14 நவம்பர் 2013

இனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்?



இன்றைக்கு நம்மினத்தவர்கள் பலரை நாம் மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம் வேறொரு சாதியோடு கூட்டணி வைத்ததால்தான் என்பது மற்ற எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் என் கேள்வி,

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தடை மற்றும் ஸ்ரீ தேவர்ஜெயந்தி தடை, முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுசுவர் இடிப்பு, போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூட்டில் பிரபு - பாரதி - குமார்  கொலை, திருநெல்வேலியில் மாமன்னர் பூலித்தேவன் நினைவேந்தலுக்கு தடை, திருநெல்வேலி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்பட பல மாவட்டங்களுக்கு 144 தடை, இதையெல்லாம் செய்வது யார்?

இந்த திராவிட அரசியல் தானே தமிழனையும், தமிழனென்ற அடையாளத்தையும் மறைமுகமாக அழித்து வருகின்றது. சாதி என்றோ தலைவன் என்றோ - எந்தவிதத்திலும் தமிழன் ஒன்றுபட்டுவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும் ஒவ்வொன்றாக சிதைப்பது இந்த இல்லாத திராவிடத்தின் கேவலமான அரசியல் தானே? அந்த தீரா விடமான திராவிடத்தை அழிக்கவும், நம் பண்பாட்டு அடையாளத்தை காக்கவும், எந்த தேவரின அமைப்பு அரசியலில்  நேரடியாக களம் காண முயற்சி எடுத்துள்ளது?

நம் தேவரின அமைப்புகள், இல்லாத திராவிடம் என்ற மாயையை நம்பி, அந்நியர்கள் ஆளுமை நிரம்பிய திராவிட கட்சிகளான திமுகவிடமும் - அதிமுகவிடமும் தேர்தல் சமயத்தில் தஞ்சம் புகுந்தன என்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட திராவிட கட்சிகளிடம் ஓரிரு தொகுதிகளுக்காக தானே, நம் தேவரின அமைப்புகள், நம்முடைய எண்ணிக்கையை காரணம் காட்டி, நம்மையும்  -  நம் வாக்கினையும் - நம் மானத்தினையும் அடகு வைத்திருந்தன.

பெரும்பான்மையான சமூகமாக தேவரினம் இருந்த போதும், ஓரிரு தொகுதிகளுக்காக இன்னமும் திராவிட மயக்கத்தில் இருக்கும் தேவரின அமைப்புகள், தைரியமாக தனித்து தேவரின அரசியல் செய்ய களம் காணவில்லையே ஏன்? தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் - 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எல்லா தொகுதிகளிலும் தனித்து நிற்பது என்பது விழலுக்கு இறைத்து நீர்போல வீண் தான். எனவே, காலமறிந்து - களமறிந்து நிச்சயமாக வெற்றிவாகை சூடக்கூடிய தேவரினத்தவர்கள் அதிகம்வாழும் தொகுதியை தேர்ந்தெடுத்து, தேவரின அமைப்புகள் தேர்தலை சந்திக்கலாமே?

ஏற்கனவே, தேவரின அமைப்புகள் தனித்து நின்று தோல்வியை சந்தித்திருக்கலாம். அது பெரியவிசயமல்லவே. தோல்வியே சந்திக்காமல் அரசியல் நடத்த அனைத்து தேவரின தலைவர்களும், ஸ்ரீ பசும்பொன் முத்துராமலித்தேவர் கிடையாது என்பதுதானே எதார்த்தம். பெயரளவில் மட்டும் அடைமொழியாக "வாழும் தேவர்" யென்று சொல்லி பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர, ஒருபோதும் தேவரைப்போல யாரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், பசும்பொன் ஸ்ரீ தேவருக்கு நிகர் தேவர் மட்டுமே; வேறு யாரும் இதுவரை தோன்றவும் இல்லை, இனி தோன்றப்போவதுமில்லை.

தேர்தலில் தோல்வியை சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை இன்னும் பக்குவடுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் தளர்ச்சியை ஏற்படுத்திவிட கூடாது. தன்னைத்தானே "ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒரே தலைவர்" யென்று பிரகனபடுத்தி கொள்வதில் உள்ள கவனம், தேர்தல் சமயத்திலும் இருக்க வேண்டுமல்லவா?

ஒருவேளை தனியாக அரசியலில் களம் முடியாத பட்சத்தில், வழக்கம்போல அக்டோபர் மாதம் மட்டும் மாமன்னர் மருது பாண்டியர் நினைவேந்தலுக்கும், தேவர் ஜெயந்திக்கும் சிறப்பாக எதையாவது செய்துவிட்டு மற்ற 11 மாதங்களும் ஓய்வெடுத்து விடலாமே. அப்படியும் செய்ய முன்வரவில்லை. அப்பறம் ஏன் தேர்தல் சமயத்தில் மட்டும் ஜெயலலிதாவையோ - கருணாநியையோ சந்திக்க மெனக்கெட்டு கொண்டிருக்கிறீர்கள்?

திராணி இருந்தால், உங்களது சொந்த ஊரை உள்ளடக்கிய ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று வெற்றி பெற முயற்சிக்கலாமே? இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே? என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது? பெரும்பான்மையான ஓட்டுவங்கியை கொண்டுள்ள தேவரினமக்களின் அரசியலை, தேவரின அமைப்புகள் கையில் எடுக்க ஆளுமை இல்லாதவரை திராவிடத்தின் காலில் விழுந்தே கிடக்கவேண்டும் என்பதே நியதி.

தமிழ் சாதிகள் எப்போதுமே ஒன்றுபட்டு விட கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கும் திராவிடத்தை முதலில் வேரறுக்க வேண்டும். தமிழ் சாதிகள் ஒன்றுபட்டு விட்டால், திராவிடம் என்ற மாயை செல்லாக்காசாகி விடும் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், திராவிடத்தை எதிர்ப்போரை, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் தற்காலிகமாக ஆதரிக்கலாம். பிறகு தேவரின அரசியலில் நம்மை வலுப்படுத்திக்கொண்டு, இரு எதிரிகளோடும் நேரடியாக மோதிப்பார்க்கும் விதமாக, தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். எது வசதி என்பது தேவரின அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டு முட்டிமோதி கிடப்பது ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒற்றுமைக்கு களங்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் எந்தவித பெருமையையும் தந்துவிடாது.

ஏனென்றால், எதிரிகளை விட துரோகிகளாலே வீழ்த்தப்பட்ட இனம் தேவரினம் என்பதற்கு எடுத்துக்காட்டே ஸ்ரீ பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவரும் - மாமன்னர் மருது பாண்டியர்களும் தான் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. எனவே, கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு அரசியல் செய்வோம்! அரசையும் அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக