03 ஜூன் 2015

மு.க. 92 !

இன்னும் கூட மிகப்பெரிய வளர்ச்சியடையாத திருக்குவளை போன்ற ஒரு கிராமத்திலிருந்து சென்று, இத்தனை சாதனை செய்த ஒரு காரணமே போதும் திரு.கருணாநிதியின் திறமையை உணர. மஞ்சப்பையோடு திருட்டு ரயிலிலில் வந்ததாக திரு.கருணாநிதி அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் கூட, அப்படி மஞ்சப்பையோடு வந்த எத்தனை பேர் இதுவரையிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கின்றனர் என்பதை யோசித்தாலே தெரியும் அவரின் வெற்றியின் தன்மையை. பார்பன - ஆரிய சக்திகள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், வெகுஜன சாமானியனாக ஒரு கட்சியின் தலைமைக்கு வந்து, அதை தொடர்ந்து தக்க வைப்பதும் அவ்வளவு எளிதான செயல் கிடையாது. சாமானியனும் சரித்திரத்தில் இடம்பெற முடியுமென்ற சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை போலவே, எந்தவித அரசியல்/சாதிய/வாரிசு/நட்சத்திர பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியல் சரித்திரத்தில் நீக்கமுடியாத அளவுக்கு நிரந்தரமாய் இடம்பிடித்த திரு.கருணாநிதிக்கு, சக நாகை மாவட்டத்துக்கு காரனாய் என் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக