13 செப்டம்பர் 2016

திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!



மகாபலி என்ற அகம்படி குலத்தில் உதித்த மன்னனின் முற்பிறவி, எலியென்பது சமய நம்பிக்கை. முற்பிறவியில், வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டு நாதர் கோவிலுள்ள அணைகின்ற நிலையிலிருந்த விளக்கை எதேச்சையாக தூண்டிவிட்டதால், அடுத்த பிறவியில் மனிதம் போற்றும் மன்னனாக பிறந்ததாக மகாபலியின் முற்பிறவி பற்றிய புராண வரலாறு சொல்லுகிறது. சேர நாட்டை ஆண்ட தமிழ் மன்னனான மாவலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் தன் ஆண்ட மண்ணை காண வருகிறார் என்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக