23 ஜனவரி 2015

நேதாஜி விசயத்தில் பா.ஜ.க.!

தேர்தலுக்கு முன்னாடி ஒன்றை சொல்வது, வெற்றி பெற்றபின் ஒன்றை சொல்வது என வழக்கமான அரசியல்வாதியாக மாற முயற்சிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு துணிவிருந்தால், அவர் தலைமை வகிக்கும் மத்திய சர்க்காரின் வசமுள்ள தேசத்தந்தை நேதாஜியின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடட்டுமே. தேர்தலுக்கு முன்பாக நேதாஜியின் ஆவணங்களை வெளிக்கொண்டு வருவேனென நேதாஜியின் குடும்பத்தினரிடம் மார்தட்டி உறுதிமொழி கூறிய, மோடி அவர்கள் இப்போது மட்டும் ஏன் பின்வாங்குகிறார். மற்ற நாடுகளுக்காக பயந்து, ஒரு தேசத்தந்தையின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களையே வெளியிட அஞ்சும் பாரதம், எப்படி மற்ற நாடுகளுக்கு தலைமையேற்கும் பண்பை வளர்த்து கொள்ள போகிறது? கடைசி வரை அடிமையாகவே வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் நமக்கெல்லாம் எளிதாகிவிட்டது.

Narendra Modi ‪#‎DeclassifyNetajiFiles‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக