13 ஜூன் 2015

தமிழக அரசின் போலி என்கவுண்டர்!

நெல்லையில் ரவுடி கிட்டப்பா என்கவுன்டரில் கொலை!ன்னு ப்ளாஷ் போடுறாய்ங்க. ரவுடின்னு எதை வைத்து முடிவு பண்றாங்கன்னு தெரியல. காவல் நிலையத்தில் இருக்கும் குற்றவாளிகளில் பாதி பேர் தான் குற்றவாளிகள். மிச்சமிருப்பவர்கள் அரசியல் பலமிக்க பதவியில் இருப்பவர்கள். போலிஸ்காரனுக்கு என்கவுன்டர் பண்ணனும் முடிவு பண்ணிட்டா அவன் ரவுடி ஆகுறது இயல்பான ஒன்று தான். ஆனால், நெல்லை உட்பட தென் தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நூற்றுகணக்காக நடந்தேறிய (பள்ளர் - மறவர்) சாதிய கொலைகளை கட்டுப்படுத்த வக்கில்லாமல் மறவர் சாதியை சேர்ந்த ஒருவரை ரவுடி என்ற முகமூடியோடு கொலை செய்து அப்பகுதி மக்களிடம் உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த என்கவுன்டர் பட்டியலில் இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு ரவுடியும் என்கவுன்டர் செய்யப்படலாம். அதுல உன்னிப்பாக பார்த்தீங்கன்னா, அந்த ரவுடி பள்ளர் சாதியை சேர்ந்தவராக இருப்பார். இதுதான் இத்தனை வருட திராவிட அரசின் சாதனை!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக