26 ஜனவரி 2016

அகமுடையாராக...

இசைஞானி இளையராஜாவை தமிழ் குடிகளான பறையர்கள், தங்களது சாதியின் அடையாளமாக அடையாளப்படுத்தி பெருமைப்படும் போது வராத கோபம், என் இனக்குழுவான அகமுடையார் உறவுகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பிறப்பால் அகமுடையாரென அடையாளப்படுத்தும் போது மட்டும் சிலருக்கு கோபம் வந்து விடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல; அவரின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்குமாரும் அகமுடையாரென பெருமைப்பட்டு கொள்வோம். தவறில்லையே?!

‪#‎

சொந்த காலில் நிற்க அகமுடையாருக்கு திராணி இருக்கிறது. ஆனால், அகமுடையார் முதுகிலேயே இத்தனை நாட்களாக சவாரி செய்தவர்களுக்கு தான் தனியாக நிற்க முடியாமல் நிலை தடுமாறும். அதனால் தான் மூச்சு தம் கட்டி என்னமோ உளறி கொண்டிருக்கிறார்கள். அனைத்து தமிழ் சாதிகளுடன் இணக்கமாக நட்போடு இருக்க விரும்புகிறோம். ஆனால் முக்குலமென சொல்லி இனியும் முதுகில் சுமப்பதை வெறுக்கிறோம்.

‪#‎

இன்னைக்கு தமிழரல்லாத யாராரோ சூப்பர் ஸ்டாரென போட்டி போட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அன்றைக்கே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகவும், பெருந் தமிழராகவும் வாழ்ந்து மறைந்தவர், எங்கள் திருமிகு. பி.யூ.சின்னப்பா!

‪#

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென 1919ம் ஆண்டிலேயே, அகமுடையார் குலத்தோன்றலான திருமிகு. த.வே.உமாமகேசுவரன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட "கரந்தைத் தமிழ்ச்சங்கம்" தீர்மானத்தை நிறைவேற்றியது.

#

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்! - திருவள்ளுவர்

தனக்கு தீமை செய்யும் பரம எதிரியிடம் உடனுக்குடன் கோபப்படாமல், அந்த எதிரியை வெல்வதற்கான சரியான காலம் வரையிலும் காத்திருந்து அக்கோபத்தை மனதினுள் மறைத்து வைத்திருக்கும் தன்மை அறிவுடையாருக்கு உண்டு. இந்த குறளானது, அறிவுடையாரான அகமுடையாருக்கும் பொருந்தும்.

#

அகம்படி - அகம்படியன் - அகம்படியர் - அகம்படியான் - அகம்படியார் - அகம்படையர் - அகம்படையார் - அகமுடியர் - அகமுடியார் - அகமுடையர் - அகமுடையார் என பல்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பட்ட அகமுடையார் பேரினத்தை, முக்குலம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சில இழிபிறவிகள், குழப்பம் விளைவித்து வருகின்றனர். அகமுடையார் ஒற்றுமையை கண்டு வயிற்றெரிச்சலில் உளறும், அந்த நபர்களால் தான் அகமுடையாரின் ஒற்றுமை மென்மேலும் அதிகரித்தும் வருகிறது.

நய வஞ்சகர்களுக்கு, அகமுடையார் பேரினம் சார்பாக நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக