09 ஜனவரி 2015

இலங்கையும் ஈழமும்!

"அரசன் அன்றே கொல்வான்;தெய்வம் நின்று கொல்லும்!"ன்னு பழந்தமிழர் சொல்வாங்க. அரசனாக இருந்த மகிந்த ராஜபக்சே ஒரே நாளில் பல்லாயிரம் பேரை போர் என்ற பெயரில் கொன்றான். இனி தெய்வம், தேர்தலில் நின்று தோற்றதினால் கொல்லப்போகிறது. மகிந்த ராஜபக்சேவிற்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்ன நரேந்திர மோடிக்கு இன்னும் அதிக பயிற்சி தேவைப்படும், இனி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் அடிக்கடி வாழ்த்துகள் சொல்ல வேண்டி வரும். ஏனெனில் சீன கம்யூனிஸ்ட் கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து நிகழ்த்தியுள்ள உலக சாதனையை பா.ஜ.க. முறியடிக்கணும்ல...

மகிந்த ராஜபக்சேவோடு சுப்ரமணியசுவாமி நெருக்கமாக இருந்த போதே தெரிஞ்சிடுச்சு, மைத்ரிபால ஸ்ரீசேனாவின் வெற்றி. மேலும், பெளத்த-சிங்களவனை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு வரவழைத்து ஹிந்துவென கூச்சலிட்ட பா.ஜ.க.வினரின் ராஜதந்திரம் தான் இப்போது பல்லிளிக்கிறது. இனி இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கில் பாரத ரத்னாவை மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கு. ஆனால், பாவம் எம் மீனவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக