11 மார்ச் 2016

வாணாதிராயர்களின் வரலாற்று அழிப்பு!





அகமுடையார் வழித்தோன்றலான வாணாதிராய அரசமரபினர் தமிழகமெங்கும் கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆட்சிக்குட்பட்ட 'வாணாதிராய மதுரை'யே இன்றைக்கு 'மானாமதுரை'யாகி போனது.

மேலும், அழகர்கோவிலை தலைநகரமாக கொண்டு மதுரையையும் ஆண்ட வாணாதிராய அகமுடையார்கள், அழகர்கோவிலைச் சுற்றி 14ம் நூற்றாண்டில் நீண்டதொரு வெளிக்கோட்டையை காவல் அரணாக கட்டினார்கள். பகைவர்களின் தாக்குதலிலிருந்து அழகர்கோவிலை பலமுறை காப்பாற்றிய சிறப்பு வாய்ந்த கோட்டையை, தற்போது பழுதுபார்க்கிறோம் என்ற பெயரில் 'தொல்லியல் துறை' கோட்டைச்சுவர்களின் பழம்பெருமைகளை சிதைத்து கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

ஏற்கனவே, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள கல்வெட்டுகளையும் பழம்பெரும் சிற்ப ஓவிய வேலைப்பாடுகளை யெல்லாம் சீரமைக்கிறோம் என்ற பெயரில் சிமெண்ட் பூசி சிதைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இதுமாதிரியான கோட்டைகளின் பழமைதன்மையையும் பாறை கற்களை பெயர்த்தெடுத்து சிமெண்ட் பூசி சிதைக்கிறார்கள். வரலாற்றை பழைமை மாறாமல் காக்க வக்கில்லாத 'தொல்லியல் துறை' இங்கே இருந்தென்ன லாபம்? என்பதுதான் பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

மேலும், இந்த அழகர் கோவில், பெரும்பான்மையான அகமுடையார்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து:

  1. I am happy to read your blogs. You have given many useful information regarding agamudaiyar. my humble request is that while can you provide scripture texts and also their reference link to support you claim so that people like me can get an in depth information.

    For eg: regarding the above article can you please direct me to the scripture textx or any archaelogical evidences which support that vanathirayar are agamudayar.

    பதிலளிநீக்கு