23 ஜனவரி 2015

ரத்தமும் சுதந்திரமும் தேசபக்தியானதே!

 
ஜனவரி 23ம் தேதியான இதே நாளில் தான் அமெரிக்காவின் பூர்வகுடி மக்களான செவ்விந்தியர்கள் என்றழைக்கப்படும் மண்ணின் மைந்தர்களை பெரும் எண்ணிக்கையில் இனவழிப்பு செய்தது வெள்ளை ஏகாகிபத்தியம். அதே வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாரத சமூகம், அக்டோபர் 2ம் தேதியை மட்டும் ஞாபகமாக வைத்து கொண்டு ஜனவரி 23ம் தேதியை வசதியாக மறந்து விடுகிறது. ”இரத்தத்தை கொடுக்க துணியுங்கள், வெள்ளை ஏகாகிபத்தியத்திடம் அடிமைப்பட்ட தேசத்தை மீட்டெடுத்து சுதந்திரமடைய வைப்போம்!” என்று முழங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடைய பிறந்த நாள் இன்று. வெள்ளை ஏகாதிபத்தியத்தால் செவ்வியந்தர்களின் இரத்தக்கறை படிந்த அதே நாளில் பிறப்பெடுத்த நமது தேசத்தந்தையின் அவதார தினத்தை, தேசிய தேசபக்தி தினமாக அனுசரிப்போம்!

ஜெய்ஹிந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக