08 ஜனவரி 2014

அமாவாசைக்கும் அப்துல்லாக்கும் என்ன சம்பந்தம்?

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்: உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- வினவு செய்தி

தில்லை நடராச கோவில் தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை பாராட்டுகிறேன். இதை பாரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்க வேண்டும். ஆனால், என் சந்தேகம், ஏன் இந்த போராட்டத்தை ஈ.வெ.ரா சிலைக்கு முன்பாக வைத்தார்கள் என்பதுதான்... ஆன்மீக உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டத்தில், கடவுளே இல்லையென்று சொன்ன ஈ.வெ.ரா.வின் சிலைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் சரியானதாக படவில்லை. தேசியம் உடல்; தெய்வீகம் எனது உயிர்; என்று சொல்லி தன் கடைசிகாலம் வரை ஆன்மீகபற்றுள்ள தேசிய அரசியல் தலைவரான ஸ்ரீ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யென்ற மாபெரும் தமிழரின் சிலைக்கு முன்பாக நடத்திருந்திருக்கலாம். இல்லையென்றால், ஸ்ரீ பரமஹம்ச விவேகானந்தர் சிலைக்கு முன்பாக இப்போராட்டத்தை நடத்தி இருக்கலாமே? அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்;ன்னு சொன்ன ஈ.வெ.ராவின் சிலைக்கு முன்னால் நடத்திய இந்த போராட்டம், ஒரு குறிப்பிட்ட சாதீய பின்புலத்தைத்தானே உருவாக்க முயல்கிறது. கடவுளே இல்லைன்னு சொல்றவங்களுக்கு, எவன் பூஜை பண்ணினால் என்ன? என்று தானே கேட்கத்தோணும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக