10 ஜனவரி 2016

பாண்டியர்கள் - வடுகர்கள்!

பாண்டியர்களின் ஆட்சி அழித்தொழிக்கப்பட்ட பிறகுதான், அந்நியரான வடுகர்களின் ஆட்சி தெற்கில் புதிதாய் உருவெடுத்தது. அதன் பின்னால் தான் பல பாளையங்களும், நிர்வாக கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு நாங்கள் தான் பாண்டியரென தெற்கில் உள்ள அனைத்து சாதிகளும் சொல்ல தொடங்கி, கல்வெட்டு ஆதாரங்களையும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்ட வடுக ஆட்சி அதிகாரத்தின் நீட்சியான, திருமலை நாயக்கருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசுவிழா என ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளதை எதிர்க்காதவன் தமிழனே இல்லை.
பெயருக்கு பின்னால் பாண்டியர் என போட்டுக்கொண்ட அனைவருமே பாண்டியராகி விட முடியாது என்பதை இதுபோன்ற நிகழ்வில் தெரிந்துவிடும். பார்க்கலாம், பாண்டியர் நாங்களென சொல்லிக்கொள்ளும் எத்தனை சாதிகள் இந்த தெலுங்கு நாயக்கருக்கான அரசு விழாவை எதிர்ப்பார்களென!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக