மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 மே 2019

மதவெறி அரசியல் இம்மண்ணுக்கு தேவையற்றதே!


இசுலாமிய பகுதிகளில் மாற்று மதத்தினர் உள்ளே நுழையவே கூடாதென்ற சட்டம் ஏதும் இருக்கின்றதா என்ன? இசுலாமிய பெண்கள் டிக்டாக் விடியோவை வெளியிடுவதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? தனிப்பட்ட விருப்பத்தில் டிக்டாக் செய்த பெண்களை மதத்தின் அடிப்படையில் கண்டிக்கிறேனெ நினைத்து, மாற்று மதத்தினரை வம்பிழுப்பது சரியே அல்ல. இசுலாமியர்களுக்கு ஜமாத் என்ற கட்டமைப்பு இருப்பதும், பொருளாதார பின்புலம் இருப்பதும், சிறுபான்மை என்ற பெயரில் ஓட்டு வங்கி இருப்பதும் அவர்களது பாதுகாப்புக்கு அரணாக இருக்க வேண்டுமே ஒழிய மாற்று மதத்தினரை இழிவாக நினைப்பதற்காக இருக்க கூடாது.

இந்த நாட்டில் பெரும்பான்மை மதத்தை சேர்ந்த பெரும்பான்மையானவர்களின் சகிப்புத்தன்மையால் தான் சிறுபான்மையினரென சொல்லப்படும் இசுலாமியர்கள் நட்புறவாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றார்கள். அதை அடிப்படைவாத மதவெறியால் சீரழிக்க முற்பட வேண்டாம். அதன் விளைவால் பாதிப்படைய போவது, அப்பாவி இசுலாமியர்களே என்பதை இந்த அடிப்படைவாத மதவெறியர்கள் புரிதல் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற ஹிந்து அமைப்புகளை எதிர்க்கும் இசுலாமியர்களின் எண்ணிக்கையை விட ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம். காரணம், அடிப்படைவாத மதவெறியை யார் செய்தாலும் எதிர்ப்பதே இம்மண்ணின் பண்பாட்டு கூறுகளில் ஒன்று. ஏனெனில் வெறுப்புணர்வை தூண்டும், தான் சார்ந்த மத அமைப்புகளே எதிர்க்கும் நேர்மை ஹிந்துக்களிடம் உண்டு. அந்த நேர்மையையே இசுலாமியர்களிடம் எதிர்பார்க்கிறோம். 'இசுலாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் சிரியா' என்ற ISIS அமைப்பை போல இம்மண்ணிலும் தனித்தனி இசுலாமிக் பஞ்சாயத்துகளை ஒவ்வொரு ஊரிலும் கட்டமைக்கலாமென நினைப்பதை கைவிடுவதே இன்றைய காலத்திற்கு நல்லது.

- இரா.ச. இமலாதித்தன்

18 மார்ச் 2017

மதம் எனும் வெறி!


பகுத்தறிவு என்ற கொள்கைக்காக கடவுளே இல்லையென்று யார் பேசினாலும் எதிர்ப்பு மட்டுமே வரும். ஆனால் ஓர் இசுலாமியன் அதே கடவுள் மறுப்பை பேசினால் கொலையே விழும். இதுதான் அமைதி மார்க்கமா? இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வணங்கும் அனைத்து கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் அனைவரும் விமர்சிக்கலாம்; அந்த கடவுளெல்லாம் இல்லவே இல்லையென வாய்கிழியவும் பேசலாம்; ஆனால் இதுபோல் பலரது நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும் கூட பெரும்பான்மையாக உள்ளவர்கள், வாய் உள்பட அனைத்தையும் மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். அதையே ஓர் இசுலாமியன், கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவெளியில் பேசினால், அவர் சார்ந்த மதவெறியர்களாலேயே வெட்டிக் கொல்லப்படுவார். அதை எதிர்த்து எந்த மாட்டுக்கறி கும்பலோ, தாலியறுக்கும் கழகமோ, பிரியாணி பிரியர்களோ வாய் திறக்க மாட்டார்கள். காரணம், சிறுபான்மை அரசியல்; போலி நடுநிலைவாத அரசியல். த்தூ... இசுலாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும். பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அவர் சார்ந்த அமைப்பு உறுதுணையாக இருக்கட்டும்.

15 ஏப்ரல் 2014

மதவெறி தீவிரவாதம்!

இசுலாமியர்கள் பெரும்பான்மையாகை இருக்கும் ஊருக்குள் வாக்கு சேகரிக்க போனாலே தீவிரவாதிகள் போல கொலைவெறி தாக்குதல் நடத்தும் இசுலாமிய அமைப்புகள், மதவெறி பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள். நேற்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய இசுலாமிய அமைப்புகள் மீது வழக்கு பதியவே தமிழ்நாடு காவல்துறை மறுக்கின்றது; நேற்று முன்தினம்தான் செல்வி ஜெயலலிதா பாஜகவை விமர்சித்து மேடையில் பேசினார். அதனை தொடர்ந்துதான் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது. அப்படியானால் இந்த தாக்குதலுக்கு ஆளுங்கட்சியின் தலையீடும் இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



ஏற்கனவே திரு கருணாநிதி தனது மேடை பேச்சுகளில் இசுலாமிய வாக்குகளை குறிவைத்தே பேசி வருகிறார் என்பது நாடறிந்த விசயம். இப்போது செல்வி ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஜவ்ஹீத் அமைப்பின் வெளியேற்றத்தால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார். இதை தெளிவாக அறிந்துள்ள இசுலாமிய அமைப்புகள் திரு கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட இம்மாதிரியான கொலைவெறி தாக்குதல்களை அச்சமின்றி தொடர்வாகளென தோன்றுகிறது. சிறுபான்மையினர் என்ற ஒற்றை சொல்லை வைத்தே கேவலமானதொரு அரசியலை நிகழ்த்திவரும் கேடுக்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தேசிய கட்சியின் வேட்பாளரையே மதவெறியால் தீவிரவாத தாக்குதலை நடத்தும் இசுலாமிய அமைப்புகள் இன்றைக்கும் சிறுபான்மையினர் தான் என்பதனை மனதில் கொண்டால் நலம். இப்படிப்பட்ட தாக்குதலை சக குடிமகனாக வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒருவேளை இதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தினர் களமிறங்கினால், சொந்த நாட்டிற்குள்ளாகவே இசுலாமிய மத வெறியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என புறக்கணிக்கப்படுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்.