17 ஜனவரி 2016

தடை போட்டாலும் நாகையில் ஜல்லிக்கட்டு!

எங்க நாகப்பட்டினம் மாவட்டம், தண்ணிலாபாடி என்ற என் மச்சான் ஊருல கூட இந்த வருசம் சல்லிக்கட்டு நடத்தி இருக்காங்க. தண்ணிலாபாடியில் அகமுடையார்களும் - படையாட்சிகளும் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இவர்கள் தவிர பள்ளர்களும் - பறையர்களும் என இந்த நான்கு தமிழ்சாதிகள் மட்டுமே உள்ள அந்த கிராமத்தில், சல்லிக்கட்டுக்காக முறையாக வளர்க்கபடாத 30 முரட்டு காளைகளை ஒரு திடலில் இறக்கி விட்டு இளைஞர்களெல்லாம் அடக்கி வீர விளையாட்டு ஆடியிருக்கிறார்கள்.


இதுவரை எங்களது பகுதியில் இது மாதிரியாக மஞ்சுவிரட்டு நடந்தது கிடையாதென நினைக்கிறேன். ஆனால் PETA போன்ற பீப் அமைப்புகளால் சல்லிக்கட்டே இதுவரை நடக்காத ஊர்களிலும் இம்முறை இவ்விழா நடத்தப்பட்டிருக்கிறது. முறையாக, வாடி வாசல் போன்ற கட்டமைக்கப்பட்ட திடல் எதுவுமில்லாத போதும் தடையை உடைக்க நினைத்திருக்கிறார்கள் என்பது தான் பெருமையான விசயம். தென் தமிழகத்தில் நான்கைந்து பகுதியில் நடைப்பெற்று கொண்டிருந்த சல்லிக்கட்டை, தமிழ்நாடெங்கும் நடைபெற வைத்திருக்கும் சல்லிக்கட்டை எதிர்த்த துரோகிகளுக்கும் - எதிரிகளுக்கும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

மேலும், எங்க நாகப்பட்டினத்திலும் சல்லிக்கட்டு நடந்தது என பெருமைப்பட வைத்து, தண்ணிலாபாடியில் மஞ்சுவிரட்டை நடத்துவதற்காக 30 காளைகளை மாரியம்மன் கோவில் திடலில் கொண்டு வர சொல்லி, உள்ளூர் உறவுக்கார இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விழாவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய, முன்னாள் ஊ.ம.தலைவரான அத்தான் திரு. வி.எஸ்.குமார் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக