01 ஜூன் 2015

சூப்பர் ஸ்டார் ரஜினியெனும் ஒரு முதியவரின் கலைச்சேவை!?

சூப்பர் ஸ்டார் லிஸ்ட்லிருந்து தூக்கியெறியப்பட்ட ரஜினியின் இந்த படமும் ஃப்ளாப் ஆனாதான் ஹிரோவாவே நடிக்கிறதை(?) விட்டு தொலைப்பாருன்னு நினைக்கிறேன். திரும்பவும் ஐஸ்வர்யாராய் தான் ஹிரோயினா வேணும்ன்னு அவர் ஆசைப்படலாம். ஆனால் பாவம் ரஞ்சித்! இப்போது தான் நல்ல இயக்குனரென்று திரையுலகில் அடையாளப்பட்டிருக்கிறார். உடனே, ஓடுற குதிரை மேல பந்தயத்தை கட்டிவிட்டார் இந்த ரஜினி. ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழுக்கும் தமிழர்க்கும் இதுவரையிலும் ஒரு மயிரையும் செய்யாத ரஜினி இந்த படத்துல வாங்குற கோடி கணக்கான கருப்பு வெள்ளை சம்பளத்தை மட்டும் ஏழை எளிய மக்களுக்காக கொடுக்க போறார்? பஞ்ச் டயலாக், நூறு பேரை அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ், பேத்தி வயசுல உள்ள பொண்ணோட டூயட், ஐம்பது பேரோட சேர்ந்து ஆடாமாலே ஓர் ஓபனிங் சாங், இறக்குமதி செய்யப்பட்ட ஆறடி உயர வில்லன் என மொக்கையான கமர்சியல் மசாலாவை உருவாக்கி, ரஞ்சித்தின் கதைக்களத்தையே குளறுபடி செய்ய சொல்லிருப்பார் ரஜினி. முருகா! போன ரஜினி படத்துக்கு கேட்டதை தான் இந்த தடவையும் கேட்குறேன், இந்த படமும் அட்டு ப்ளாக் ஆகிடணும்! ஏதாவது பார்த்து பண்ணி விடு.
பவர் ஸ்டாருக்கு கூடத்தான் வயசானாலும் படம் 365 நாள் ஓடுது. அதுக்காக அவரை ரஜினியோட கம்பேர் பண்ண முடியுமா? சீனிவாசன் கோவிச்சிக்க மாட்டாரா என்ன? சூப்பர் ஸ்டார்ங்கிற மட்டும் என்ன மொத்தமா ரஜினிக்கு குத்தகைக்கு விட்டுருக்கா என்ன? மக்கள் திலகம் முதல்வர் ஆனார். நடிகர் திலகம் ஒரு கட்சியின் தலைவரானர். ஒன்னுக்குமே வழியில்லையே இவர்கிட்ட. அப்பறமென்ன பட்டம் மட்டும் வாழுதாக்கும்.

வயசான காலத்துல கலைத்துறையை தனியாளா சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிடே ஏன் தூக்கி சுமக்கணும்.தகுதியான ஆளுங்க வந்த பிறகும் அடம்பிடிக்கலாமா? பட்டத்தை கொடுத்தது மக்கள்.அதை பிடுங்கவும், அதை இன்னொருவருக்கு மாற்றி கொடுப்பதும் மக்களிடம் தான் உள்ளது.நான் மட்டும்தான்னு அடம்பிடிக்க கூடாது

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக