14 ஜூன் 2015

முகநூல் முத்துகள்!


எதை சொன்னாலும் சரியான தருணத்தில் அதற்கு தகுதியானவங்க கிட்டத்தான் சொல்லணும். அப்போதான் சொன்னதுக்கு மரியாதை கிடைக்கும்!
- இமலாதித்தவியல்

Conscious Mind - Sub Conscious Mind - Super Conscious Mind என இது மாதிரி எப்படி வகைபடுத்தினாலும், (வெளி - உள் - ஆழ்) மனதை வென்ற உச்சப்பட்ச அறிவுதான் கடவுளாகி விடுகிறது. பரந்து விரிந்த அறிவு, அன்பை கொடுக்கும். அந்த பாரபட்சமற்ற அன்புக்கு அறிவே தேவைப்படாது. அன்பு மட்டுமல்ல அறிவும் கடவுள் தான்!

தன் பெயரை இன்னொருத்தியின் பெயருக்கு பின்னால் வாழ்நாள் முழுதும் போட்டு கொள்வதை பார்த்து ரசிக்கும் தருணம் ஒவ்வோர் ஆண்மகனுக்கும் புனிதமே!

மூடி இல்லாத பேனாவை போல தான் வாழ்வும் அமைகிறது, புரிதல் இல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும்! எனக்கு பென்சில் போதும் முருகா!

சில பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சா ஹஸ்பண்ட் ஆகுறோமோ இல்லையோ, காலம் முழுக்க அசிஸ்டண்ட் ஆய்டுவோம்!

மனசு சொல்றதை கேட்டால் காதலிச்சு கல்யாணம் பண்ண வைக்கும். அறிவு சொல்றதை கேட்டால் கல்யாணம் பண்ணி காதலிக்க வைக்கும்.

மனசுங்கிறது குழந்தை மாதிரி; யார்கிட்ட வேணும்னாலும் சீக்கிரம் போய்டும். அதுனால தான் சம்பந்தமே இல்லாம சிரிக்கும், அழுவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக