28 ஜனவரி 2016

பழ.கருப்பையா எனும் அரசியல்வாதி!

எம்.எல்.ஏ.வாக தோற்று விட்டேன்; துறைமுக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர் கருத்து சொல்பவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிர்கருத்து சொல்பவர்களை ஆள் வைத்து அடிப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. எதிர் கருத்துகளை ஏற்க முடியாத கட்சி, காலப்போக்கில் காணாமல் போகும்.

- பழ.கருப்பையா

பழ.கருப்பையாவின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன். பத்திரிகையாளர் சங்கத்தில் அதிமுக அரசின் தவறையெல்லாம் கிழி கிழியென கிழித்து தொங்க போட்டு கொண்டிருக்கிறார். மது, இலவசம், ஊழல், ஜெயலலிதாவின் மறதி, சென்னை துறைமுக பள்ளிகூடத்து சேர்ந்த பல கோடி மதிப்புள்ள வளாகத்தை அபகரித்த அதிமுக நிர்வாகி, உட்கட்சி ஆட்களின் ஊழல்யென பல விசயங்களை மிகவும் வெளிப்படையாக உண்மையையெல்லாம் போட்டு உடைத்து கொண்டிருக்கிறார்.

கிரேட்!

எல்லா ஊடகங்களும் இன்றைக்கு விவாதப்பொருளாக பழ.கருப்பையாவை வைத்திருப்பதே அவருக்கு கிடைத்த வெற்றிதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக