21 நவம்பர் 2013

மூவேந்தரும் அகமுடையாரே!


மூவேந்தர்ன்னு சொல்லிக்கொள்ளும் தகுதி, மற்ற சாதிகளை விட அகமுடையாருக்கு அதிகம் உண்டு. ஏனெனில், ஓவ்வொரு நாட்டிலும் படையமைத்து அரசாண்ட இனத்தின் வம்சவாளிகள் அந்தெந்த ஊரிலேயே பல அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழ்வதுதான் நியதி. அப்படிப்பார்த்தால், சோழநாடு - பாண்டிய நாடு - சேரகொங்கு நாடு என எல்லா நாட்டிலும் (ஊரு விட்டு ஊரு இடம்பெயராமல்) பூர்வக்குடியாய் - சமூகத்தில் மேல்தட்டு மக்களாய் - வீரம்செறிந்த மக்களாய் - மற்றவர்கள் மதிக்கும்படி அந்தஸ்துமிக்க பெரிய கூட்டமாய், அப்போது முதல் இந்நாள் வரை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது அகமுடையார் இனம் மட்டுமே. தெற்கு மட்டுமல்ல, வடக்கு - மேற்கு - கிழக்கு - நடு யென்று எல்லா திசையிலும் அகமுடையார் மட்டுமே பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட சிந்திக்க கூடிய விசயமே...
(பிரபு - பாரதி - குமார் என்கவுண்டர் கொலையை எதிர்த்து) அகமுடையார்களுக்கு என்று தனி அமைப்பு பேரவை இருக்கிறதே அவர்கள் போராடினார்களா? யென்று முக்குலத்து உறவு ஒருவர் கேட்கிறார்.

ஓ! அப்போ அகமுடையாருக்கு அமைப்பு இருந்தால், அகமுடையார் மட்டும் தான் போரடணுமா என்ன? அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம்? செத்தவன் அகமுடையனாக இருந்தால், அகமுடையார் அமைப்பு மட்டும்தான் போராடணும்ன்னு நினைக்கிறப்பவே உங்க நோக்கம் புரியுது.
காளையார்கோவிலில் நடைப்பெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலில் நடைப்பெற்ற கசப்பான ஒரு நிகழ்வால், பிரபு - பாரதி - குமார் யென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையே என்கவுண்டர் மூலம் கொலை செய்ததை எதிர்த்து இதுவரை யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது? எங்க ஊருல டெல்டா மாவட்டத்துல தேவன்னா யாருன்னு விசாரிச்சா தெரியும் அது அகமுடையார் தான்னு.

வருகின்ற 30ம் தேதி பிரபு - பாரதி கொல்லப்பட்ட தினம்
மூன்று கொலைகளைப் பற்றி மூச்சு பேச்சு இல்லாமல் முடங்கி கிடந்த கூட்டமெல்லாம், இன்றைக்கு மூன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. மூன்று மூன்றுன்னு பேசுற எவனாவது இதுவரைக்கும் அந்த கொலைகளுக்காக போராடி இருக்கானா? இல்லையே! ஏன்னா, அவனுக்கு இவன் கூட்டம் காமிக்க மட்டும்தான் தேவைப்படுறான். அந்த மூன்று கொலைகளுக்காக போராட கூட ஒருத்தன் வரமாட்றான். ஒருவேளை அப்படி அந்த மூன்று பேருக்காக சம்பந்தப்பட்ட ஒருத்தனான இவன் போராட முன்வந்தாலும் அவனை பிரிவினைவாதி யென்ற பட்டம் கொடுத்து ஒதுக்கிவிட நினைக்கிறதே ஒரு கூட்டம். அந்த மூன்று கொலைகளுக்கு எதிராக எந்த முன்முயற்சியும் எடுக்காத மற்ற இரண்டும், பிரிவினை பற்றி பேச அறுகதை அற்ற ஜெனமங்களே!


தன்னை தரக்குறைவாக பேசி கேவலப்படுத்த நினைக்கின்ற மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை விட, தன்னைப்பற்றிய உயர்வான விசயங்களை முன்வைத்து பேசுவதுதான் நம்மை பக்குவப்படுத்தும். அப்போது எதிரிகளைவிட துரோகிகளுக்கு தான் அதிகமாக கோபம் வரும்! தனித்துவமானவர்களை என்றைக்குமே தனிமைப்படுத்த முடியாது!

நான் அகமுடையார்ன்னு சொல்வதலோ, அகமுடையார் பற்றிய பதிவை பதிவதலோ, உங்களுக்குள் ஏற்படும் மனச்சங்கடங்களை பற்றி எனக்கு கவலையில்லை. மரியாதைக் குறைவான சில பதிவுகளால் அகமுடையார்களை கேவலப்படுத்த முயலும் துரோகிகளுக்கு, பதிலுக்கு பதில் கேவலமாக எழுத எனக்கு மனமில்லை. ஆனால், அகமுடையார் சார்ந்த விசயங்களையும், எனக்கு தெரிந்தவற்றையும் இங்கே நேரம் கிடைக்கும் போது பகிரலாமென்று இருக்கிறேன். அகமுடையார் பற்றிய பதிவுகளையே சகித்துக்கொள்ள முடியாதவன் முக்குலத்தோர் என்று சொல்லவே அறுகதை அற்றவன்! உட்பிரிவுன்னு ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு தனிமைப்படுத்த முயலும் சில சுயசாதிப்பிரிவு பற்றுள்ளவர்களையும் பற்றி எனக்கு கவலையில்லை.

ஏனெனில், நான் அகமுடையாராக இருப்பதால் தான், தேவனாகவும் இருக்க முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத குறைகுடமெல்லாம், உட்பிரிவுயென்று சொல்லிக்கொண்டு போகலாம். எதுவுமிங்கே நிரந்தரமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக