09 டிசம்பர் 2013

அரசியல் பதிவுகளில் சில

ஜெயாடிவியில், வட மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுன்னு மட்டும்தான் சொல்றாய்ங்களே தவிர, தப்பிதவறி கூட பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.

நல்லா வருவீங்கடே

தாமரை மலர்வது நிச்சயம், தேசியம் காப்பது அவசியம்!

--------------------------------------------------------------------------------------------------

காவி ஆண்டால் உனக்கென்ன? மோடி ஆண்டால் உனக்கென்ன? அந்நியர் பிடியில் சிக்கி தவிக்கும் இந்நாட்டை இம்மண்ணின் மைந்தன் ஆளட்டுமே!

தேசியத்தையும் - தெய்வீகத்தையும் காக்கும் தகுதியுள்ள பா.ஜ.க. தான் மத்திய சர்க்காரை ஆள வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்.

--------------------------------------------------------------------------------------------------

டெல்லி தேர்தலில் தேமுதிக மொத்தம் 493 வாக்குகள் வாங்கிருப்பதை ஜெயாடிவி உள்பட இங்குள்ளவர்களும் ஏளனம் செய்து பதிவிடுகின்றார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற திராணி இல்லாதபோதே, பிரதமர் கனவு காணும் ஜெயலலிதாவை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், அவர் டெல்லி முதல்வராக கனவு கண்டு தேர்தல் களம் காணவில்லை. மேலும், வெற்றியை தான் இழந்துள்ளார், களத்தை அல்ல!

தோற்போம் என தெரிந்த பின்பும், தனது கட்சியையும், கட்சி சின்னத்தையும், தன்னையும் டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த திரு. விஜய்காந்தின் துணிச்சலை பாராட்டுகிறேன்.


--------------------------------------------------------------------------------------------------தேசத்தந்தை நேதாஜி போன்ற உண்மையான சுதந்திர போராட்ட மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் - மரியாதையும் - கெளரவமும் வழங்க வக்கற்ற இந்திய (காங்கிரஸ்) அரசாங்கம், இன்னொரு நாட்டின் இன போராளியான நெல்சன் மண்டேலாவுக்காக ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பு யென்ற போலியான விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள திடீர் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு சேகுவேராவை தெரிந்த அளவுக்கு கூட, நேதாஜியின் உண்மையான வரலாறு தெரியாது என்பதுதான் வெட்கக்கேடு.


--------------------------------------------------------------------------------------------------

திசம்பர் 6: தலித் - இசுலாமியர் எழுச்சிநாள்! ன்னு ஊரு முழுக்க திருமாவளவன் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா? விடுதலைப்புலிகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட தேசியவிலங்கான சிறுத்தையின் பெயரை வைத்து ஈழம் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் உங்களது லட்சணம் ஊருக்கே தெரியும் போது, ஏனோ புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டும் இன்னும் தெளிவாக தெரியவில்லையே.

அங்கே ஈழத்தில் பலநூறு இந்து கோவில்களையும், கிருஸ்துவ தேவலாயங்களையும் தரைமட்டமாக இடித்தொழித்தார்களே, அந்த சிங்களவனின் எழுச்சியை அடக்க என்ன செய்தீர்கள் என்பதை சற்று சுயநினைவோடு சிந்தித்துவிட்டு, இந்த எழுச்சி என்பதை பற்றி இங்கே பேசலாமே!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக