களுக்குள்ளாகவே புலப்படும்.
சொர்க்க வாசல் திறக்கும் திருநாளாக கொண்டாடப்படும் இந்நாளுக்கு இடைபட்ட இந்த இரு பத்து நாட்களும், 'திருமொழித் திருநாள் - திருவாய்மொழித் திருநாள்' என உயிரெழுத்தும் - மெய்யெழுத்தும் கலந்துருவான எம்மொழி தமிழை கொண்டாடும் விதமாகவும் இணைத்து வழிபாட்டு முறை அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்கள் வெகுசிலராகத்தான் இருக்கக்கூடும். வழிபடும் விதம் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றாகவே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து, பெரியத்திருவடிகள் துணையிருக்க, பத்தாம் வாசலின் புதுவெளிச்சம் எல்லாருக்கும் கிடைக்க பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.

21 டிசம்பர் 2017

ஆன்மீக குறியீடுகள்!

ஆங்கிலப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவியலை புரிந்து கொள்ள முடியாது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. உதாரணங்களையெல்லாம் ஆங்கில படங்களோடும், மேற்கத்திய சாயல்களோடுமே தொடர்புபடுத்தி காட்டுகின்றனர். அவர்களுக்காகவே ஓர் ஆங்கில படமான அவதாரை எடுத்துக்கொண்டால், அப்படத்தை பழங்குடியினரோடு தொடர்புபடுத்துவதோடு நிறுத்தாமல், அதே அவதாரில் காட்டப்பட்டிருக்கும் மரத்தை ஆலமரமாகவும் எடுத்து கொள்ளலாம். நாகரீகம் என்பது நகர்தலின் அடையாளம்; எல்லா நாகரீக குழுக்களின் வேர் என்பது ஆதியில் பழங்குடியிலிருந்து தோன்றியதாகவே இருக்கும். உலக நாகரீகங்கள் பலவும் ஆற்றங்கரைகளை நோக்கிய நகர்தலில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ஆலமரம் என்பது மயானத்தின் குறியீடு. இங்கே மயானம் என்பதை மெய்ஞானத்தின் திரிபாக பார்க்கலாம். ஆலமர்செல்வன் என்பதற்கோ தெட்சிணாமூர்த்தி என்பதற்கோ பல காரணங்கள் பின்னாட்களில் அவரவருக்கு தகுந்தாற்போல் ஆலமரத்தை வைத்து கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். எதார்த்தத்தில் பிறப்பு என்று ஒரு நிகழ்வு நடக்குமாயின் அதன் நீட்சியாக இறப்பு என்ற நிகழ்வும் நடந்தே தீரும். அந்த இறப்பினால் எவ்வுடல் அழிந்தாலும், அவர்களின் விந்து சுக்கில இணைவால் விட்டுச்சென்ற பல்வேறு உடல்களுக்குள்ளும் பல்லுயிர்கள் வாழ்ந்து கொண்டே தான் இருக்க கூடும். உடலுயிர் என்ற ஆலமரம் மறுசுழற்சியானாலும் விழுதுகள் போல இங்கே பல்லுயிர்களுக்குள் அவ்வுடல் பரிணமித்து கிடக்கும். இது சார்ந்த குறியீடே ஆலமரமும், மயானமும் என்பது என் அனுமானம்.
ஆய்வுக்காக நீங்களே தேடிப்பாருங்கள்; சுடுகாடோ - இடுகாடோ எங்கெல்லாம் இயல்பாகவே மெய்ஞானமென்ற மயானம் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் ஆலமரமும் அமைந்திருக்கும். தற்போது போல, காண்ட்ராக்ட் காரர்களால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டட்ண்ட் மயானங்களில் ஆலமரங்கள் இருப்பதில்லை. இந்த ஆலமரத்திற்கும் சுடலை மாடனுக்கும் மிக நீண்ட தொடர்புண்டு. சுடலை+மாடன் என்பதை பிரித்தாலே எளிதாக பொருள் கொள்ளவும் முடியும். சுடலை மாடன் என்பது நாட்டார் வழிபாடுகளில் முதன்மையானதாக கொள்ளலாம்; இதனை முன்னோர் வழிபாடாகவும் எடுத்து கொள்ளலாம்; சிவ வழிபாட்டின் தொடக்கம் என்பதாகவும் எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவனின் வார்த்தைகளின் வழியே பல உண்மைகள் மறைந்து கிடப்பதை உணரலாம். அந்த வகையில், இந்த முக்கோணங்களை பற்றிய ஆய்வு பெரும்பாலானோரிடம் பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டு வருகிறது. இதை பற்றி பலரும் தனக்கான கற்பனை குவியல்களை கொட்டிக்கொண்டே இருக்கின்றனர். பலரும் இதை பெரும்புதிராக்கி குளிர் காய்கின்றனர். என்னளவில் இந்த முக்கோண கதையெல்லாம் நம்முள் உள்ள வடிவங்களே. அதை புற வடிவங்களாக்கி பார்ப்பதால் மட்டுமே உண்மை வெளிப்படப்போவதில்லை. அண்டமும் பிண்டமும் ஒன்றென சொல்லும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, உட்புறமுள்ள இவ்வடிவங்களை எங்கெங்கோ தேடி, கண்டதையெல்லாம் அந்த வடிவத்தோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை. அதன் மீதான என்னுடைய பார்வை வேறு.
அறுகோணமாகவும் ஐங்கோணமாகவும் பார்க்கப்படும் இரு தலைகீழ் முக்கோணங்களை, மூன்று கோணங்களில் பார்க்க முடியும். ஒன்றாவது, ஆண் பெண்ணாக உருவகப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, முதுகெலும்பின் நுனியும் அடியுமாக பார்க்கலாம். மூன்றாவது, சூரிய சந்திரனாகவும் பார்க்க முடியும். இங்குள்ள அனைத்தும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே அமைந்திருக்கிறது. எவையும் இங்கு தனித்டில்லை. எல்லாவற்றையுமே விரிவாக சொல்வது நேர விரயம்; மற்றவர்களின் சிந்தனையையும் மழுங்கடிக்கவே இது செய்யும். எனவே உங்களது பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இங்கே சொல்லப்பட்ட / சொல்லப்படும் கருத்தியல்கள் எல்லாமே உண்மையின் பக்கமில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களது பார்வையை ஆழமாகவும், விரிவாகவும் கவனிக்க தொடங்கினாலே பல உண்மைகள் வெகு எளிதாக புரிய வரக்கூடும்; ஏனெனில் இந்த எண்ணங்களுக்கு எல்லாவற்றையும் விட வீரியம் அதிகம். கேள்விகள் கேட்குமிடத்தில் மட்டும் இருக்காமல், பதில்களை அறிந்தவராகவும் மாற, முதலில் அனைத்தையும் கவனிக்க தொடங்கி, தேடலோடு பயணியுங்கள்; எல்லாமே நிச்சயம் புரியவரும். நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரி தான் முடிவு செய்கிறானென்ற தத்துவத்திற்கேற்ப கைப்பற்றப்பட்ட நம் ஆயுதத்தை, மீண்டெழுந்து நாமே அதை மீட்டெடுத்தால் எல்லாமும் சாத்தியமே.

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

02 டிசம்பர் 2017

பாம்பாட்டியாரின் புரட்சி வரிகள்!

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி
ஆடாய் பாம்பே! (09)
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே! (65)
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே. (88)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ?
அஞ்ஞானம் போகாது மூடர்க்கு என்று ஆடாய்பாம்பே! (92)
சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதவிதமான தான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே!
(98)
பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ?
பூமிவலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாமென்று துணிந்து ஆடாய் பாம்பே! (100)
- பாம்பாட்டியார்
(எளிய தமிழில் அமைந்துள்ள இப்பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டோருக்கு நன்றி!)

11 அக்டோபர் 2017

சித்தர் குணங்குடியார்!




சித்தர்களில் ஒருவரான 'குணங்குடி மஸ்தான் சாகிபு'டைய எழுத்துகளும் - கருத்துகளும் ஆன்மீகத்தில் நமக்கு வேறொரு பரிமாணத்தை காட்டும்.

09 செப்டம்பர் 2017

வல்லப சித்தர் எனும் மகான் சுந்தரானந்தர் போற்றி அகவல்


1
மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்
2
சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்
3
கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய
4
அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்
5
பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்
6
எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்
7
திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான
8
ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்
9
மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்
10
கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்
11
ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு
12
பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா
13
அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம் சுந்தரனந்தன் எனும் வல்லபனே
15
வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான
16
விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை
17
பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்
18
நன்றான #அகமுடையான் என்று சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே
(நன்றி: ஹரி மணிகண்டன், சதானந்தா சுவாமிகள் தளம்)

மகான் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா!





(09.09.2017*)

(*ஆண்டுதோறும் தேதி மாற்றத்திற்குட்பட்டது)

பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை

சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர்மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

14 ஆகஸ்ட் 2017

சிவம் என்பது? - sarahah



சிவம் என்பதை பற்றி ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத பல அத்தியாயங்கள் இதனுள் உண்டு. அதனையெல்லாம் தனித்தனி கேள்விகளாக கேட்டிருந்தால் அதற்கான பதில்களை தனித்தனியே சொல்லிருக்கலாம். பரவாயில்லை.

சிவனும் சீவனும் வேறில்லை; உள்ளம் பெருங்கோவில்; ஊன் உடம்பு ஆலயம் என்பது போன்ற சித்தர் பெருமக்களின் கருத்துகள் தான் சிவம் என்ற தத்துவத்திற்கான பொது பதிலாக இருக்கிறது. எளிமையாக சொல்வதெனில் சிவம் என்பது அந்த கால தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் தான். ஒலியால் ஒளியை தொடர்பு கொள்வதே சிவம்.


- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

13 ஜூலை 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

18 மார்ச் 2017

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!


# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:


உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கோரக்பூரில் தான் பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கரின் ஜீவசமாதியுள்ள அந்த மடத்தை தான், யோகி ஆதித்யாநாத் நிர்வகிக்கிறார். காகபுஜண்டரின் சீடரான கோரக்கர், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தர்களின் ஜீவசமாதி பல இடங்களில் உண்டு. அதுபோலவே, ஒரே சித்தர் பல இடங்களில் ஜீவசமாதி ஆகியிருப்பதும் உண்டு. அப்படியாக, சித்த மருத்துவ ரகசியத்தை மறைபொருள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக தன் நூல்களில் வெளிக்கொண்டு வந்த கோரக்க சித்தரின் ஜீவசமாதி நாகையிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ள வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. இவர் எழுதிய பல நூல்களில் சந்திர ரேகை என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

கோரக்க சித்தர் ஜீவசமாதிகள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை)
4. வடக்கு பொய்கை நல்லூர் (நாகை)
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (உ.பி)

24 பிப்ரவரி 2017

ஆதியோகியின் சிவராத்திரி!

நரேந்திர மோடி இந்த ஹிந்திய கூட்டாட்சி நாட்டின் பிரதமர். ஹிந்துத்துவ சார்புள்ள கட்சியிலிருந்து வந்தவரான மோடி, கோவையிலுள்ள ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்திற்கு வருவது அவரது கொள்கை சார்ந்த விசயம். அவரை இங்கே வர வேண்டாமென சொல்வது வீண்வேலை.

ஜக்கி வாசுதேவ் ஒன்றும் கடவுளில்லை. ஆனால், அவரை குருவாக எத்தனையோ பேர் இன்று ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தை பின்பற்றுகிறார்கள். பிறப்பால் கன்னடரான ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய தாய்மொழி கன்னடமென்றாலும், சமகிருதத்தை தன் மார்க்க மொழியாக்கி கொண்டார். எனவே, அவருக்கு தமிழ் அந்நிய மொழியாக தெரியலாம். அதனாலேயே சிவனுக்கு தமிழ் தெரியாதென அவர் சொல்லிருக்கலாம்.

இங்கே எது சிவன்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் அனைவரிடமும் உண்டு. தமிழ் சங்கங்களில் முதற் சங்கத்தின் தலைவரே சிவன் தானென இலக்கிய தரவுகள் குறிப்பிடுகின்றன. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதில் கூட ஓர் ஆய்வு செய்திருக்கிறார்கள். கயிலாயம் என்பது இமயமலையே இல்லை; ஆதியில் கயிலாயம் என்பதே குமரிப்பகுதி தானென. கயல்+ஆயம்=கயிலாயம். இப்படியாக பிரித்து கயிலாயம் என்பதே தென்தமிழ்நாட்டின் அருகே தான் இருந்ததென சொல்பவர்களும் இங்குண்டு. அகரம் + உகரம் + மகரம் என்ற மூன்றின் வெளிப்பாடே ஓம்காரம் என்பதின் அடித்தளமாகிறது. இதுவே ஆதிமொழி, தமிழ் என்பதற்கான இயல்பான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்ற பெரியபுராணத்தின் முதற் பாடலை சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தார் என்பது இலக்கிய சான்றாக அமைகிறது.

திருவாசகத்துக்கு உருகார்; ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. சிவனே தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல் தான் திருவாசகம். இப்படி நிறையவே தமிழ் மொழிக்கும், ஆன்மீகத்திற்குமான நீண்ட தொடர்புண்டு. வள்ளலார், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட பல மகான்கள் தமிழ் மொழியே இறைமொழி என பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அடிப்படை உண்மைகளையெல்லாம் உணராமல், ஆதித்தமிழர்களால் சமைக்கப்பட்ட மொழியான சமகிருதத்தை தலையில் வைத்து கொண்டாடும் அதே வேளையில், செம்மொழியான தமிழை காலில் போட்டு மிதிக்க வேண்டாம்.

"வயநமசி ஹரசிவ
நமயவசி வாசி வாசி
சிவயநம ஓம்!"

இது பாம்பாட்டி சித்தரின் மூலமந்திரம். சிவன் வேறு, சித்தன் வேறல்ல; சிவன் வேறு, சீவன் வேறல்ல.

"உள்ளம் பெருங்கோயில்;
ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு, வாய்க் கோபுர வாசல்;
தெள்ளத் தெளிந்தார்க்கு,
சீவனே சிவலிங்கம்;
கள்ளப் புலன்ஐந்தும்,
காளா மணிவிளக்கே" - திருமந்திரம்.

அருட்பெருஞ்சோதியாக நம்முள் வீற்றிருக்கும் சிவனுக்கு நம்மை தவிர வேற யாராலும் ஓர் உருவத்தை தந்துவிட முடியாது. ஆதியோகியென சிவனை சொல்வது, சிறுமை படுத்தவா? பெருமை படுத்தவாயென தெரியவில்லை. யோகம் என்பதே, பதஞ்சலி சித்தராலேயே எட்டு நிலைகளாக பகுக்கப்பட்டது. அப்படியெனில் ஆதியோகி என்பவர் பதஞ்சலியாகத்தானே இருக்க வேண்டும்.

பொதுவாகவே ஆன்மீகத்தில், சரியை - கிரியை - யோகம் - ஞானம் என நான்கு வித முறைகள் உண்டு. இந்த நான்கு வழிகளில் ஒவ்வொன்றையும் பின்பற்றி இறைவனோடும் சீவனோடும் சிவனாகி போனவர்களே, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வர்கள்.

சரியை என்ற முதல்நிலையில், தன் உடல் உழைப்பினால் செய்யப்படும் பூசை போன்ற செயல்களாகும். இதற்கு அடுத்துள்ள கிரியை என்பது, குரு உபதேசம் பெற்று மந்திரங்களால் இறைவன தொழுவது. மூன்றாவதாக உள்ள யோகம் என்பது அட்டமான சித்துகளை யோகக்கலையின் மூலமாக வசியப்படுத்தும் வாசி தத்துவம் ஆகும். இந்த வாசி பற்றி சொல்லவே நிறையவே இருக்கிறது. வாசி - சிவா என்ற சொல்லொற்றுமையே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். இறுதியாக உள்ள ஞானம் என்ற நிலையே இறைவனை அடையும் இறுதியான உறுதியான நிலை. ஆனால் அந்நிலையை அடைவது தான் அனைவருக்கும் கடினமாக இருக்கிறது. உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளிலுள்ள சிவனை கடந்து தன்னை உணர்தல் தான் ஞானம். இந்த மூன்று நிலைகளுக்கும் சீர்காழி சிவன் கோவில் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்கே தான் திருமுலைப்பால் என்ற ஞானம் திருஞானசம்பந்தருக்கு இறைவியால் ஊட்டப்பட்டது.

ஹீலர் பாஸ்கர் அடிக்கடி சொல்லும் அவரது குருவில் ஒருவரான பகவத் ஐயா மட்டுமே இந்த ஞானம் அடைவது எத்தனை எளிய விசயமென விளக்கி இருக்கிறார். ஆனால் அந்த ஞானமென்ற நான்காம் நிலையை அடையக்கூட இரண்டாம் நிலையிலுள்ள கிரியை என்ற குருபதேசம் தேவைப்படும்.

சிவம் என்பது ஐம்பூதங்களில் ஆகாயம்; அந்த வெட்டவெளிக்கு உருவமெல்லாம் ஏதுமில்லை. எனவே நம் புருவ மத்தியில் பூட்டி வைத்திருக்கும் இந்த இறைவனை உணர, ஆதியோகி என்ற சிலையோ, தாடி வைத்த, மொட்டை அடித்த, காவியோ - பச்சையோ - வெள்ளையோ அணிந்த எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை. இதையேத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றைக்கே வள்ளுவர், "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என சொல்லிவிட்டார். ஆனால் அப்படி சொன்ன ஞானிக்கே தாடியை கொடுத்த சமூகம் இது.

ஒருவகையில் பாம்பாட்டி சித்தர் கூட அந்த ஆதி சிவனின் அடையாளம் தான். இவரிடம் வெட்டவெளி தத்துவமும் உண்டு; சிவனின் கழுத்திலுள்ள பாம்பும் இவரிடம் உண்டு. வாசி என்ற யோக நிலையும் இவரிடம் உண்டு. இவரும் என் பார்வையில் ஆதி யோகி தான். அனைத்து சித்தர்களையும் பற்றி விரிவாக பதிவாக்கிய போகர் கூட, "சொல்வதென்றால் பாம்பாட்டி மர்மம் தானே" என அரைகுறையாக முடிக்கிறார். அப்படிப்பட்ட பாம்பாட்டி சித்தர், துவாரகை - மருதமலை - சங்கன் கோவில் - விருத்தாச்சலம் என பல இடங்களில் சமாதியாகி கடைசியாக ஆதிசிவனாக ஐக்கியமானது நாகை மாவட்டத்திலுள்ள (காசியை விட வீசம் அதிகமென சிறப்புப்பெற்ற) ஆதி திருக்கடவூர் திருமயானத்தில் தான். வாய்ப்புள்ளவர்கள் திருக்கடையூரிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஆதியோகியை வணங்கி செல்லுங்கள்.

(பாம்பாட்டி சித்தர் பீடம் - திருக்கடவூர் மயானம், நாகை)

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

09 ஜனவரி 2017

ஹிந்திய நாட்டிற்குள் அழித்தொழிக்கப்படும் தமிழ் பண்பாடு!

தமிழர்களின் தேசியத்திருவிழாவான பொங்கல் திருநாளை, கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து ஹிந்திய அரசு நீக்கியுள்ளது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி. இதற்கு மேலுமா அவமானப்படுத்த வேண்டும்? ஏற்கனவே பல அடிகளை கொடுத்தீங்க. நாங்க என்ன திருப்பி அடித்தாமோ என்ன? எங்களையே ஏன் ஜி அடிக்கிறீங்க? நாங்க ஜெயலலிதா செருப்புக்கு மாற்றாக, தீபாவின் செருப்பா? சசிகலாவின் செருப்பா? என பரபரப்பாக தேடிக்கிட்டு இருக்கும் போது, நீங்க வேற ஏன் ஜி இப்படி பண்றீங்க?

மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள்; அதில் பி.ஜே.பி.தான் பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒருமித்து குரல்கொடுக்கும் போது, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்குவதாக அறிவித்து இம்முறையும் மக்களை மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், 100 பேருக்கும் மேலான தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி காரணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்தா புயலால் தமிழக தலைநகரமே பாதிக்கப்பட்டு வறட்சி/புயல் நிவாரணம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பல கோடிகளை ஒதுக்கி இருக்கிறது மோடி சர்க்கார்.

கன்னடத்திற்கு ஆதரவாக காவிரி ஆணையம் தேவையில்லையென சொல்லிவிட்டு, கெளதமியை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடியால், தமிழ்நாட்டு விவசாயிகளையோ, எம்.பி.க்களையோ சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் போனதுதான் ஆச்சர்யம். கடைசியாக காவிரி பிரச்சனையின் போது, தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தி, தமிழ் இளைஞனை கட்டி உதைத்து, பலரது உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய கன்னட வெறியர்களை பற்றி வாய் திறக்காமல், தமிழர்கள் அத்துமீறி வன்முறை செய்கிறார்கள் என்று சொல்லி, தொடர்ச்சியாக தமிழர் விரோத இனவெறி அரசியலை செய்யும் மோடி சர்க்கார், கனவிலும் கூட ஆட்சி அதிகாரத்திற்கு இனியொரு போதும் வந்துவிட கூடாது என இறைவனை வேண்டுகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்கு கேட்டு, பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஹோலி, ராம நவமி, தசரா, மகாசிவராத்திரி, மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, ஹனுமந்த் ஜெயந்தி... இதெல்லாம் ஹிந்திய சட்ட விதிகளின் படி ஒருவகையில் ஹிந்து பண்டிகைகள் தான். எனக்கு ஐயனார் குல தெய்வம்; நானும் ஹிந்து. நீ கடவுள் மறுப்பாளர்; ஆனாலும் நீ ஹிந்து. வாழ்க ஹிந்துத்துவா! வல்லபாய் படேலாலும், இராணுவத்தாலும் கட்டாயப்படுத்தி ஹிந்தியா எனும் கூட்டாட்சி நாட்டில் எங்கள் தமிழ்நாட்டை இணைத்ததையும் ரத்து செய்ய முன்வாருங்கள் வட ஹிந்தியர்களே!

பிஜேபியையோ, நரேந்திர மோடியையோ, போலி ஹிந்துத்வாவையோ பற்றி விமர்சிப்பவரெல்லாம் ஈ.வெ.ரா. ஆட்களென்றோ, இசுலாமிய ஆட்களென்றோ நினைக்கும் பக்தாள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்மீகத்தை பற்றியோ, ஆண்டவன் பற்றியோ ஏதுமறியாமல் அரைகுறை அறிவோடு, நாங்கள் ஹிந்து, நாங்கள் காவியென பெருமை பேசி குருட்டுத்தனமாக ஹிந்திய சர்க்காரின் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

இங்கே தன்னை ஹிந்துயென வெளிக்காட்டிக்கொண்டு பெருமை பேசும் அனைத்து முட்டாள்தனமான வெறியர்களை விடவும், அதிகமான ஆன்மீக ஈடுபாடு எனக்குண்டு. அதை பற்றிய ஓரளவிற்கான தெளிவும் எனக்குண்டு. பிஜேபி என்ற கட்சி ஹிந்துத்வ கட்சி என்பதால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டுமா என்ன? போகிற போக்கை பார்த்தால், பிஜேபி மீது விமர்சனம் வைப்பவர்களெல்லாம் ஹிந்துவே இல்லையென சொல்லி விடுவார்கள் போல. நீங்கள் மட்டுமல்ல, யார் சொன்னாலும் சோ கால்டு ஹிந்து என அடையாளப்படுபவர்களில் 90% பேர் ஹிந்துக்களே இல்லை என்பதே உண்மை.

ஈரான் - மத்திய ஆசியாயென பல்வேறு பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதம் ஹிந்துவாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் ஏகபோக உரிமையாளராக, கோவில் கருவறையின் முதலாளிகளான பார்பனர்களே உள்ளனர் என்பது தெரிந்த பின்னாலும், சிந்து நதிக்கரையில் வந்தேறிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட மதத்தை தூக்கி பிடிப்பது ஏன்?

”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.”

- சிவ வாக்கியர் (14)

“கோயிலாவது ஏதடா குளங்கலாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே”

- சிவ வாக்கியர் (35)

”இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!”

- சிவ வாக்கியர் (38)

”காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே”

- சிவ வாக்கியர் (132)

”மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா”

- சிவ வாக்கியர் (136)

வள்ளலார் உள்பட சித்தர்கள் அனைவரும் கண்டுணர்ந்த மெய்ஞானத்தை விட இங்குள்ள ஹிந்துத்வா பேசும் அறிவுஜீவிகள் நிறையவே உணர்ந்து தெளிந்தவர்களென நினைக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

05 செப்டம்பர் 2016

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!"

- திருமூலர், திருமந்திரம்.

கோவில்கள் நிறைந்த ஊரென்றால் கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை என பல்வேறுவிதமாக சொல்லப்பட்டாலும், நாகப்பட்டினத்திற்கும் கோவில்களுக்கும் அதிக தொடர்புண்டு. கிருத்துவர்களுக்கான வேளாங்கன்னி (வேல்நெடுங்கன்னி - சிக்கல் முருகன் கோவிலிலுள்ள அம்மனின் பெயர்) தேவாலயமும், இசுலாமியர்களுக்கான நாகூர் தர்காவும், நாகைக்கு உட்பட்ட 10 மைல் தொலைவிற்குள்ளாகவே இருக்கின்றன; இந்த ஒரு செய்தியே போதும், நாகப்பட்டினம் என்ற இந்த பழம்பெரும் நகரத்தின் ஆன்மீக சமத்துவ அடையாளத்தை புரிந்துகொள்ள முடியும்.

சோழர், பாண்டியர், பல்லவர் கலை நயம் மட்டுமில்லாத போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் சீர்படுத்திக்கொடுத்த மலைக்கோவில், அகத்தியர் வழிப்பட்ட கோவில், யாளி பலிபீட வாகனமாய் இருக்கும் கோவிலெனெ புகழ் பெற்ற 12 சிவன்கோவில்கள் நாகையில் உண்டு. கோரக்கர், அழுகணி, ராமதேவர், சட்டமுனி, மாங்கொட்டை சித்தர் என பல ஜீவசமாதிகள் நாகையில் உண்டு. காசியில் இராமதேவரால் கண்டெடுக்கப்பட்ட சட்டநாதர் சிலையை மூலவராக கொண்ட சிவன் கோவிலும் நாகையில் உண்டு. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போல, நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகனேஸ்வர சிவன் கோவிலும் நாகையில் உண்டு. இதே காயாரோகணேஸ்வரர் கோவில் குஜராத்திலும் உண்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு கேது நிவர்த்தி தலமாகவும், நாகை/நாகூர் என பெயர் வர காரணமான நாகநாதர் கோவில்களும் இரண்டு உண்டு. மேலும், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயன்மார் அவதரித்த மீனவ நகரம் இது.

சிவபுரி, ராஜ்தானி, நாகை காரோணம், திருநாகை, குலசேகரவல்லிப்பட்டினம், நாகப்பட்டினம் என பல புராதன பெயர்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரம். நாவலந்தீவு, நாகர் வாழ்ந்த நகரம் என பல வரலாற்று கூறுகள் இம்மண்ணிற்கு உண்டு. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு அம்மன் கோவிலோ அல்லது விநாயகர் கோவிலோ என பலதரப்பட்ட கோவில்கள் இல்லாத தெருக்களே இங்கு கிடையாது. 108 திவ்ய தேசங்களென சொல்லப்படும் வைணவக்கோவில்களில் ஒன்றான செளந்தரராஜ பெருமாள் கோவிலும் இங்கு ரொம்பவே விசேசம். புரட்டாசி மாதம் அந்த கோவில் பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதும்; பெருமாள் கோவிலின் அருகே இருக்கும் தெருக்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும்.

முச்சந்தி மாரியம்மன், முச்சந்தி காளியம்மன் என பல அம்மன் கோவில்கள் இருந்தாலும், நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலே பிரசித்தி பெற்ற கோவில்; வருடம் தோறும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும்; இங்கே செடில் என்ற குழந்தைகளை வைத்து சுற்று மரத்தின் மீது வைத்து சுற்றி நிவர்த்திக்கடன் செய்வது முக்கிய நிகழ்வாகும். மேலும், முச்சந்தி விநாயகர், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர் என 20க்கும் மேற்பட்ட பிள்ளையார் கோவில்களும் உண்டு. வருடந்தோறும் 'சக்தி விநாயகர் குழு' என்ற அமைப்பு மூலம் சுற்று வட்டார ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான விநாயகர்கள் தனித்தனி வாகனத்தில் நாகையிலிருந்து நாகூர் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது விசேசமான நிகழ்வாகும். மேலும், 'விஸ்வரூப விநாயகர் குழு' மூலம் 32 அடியுள்ள பிரமாண்ட விநாயகர் உருவ ஊர்வலத்தை காண, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் நாகை நகரமே விழாக்கோலம் பூணும். அப்படிப்பட்ட இந்நாளில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

04 செப்டம்பர் 2016

இங்கே யார் புனிதர்?

புனிதர் பட்டம் யாருக்கு? எதனடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? இறந்தவர்களுக்கு (மட்டுமே) கொடுக்கப்படும் புனிதர் பட்டத்தின் பின்புலத்திலும் சில விதிமுறைகள் இருப்பதாக வாடிகன் தலைமையகம் சொல்லலாம். அதிலும், ரோமன் கத்தோலிக் கிருஸ்துவர் அல்லாத வேறு கிருஸ்துவர்களுக்கு இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. இறந்தபின்னால் ஓரிரு அற்புதங்கள் செய்யும் ஒருவருக்கே புனிதர் பட்டம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால், தமிழர்களின் குலதெய்வ வழிபாடான ஐயனார் போன்ற நாட்டார் வழிபாட்டுமுறையில் எத்தனையோ அற்புதங்கள் காலம்காலமாக நடைப்பெற்று கொண்டே இருக்கின்றன; அத்தகைய அற்புத நிகழ்வுகளுக்கு தொடர்புடைய பூசாரிகளும், சாமியாடிகளும், குறிசொல்லிகளும் கூட வாடிகன் விதிமுறைப்படி புனிதர்கள் தான்... நாம் தான் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுப்பதில்லை.

அன்னை தெரசா, அவர் வாழ்ந்த காலத்திலேயே புனிதர் தான்; அதில் எவ்வித மாற்றுகருத்தும் இல்லை. ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், ஏழை மக்களுக்காக அவர் எவ்வளவோ சேவை செய்த போதும், இந்தியாவில் கொண்டு வந்த 'மதமாற்றம் தடை சட்ட'த்தை எதிர்த்தார் என்ற ஒற்றை செயல்பாடு தான் அவர் மீதான பிம்பத்தை உடைக்கிறது. மதம் கடந்த மனிதாபிமான சேவை செய்யும் போதுதானே ஒருவர், புனிதர் ஆக முடியுமென்ற கேள்வியும் அனைவருக்குள்ளும் எழக்கூடும். கடந்தகாலம் எப்படியோ?! ஆனால், 1997ல் உயிரிழந்த அன்னை தெரசாவிற்கு 19 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கிய வாடிகனை விட, அவர் உயிரோடு இருக்கும் போதே இந்திய கூட்டாட்சி நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை 1980ம் ஆண்டே வழங்கி இருக்கும் இம்மண்ணின் பண்பு போற்றதக்கது.

மதம் கடந்து மனிதம் மலரட்டும்!

- இரா.ச. இமலாதித்தன்

25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

02 ஆகஸ்ட் 2016

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்

07 ஜூலை 2016

மருதுபாண்டியர்களின் பள்ளிவாசல்!


1780 முதல் 1801ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், நரிக்குடி-முக்குளத்தில் கட்டியெழுப்பிய "ஜமால் அவுலியா" என்ற பள்ளிவாசல்!

12 ஜூன் 2016

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது போல, நம்முள்ளுள்ள உள்ளொளியும் கடவுள் தான்; அந்த கடவுளே சிற்றம்பலம். இதை புரிந்தாலே பரம்பொருள் ரகசியம் எளிதாக நம் சிற்றறிவுக்கு அம்பலமாகி விடும். அதன் பின்னால், அந்த அருட்பெரும் ஜோதியோடு உறவாடி, நாமே கடவுளாகலாம்.

தாய்மொழியில், தமிழ்மொழியால் உரையாட தெரியாதவன் கடவுளாகவே இருக்க முடியாது; அவனை கடவுளென சொல்ல தகுதியுமில்லை; அவன் கடவுளாக இருக்க வாய்ப்புமில்லை. எனவே, சிற்றம்பலமும் - பேரம்பலமும் உறவாடும் போது, அங்கே அரபியோ, ஹீப்ருவோ, சமகிருதமோ எதுவும் தேவையில்லை. ஏனெனில் கடவுளுக்கென மொழியுமில்லை; கடவுளை தொடர்பு கொள்ள மொழியும் தேவையில்லை. "அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு" என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, பொருளோடு அருளையும் சேர்த்து பேரம்பலத்தானோடு சரணாகதியடைந்து, நீங்களும் கடவுளோடு கடவுளாக ஐக்கியமாகுங்கள். இறைத்தூதர் என்ற யாரையும் கடவுளாக்கி கடைசி வரையில் கடைக்கோடியிலேயே காலம் தள்ளாதீர்கள்.

- இரா.ச. இமலாதித்தன்