நிறம்
அழகை தருவதில்லை; ஏனெனில் எத்தனையோ சிவப்பான பெண்களை இதுநாள் வரை
கடந்திருக்கின்றேன். ஆனால் அவர்களில் பலர் அழகில் குறைவாகவே
இருந்திருக்கிறார்கள். அழகுக்கு நிறம் தேவையேயில்லை; ஏனெனில், எத்தனையோ
கருப்பான பெண்களை இன்றைக்கு வரைக்கும் கடந்து வந்திருக்கின்றேன். அதில்
பெரும்பாலானோர் அழகில் என்னை மிகவும் கவர்ந்தவராகவே இருந்திருக்கின்றனர்.
சிவப்போ - மாநிறமோ - கருப்போ இவையெல்லாம் வெறும் நிறம் மட்டும் தான்.
கண்டிப்பாக ஒருபோதும் இவை அழகை தரவதில்லை. பள்ளி பருவம் முதல் சிவப்பை விட
கருப்பான பெண்களைத்தான் பிடிக்கும் என்பதுதான் என்னோட தனிப்பட்ட
விருப்பமும் கூட!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக