21 ஏப்ரல் 2017

பெருந்தமிழர் பெருமாள்தேவருக்கு புகழ் வணக்கம்!



இன்றைக்கு எத்தனையோ நூல்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்ற அகமுடையார். அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது. இன்றைக்கு அகமுடையாரை தரம் தாழ்த்தி பதிவிடும் நபர்களும் இந்த பெருமாள் தேவரின் எழுத்துகளை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. இதன் மூலமாகவே எழுத்தில் யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

முத்துராமலிங்கத் தேவர் தன் சொத்துகளை பிரித்து பலருக்கும் கொடுத்த போது, அதை ஓர் அறக்கட்டளையாக்க வேண்டுமென மெனக்கெட்டு செயல்படுத்தி காட்டியவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர். அருப்புக்கோட்டையில் இராமுத்தேவரின் மகனாக அவதரித்த இவர், பதிமூன்றாம் வயதிலேயே அரசியலில் காலடி பதித்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1971, 1974ம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடிய அரு.இரா. பெருமாள் தேவர், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசியத்தலைவராகவும் இருந்தார் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விசயம்.

இப்படியான ஆளுமையைக் கொண்டு தேசியக்கட்சியில் பணியாற்றி, எழுத்தாளராகவும், அரசியல் வாதியாகவும், பொதுவுடைமை சித்தாந்தவாதியாகவும், கொள்கை பிடிப்போடு கடைசிவரை திகழ்ந்த ஏ.ஆர்.பெருமாள் தேவரின் 19ம் ஆண்டு நினைவேந்தல் (17.05.1921 - 21.04.1998) இன்று! பெருமைமிகு பெருந்தமிழருக்கு அடியேனின் புகழ் வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக