01 ஜனவரி 2014

போலீஸ் விசாரணையில் ஆட்டோ டிரைவர் பலி


நாகப்பட்டினத்தில் புத்தாண்டு ஆரம்பத்திலேயே காவல்துறை தனது பணியை செவ்வனே செய்திருக்கிறது. குடிபோதையில் தகராறு என்று சொல்லி நேற்றிரவு (டிசம்பர் 31) விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்து, ஆட்டோ டிரைவரை அடித்தே கொலை செய்துவிட்டது காவல்துறை. ஓர் உயிரை கொல்லும் உரிமையை யார் தந்தது இவர்களுக்கு? மக்களை பாதுகாக்க தானே காவல்துறை? அப்பாவியை அடித்து துன்புறுத்தவும், பயமுறுத்தவும் தான் காவல்துறையா? ஒருவன் குற்றமே செய்தாலும் கூட, அந்த குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றம் தானே வழங்கவேண்டும்? இப்படியான ஆதிக்க மனபோக்கை காவலர்களுக்கு தந்தது யார்? தமிழ்நாட்டின் காவல்துறையின் அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் தமிழக முதலவர் ஜெயலலிதா, இதற்கு என்ன சொல்ல போகிறார்? வழக்கம்போல லட்சம் ரூபாய் நிவாரணத்தை கொடுத்து சம்பந்தபட்டவர்களை வாயடைக்க போகிறாரா? காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்க யாருமே இல்லையா? நாகை மருத்துவமனை வாசலில் இப்போது வரை ஆட்டோ தொழிற்சங்கத்தின் மூலமாகவும், நாகை வட்டார ஆட்டோ ஓட்டுனர்களாலும், காவல்துறையை கண்டித்து சாலை மறியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரையிலும் எந்த (நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி) ஊடகமும் இந்த கொலை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக