19 நவம்பர் 2013

அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல!

ஒரு வாரமாக உட்பிரிவு உட்பிரிவுன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க. என்னிலிருந்தே இதைப்பற்றிய ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உட்பிரிவு என்பது இல்லவே இல்லை. இந்த உட்பிரிவு என்ற சொல்லாடலை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. மேலும், இந்த உட்பிரிவு என்ற சொல்லுக்கான அர்த்தம் நூறு சதவீதம் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஒவ்வொரு இனக்குழுக்களுக்கென்று தனித்தனியான ஒரு பாரம்பரியமும் - அடையாளங்களும் - சடங்கு முறைகளும் இருந்தபோதிலும், போர்க்குடி என்ற ஒற்றை அடையாளமே இம்மூவரையும் இணைக்க மூலக்காரணமாக இருக்கிறது.

முதலில் அகமுடையார் என்ற பற்று எனக்கு இருக்கும் பட்சத்தில் தான், அடுத்து முக்குலத்தோர் என்ற வட்டத்திற்குள்ளாகவே என்னால் வர முடியும். மேலும், தன் சுயசாதி மீதான பற்று இல்லாத ஒருவனால், மூன்று சாதிகளின் கூட்டுக்குள் எப்படி நுழைய முடியும்? ஏனெனில் சுயத்தை இழந்து இன்னொன்றை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. மேலும், தன் சுயத்தை இழந்து, இன்னொரு அடையாளத்தை பெறுவது ஒரு நிரந்தரமான அடையாளத்தை தரப்போவதில்லை. இம்மாதரியான பாரம்பரிய அடையாளங்களை இழப்பதும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடக் கூடியதும் இல்லை. அப்படி நடக்க இன்னும் காலம் பிடிக்கலாம். அதுவரையிலும், தன் சுயத்தை இழக்காமல், ஒன்றிணைந்து செயல்படலாம். இதுவேதான் மற்ற இரு பிரிவுகளுக்கும் பொருந்தும்.

தன்னை உயர்த்தி பிடித்து, மற்ற இருவரும் எங்களுக்கு கீழேதானென்றும், நாங்கள் மற்ற இருவரையும் விட சிறந்தவர்களென்றும் சொல்வதும் தான் முதல் பிரச்சனையை உருவாக்குகிறது. நான் என்னதான் தேவன் தேவன்னு பேசினாலும், பலபேருக்கு நான் எப்போதுமே அகமுடையானாக மட்டுமே தெரிகிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் முதலில் அகமுடையானாக பற்றோடு இருக்க முடிந்தால்தான், அடுத்து முக்குலத்தவனாகவும் மாறமுடியும் என்பது என் தீர்க்கமான முடிவு.

இங்கே பலர் ஒருதாய் பிள்ளையென்று ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். அதைப்போன்ற கற்பனை கதைகளுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில், முக்குலம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம்; அதிலும் கூட்டு குடும்பமாகவே வாழலாம். அப்போதும் கூட, முதலில் எனக்கு என்னுடைய தந்தை தான் முக்கியம். அதன் பிறகுதான் சித்தப்பா - பெரியப்பா எல்லோரும் வருவார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமையே இப்போதைய தேவையாக இருக்கிறது. உள்ளொன்று வைத்து புறவொன்று வைத்து செயல்படும் போலியான ஒற்றுமையை விட இப்படி வெளிப்படையாக ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்படுவதுதான் நலமாக இருக்கக்கூடும். எனவே நான் முதலில் அகமுடையான். அதன் பிறகே மற்ற இத்யாதிகள் எல்லாம்.

இதை இங்கே பொதுவில் சொல்வதால், நான் பிரிவினைவாதி ஆக்கப்படலாம். மனதுக்குள்ளாக வைத்து மறைமுகமாக திரைமறைவு வேலைகளை செய்யும் கூட்டத்தை விட, அகத்தில் உள்ளதை அப்படியே புறத்திலும் செயல்வடிவம் காட்டுவதால் எனக்குள் எந்தவித குற்றணர்ச்சியும் எப்போதும் இருக்க போவதில்லை.

மற்றப்படி உங்களது புறக்கணிப்புகளும் - வசைச்சொற்களும் எனக்கு புதிதல்ல. புரிதலுக்கு நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக