பைக்ல பின்னாடி பயணிக்கிறவங்களும் ஹெல்மெட் போடணும்ன்னு சட்டம் போடுறதுக்கு
முன்னாடி, தமிழ்நாடெங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஒழுங்க
போடணும். அதுக்கு முன்னாடி குடியும் குடித்தனமாக சாலையோர டாஸ்மாக் வாசலில்
சரக்கு அடிச்சிட்டு எது ப்ரேக்? எது ஆக்சிலேட்டர்?ன்னு தெரியாம வண்டிய ஓட்ட
வக்கிறவனை ஊக்கப்படுத்தும் டாஸ்மாக்கை இழுத்து மூடணும். அதையெல்லாம் செய்த
பிறகு அரசாங்க சம்பளம் வாங்கியும், நூறு ரூபா இருக்கா? இருநூறு ரூபா
இருக்கா?ன்னு காக்கி உடையில் பிச்சையெடுக்கும் கயவர்களை கண்டிக்கணும்.
அதுக்கெல்லாம் வக்கில்லாமல் சாலை விபத்தை தடுக்கிறோம்ன்னு குடிமக்கள் மேல
நீங்க அக்கறை வைக்கிற உங்க புத்தியை த்தூ ன்னு துப்பத்தான் தோணுது. தேர்தல்
நிதிக்கு, எந்த ஹெல்மெட் கம்பெனி காரன் சிக்கினான்னு தெரியல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக