16 பிப்ரவரி 2015

வருங்கால முதல்வர் வளர்மதி!

ஜெயலலிதாவை விட 46,233 வாக்குகள் அதிகம் பெற்று, ஜெயலலிதாவை விட 55,027க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருவரங்கத்தில் வெற்றி பெற்றுள்ள வளர்மதிக்கு வாழ்த்துகள்! வரபோகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000/-ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால் தான் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி நிச்சயம் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. ஒரு கழுதையை வேட்பாளாராக்கினாலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் ராஜதந்திரம் பணத்திற்கு உண்டு என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

2011 சட்டசபைத் தேர்தல்:

ஜெயலலிதா (அ.இ.அ.தி.மு.க) 1,05,328 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 63,840 வாக்குகள்
வித்தியாசம் 41,488 வாக்குகள்

2015 இடைத் தேர்தல் :

வளர்மதி (அ.இ.அ.தி.மு.க) 1,51,561 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 55,046 வாக்குகள்
வித்தியாசம் 96,515 வாக்குகள்

வருங்கால முதல்வர் வளர்மதிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக