31 டிசம்பர் 2013

புது ஆண்டு புகுதல்

2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.

எனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவருட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்!


என்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக