04 செப்டம்பர் 2016

இங்கே யார் புனிதர்?

புனிதர் பட்டம் யாருக்கு? எதனடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? இறந்தவர்களுக்கு (மட்டுமே) கொடுக்கப்படும் புனிதர் பட்டத்தின் பின்புலத்திலும் சில விதிமுறைகள் இருப்பதாக வாடிகன் தலைமையகம் சொல்லலாம். அதிலும், ரோமன் கத்தோலிக் கிருஸ்துவர் அல்லாத வேறு கிருஸ்துவர்களுக்கு இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. இறந்தபின்னால் ஓரிரு அற்புதங்கள் செய்யும் ஒருவருக்கே புனிதர் பட்டம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால், தமிழர்களின் குலதெய்வ வழிபாடான ஐயனார் போன்ற நாட்டார் வழிபாட்டுமுறையில் எத்தனையோ அற்புதங்கள் காலம்காலமாக நடைப்பெற்று கொண்டே இருக்கின்றன; அத்தகைய அற்புத நிகழ்வுகளுக்கு தொடர்புடைய பூசாரிகளும், சாமியாடிகளும், குறிசொல்லிகளும் கூட வாடிகன் விதிமுறைப்படி புனிதர்கள் தான்... நாம் தான் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுப்பதில்லை.

அன்னை தெரசா, அவர் வாழ்ந்த காலத்திலேயே புனிதர் தான்; அதில் எவ்வித மாற்றுகருத்தும் இல்லை. ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், ஏழை மக்களுக்காக அவர் எவ்வளவோ சேவை செய்த போதும், இந்தியாவில் கொண்டு வந்த 'மதமாற்றம் தடை சட்ட'த்தை எதிர்த்தார் என்ற ஒற்றை செயல்பாடு தான் அவர் மீதான பிம்பத்தை உடைக்கிறது. மதம் கடந்த மனிதாபிமான சேவை செய்யும் போதுதானே ஒருவர், புனிதர் ஆக முடியுமென்ற கேள்வியும் அனைவருக்குள்ளும் எழக்கூடும். கடந்தகாலம் எப்படியோ?! ஆனால், 1997ல் உயிரிழந்த அன்னை தெரசாவிற்கு 19 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கிய வாடிகனை விட, அவர் உயிரோடு இருக்கும் போதே இந்திய கூட்டாட்சி நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை 1980ம் ஆண்டே வழங்கி இருக்கும் இம்மண்ணின் பண்பு போற்றதக்கது.

மதம் கடந்து மனிதம் மலரட்டும்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக