14 ஜூன் 2015

தமிழ் பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் சேகுவேராவை கொண்டாடுகிறது!

ஆதிக்கசாதி என அடையாளப்பட்டும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, தன் சொந்தசாதி பண்ணையார்களையே எதிர்த்து களம்கண்ட அகமுடையார் இனக்குழுவை சார்ந்த வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி போன்ற பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் தான், தன் மொழி, பண்பாடு, கலச்சாரம் பற்றியே தெரியாத வேற்று நாட்டு சே குவேராவை தலையில் தூக்கி வைத்து, சட்டையில் படம் போட்டு கொண்டாடுகிறது! சேவை கொண்டாடுங்கள், அதே சமயம் தன் இனத்தானையும் மறக்காதீர்கள்! சேவின் பிறந்தநாளில் டெல்டா தேவர்களான வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி போன்ற கம்யூனிச மாவீரர்களை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக