29 ஜனவரி 2015

மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை - கோரிக்கை!

 தன்னை சிறையில் அடைத்த வெள்ளைக்காரனிடம் கருணை மனு கொடுத்த விநாயக் தாமோதர சாவர்க்காரை, ஹிந்து மத ஆதரவாளர்கள் வீர சாவர்க்கர் என்று கூட சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், தீவிர சிவ/முருக பக்தர்களான அவர்களின் ஆட்சிக்குட்பட்ட தங்களது மண்ணில் அவர்களின் முழு முயற்சியால கட்டப்பட்ட காளையார்கோவிலின் கோபுரங்களை தகர்த்தெறிவோம் என்ற வெள்ளைக்காரனின் எச்சரிக்கைக்காக தங்களது உயிரையே தந்த மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களை, ஹிந்து மத ஆதரவாளர்கள் புறக்கணிப்பது ஏன்? வீர மருதுபாண்டியர்களை தங்களது அடையாளமாக காட்டிக்கொள்ளும் ஆளும் பா.ஜ.க.வில் இருக்கும் அகமுடையார்கள் யாராவது இதைப்பற்றி என்றைக்காவது யோசித்தது உண்டா? பா.ஜ.க. எப்போதுமே பார்பன சித்தாந்தங்களை உள்ளடக்கிய கட்சி. அகமுடையானுக்கு அதிகாராத்தை கொடுப்பது போல் பாசாங்கு காட்டிக்கொண்டு பார்பானியத்துக்கு அடியாளாக தான் பயன்படுத்தும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏறு தழுவதலுக்கு எதிராக வெளிப்படையாவே பா.ஜ.க. அமைச்சர் மோனிகா காந்தி அறிக்கை விட்டவர் என்பதையெல்லாம் உடனுக்குடன் நாம் மறக்கும் வரையிலும் தமிழ்நாட்டு பண்பாடும், தமிழனின் பாரம்பரியமும் படிப்படியாக சிதைவுறும். ஆனால், தமிழர்களை ஹிந்து என்று கூறி, பார்பனர்களின் விநாயகரை கும்பிட வைப்பார்கள். கடைசியில் நம்முடைய ஆதிக்கடவுளான மாயோனான (பெருமாளையும்) , சேயோனான (முருகனையும்) நம்மிடமிருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள்.
 






கோட்சேவுக்கு சிலை வைக்கணும்ன்னு ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் பார்பன அமைப்புகளின் துணையோடு அறிக்கைவிடும் எவனாவது, தமிழ் மண் காத்த மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்களின் ஆட்சி நடத்தப்பட்ட தலைமையிடமான சிவகங்கை சீமையில் ஒரு சிலை வைக்க மூச்சு விடுவானுங்களா? கேட்டால் நாங்க பா.ஜ,க.ன்னு சொல்லிக்கிட்டே, அந்த பக்கமா அகமுடையார்களின் அடையாளமாகவும் மருதுபாண்டியர்களை காட்டிப்பாய்ங்க. இந்த பக்கம் பார்பானுக்கு ஆதரவாக கொடி புடிச்சு யார்யாருக்கோ சிலையும் வைக்க சொல்லுவாய்ங்க. தமிழ் நாட்டை விட்டு தள்ளி இருக்கிற நரேந்திரமோடியின் மாநிலத்தவரான (டிசம்பர் 15, 1950ல் இறந்த) வல்லபாய் படேலுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தவரான (நவம்பர் 15, 1949ல் இறந்த) பார்பன கோட்சேவுக்கும் மல்லுக்கட்டுற இந்த சாதிக்காரன் எவனும், அக்டோபர் 24, 1801ல் வீர மரணமடைந்த மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை வேணும்ன்னு வாயை கூட திறக்க மாட்டாய்ங்க. இந்த மாதிரி உள்ளுக்குள்ளாகவே ஆதரவு இல்லாத நிலையிலும் சிவகங்கை சீமையில் தன்னெழுச்சியாக மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை எழுப்ப வலியுறுத்தி இன்று போராடிய அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும், சக உறவுக்காரனாய் என் நன்றியும் வாழ்த்துகளும்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக